என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "diploma student"
- கள்ளக்குறிச்சி அருகே டிப்ளமோ படித்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
- வெங்கடேசன் கடந்த 2-ந்தேதி காலை வீட்டிலிருந்து வெளியேறினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் வெங்கடேசன் (வயது 23). இவர் டிப்ளமோ முடித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரது தந்தை கண்ணன் மகன் வெங்கடேசனிடம் படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஏன் வீட்டில் இருக்கிறாய் என கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த வெங்கடேசன் கடந்த 2-ந்தேதி காலை வீட்டிலிருந்து வெளியேறினார். மீண்டும் மாலை வீடு திரும்பியவர் வாந்தி எடுத்துள்ளார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் அவரை விசாரித்த போது எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டதாக கூறினார்.
உடனடியாக வெங்கடேசனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி ஆஸ்ப த்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை வெங்கடேசன் இறந்துவிட்டார். இது குறித்து அவரது தந்தை கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேச்சேரி அருகே டிப்பர் லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற டிப்ளமோ மாணவர் பலியானார். உடன் சென்ற 10-ம் வகுப்பு மாணவன் படுகாயம் அடைந்தான்.
இந்த விபத்து குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
மேச்சேரி அருகே வேங்கானூர் ஆட்டுக்காரன்வளவு பகுதியை சேர்ந்தவர் அருள்குமார் (வயது 19). இவர் மேச்சேரியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கெமிக்கல் பிரிவில் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய உறவினரான மேச்சேரி அருகே கம்மம்பட்டி பகுதியை சேர்ந்த இளங்கோவின் மகன் சந்தீப் (15). இவன் மேச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.
மாணவர்கள் இருவரும் மேச்சேரியில் இருந்து மல்லிகுந்தம் நோக்கி நேற்று முன்தினம் மாலை மோட்டார்சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை அருள்குமார் ஓட்டினார். வெள்ளாளப்பட்டி அருகே சென்ற போது எதிரே வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் இருவரும் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்குமார் இறந்து விட்டார். படுகாயம் அடைந்த மாணவன் சந்தீப், மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
இதுகுறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்