search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Digital Currency"

    • பரோடா வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி. மற்றும் கோட்டக் மகேந்திரா ஆகிய வங்கிகள் டிஜிட்டல் ரூபாயை வெளியிட உள்ளன.
    • ரூ.1, ரூ.2, ரூ5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.2000 மதிப்பிலான டிஜிட்டல் ரூபாய் சோதனை அடிப்படையில் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் தற்போது நாணயங்கள் மற்றும் காகித வடிவத்தில் பணம் புழக்கத்தில் உள்ளது. மாறி வரும் நவீன யுகத்தில் கிரிப்டோ கரன்சியின் பயன்பாடு உலக அளவில் அதிகரித்து வருகிறது.

    மெய்நிகர் நாணயம் என்று அழைக்கப்படும் இந்த கிரிப்டோகரன்சி இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திகழ்கிறது.

    நைஜீரியா, ஜமைக்கா உள்ளிட்ட 10 நாடுகளில் ஏற்கனவே டிஜிட்டல் கரன்சி புழக்கத்தில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இதனை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-2023ம் ஆண்டு பட்ஜெட்டின்போது ரிசர்வ் வங்கி ஆதரவுடன் இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தபடும் என்று அறிவித்து இருந்தார்.

    அதன்படி சில்லரை வர்த்தகத்தில் சோதனை அடிப்படையில் டெல்லி, மும்பை, பெங்களூர், புவனேசுவர் ஆகிய 4 நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் இன்று வெளியானது. முதல் கட்டமாக ஸ்டேட் பாங்க், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, யெஸ் வங்கி, ஐ.டி.எப்.சி. ஆகிய 4 வங்கிகள் இந்த டிஜிட்டல் ரூபாயை வெளியிட்டு உள்ளது.

    இதன் தொடர்ச்சியாக பரோடா வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி. மற்றும் கோட்டக் மகேந்திரா ஆகிய வங்கிகள் டிஜிட்டல் ரூபாயை வெளியிட உள்ளன.

    டிஜிட்டல் நாணயமான இ-ரூபாய் இரண்டு வடிவமைப்பை கொண்டது. முதலாவது டோக்கன் அடிப்படையிலும் 2-வது கணக்கு அடிப்படையிலும் இருக்கும்.

    டோக்கன் முறையிலான டிஜிட்டல் நாணயம் என்பது வங்கியின் ரூபாய் நோட்டு போன்றது. இந்த டோக்கனை வைத்து இருப்பவர்கள் அதன் மதிப்புக்கு உரிமையாளராக இருப்பார்கள். கணக்கு முறையிலான அமைப்பில் டிஜிட்டல் ரூபாய் வைத்து இருப்பவர்கள் இருப்பு மற்றும் பரிவர்த்தனைகளின் பதிவுகளை வைத்து இருக்க வேண்டும்.

    குறிப்பிட்ட வணிக நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் மட்டுமே தற்போது இதனை பயன்படுத்த முடியும். மொபைல் செயலி மூலம் 'இ வால்ட்' உருவாக்கி டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்தலாம்.

    ரூ.1, ரூ.2, ரூ5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.2000 மதிப்பிலான டிஜிட்டல் ரூபாய் சோதனை அடிப்படையில் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளது.

    வெளிநாடுகளில் பணிபுரிந்து டிஜிட்டல் பணமாக சம்பளம் பெறுபவர்கள் இதன் மூலமாக குறைந்த கட்டணத்தில் தங்களது உறவினர்கள் மற்றும் மற்ற நாடுகளில் வசிப்பவர்களுக்கு பணத்தை அனுப்பலாம். அரசின் பங்கு பத்திரங்களுக்கும் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    பரீட்சார்த்த முறையில் வெளியிடப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் ரூபாய் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் பட்சத்தில் சில்லரை வர்த்தக பண பரிமாற்றத்தில் புதிய புரட்சி ஏற்படும்.

    ஏற்கனவே பெட்டிகடை முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை டிஜிட்டல் முறையிலான பணபரிமாற்றத்திற்கு மாறிவிட்டதால் இன்று வெளியிடப்பட்டுள்ள டிஜிட்டல் ரூபாய் பரிமாற்றமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நிதி பரிமாற்றத்திற்காக மோசடி ஆபத்து இல்லாத மெய்நிகர் ரூபாயாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டிஜிட்டல் ரூபாய் மூலம் வருங்காலத்தில் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது போன்ற செலவினங்கள் குறையும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் இதுகுறித்து அவர்கள் கூறும்போது, டிஜிட்டல் ரூபாய் என்பது பிட் காயின், எத்தேரியம் மற்றும் பிற கிரிப்டோ கரன்சிகளில் இருந்து வேறுபட்டதாக இருக்கும். ஏன் என்றால் இது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

    எனவே இதற்கு எப்போதும் மதிப்பு இருக்கும். ஒரு டிஜிட்டல் ரூபாய் என்பது ஒரு ரூபாய்க்கு இணையான மதிப்பையே கொண்டு இருக்கும் என்றனர்.

    4 நகரங்களை தொடர்ந்து விரைவில் அகமதாபாத், கவுகாத்தி, ஐதராபாத், இந்தூர், காங்டாக், கொச்சி, லக்னோ, பாட்னா, சிம்லா ஆகிய 9 நகரங்களில் இந்த முறை விரிவுப்படுத்தப்படும் என ரிசர்வ வங்கி தெரிவித்து உள்ளது.

    ஒரு மாதத்திற்குள் இந்த டிஜிட்டல் ரூபாய் நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.

    • வங்கிகளில் பணத்திற்கு பதிலாக இந்த கரன்சிகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும்.
    • இந்தக் கரன்சியை அனைத்து தரப்பினரும் வணிகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2022-23 பட்ஜெட் உரையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியின் ஆதரவுடன் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார்.

    இதற்கிடையே, குறிப்பிட்ட சில பயன்பாட்டிற்காக சோதனை அடிப்படையில் டிஜிட்டல் ரூபாய் அல்லது இ-ரூபாய் நோட்டுக்களை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

    டிஜிட்டல் ரூபாய் நோட்டுக்கள் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சோதனை முறையில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட உள்ளது என தெரிவித்தது.

    இந்நிலையில், டிஜிட்டல் ரூபாய் வெளியீடு குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது.

    தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாயும் சில்லறைப் பணப் பரிவர்த்தனைகளுக்காக டிசம்பர் 1-ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டிஜிட்டல் முறையில் e₹-R என்ற குறியீடு டிஜிட்டல் ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் ஆகிய நான்கு வங்கிகளில் அறிமுகமாகிறது.

    மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் நகரங்களில் டிசம்பர் 1-ம் தேதியும், அகமதாபாத், கவுகாத்தி, இந்தூர், லக்னோ, பாட்னா, சிம்லாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது.

    இதன்மூலம் நாளை மறுநாள் முதல் ரூ. 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 மதிப்பிலான டிஜிட்டல் கரன்சிகள் புழக்கத்திற்கு வரவுள்ளன. 4 நகரங்களில் நடைபெறும் சோதனை ஓட்டத்தில் 8 வங்கிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • முதல் கட்டமாக அரசு பங்கு பத்திரங்கள் பரிமாற்றத்திற்கு மட்டும் அனுமதி.
    • முதல் நாள் 275 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல்

    காகித வடிவிலும்ம், உலோக வடிவிலும் உள்ள பணம் தற்போது டிஜிட்டல் கரன்சியாக உருவெடுத்துள்ளது. காகித பணத்துக்கு நிகராக டிஜிட்டல் கரன்சியை சில நாடுகள் மட்டுமே அங்கீகரித்துள்ளன. இந்தியாவிலும் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட் உரையின் போது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரிசர்வ் வங்கி இன்று சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்துள்ளது.

    பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் வங்கி, எச்.எஸ்.பி.சி. ஆகிய 9 வங்கிகள் மூலமாக டிஜிட்டல் கரன்சி இன்று வெளியிடப்பட்டது

    அரசு பங்கு பத்திரங்கள் பரிமாற்றத்திற்கு இந்த டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களை பொறுத்து, இதர பரிமாற்றங்களுக்கும் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. முதல் நாள் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தி 9 வங்கிகள் 48 பரிவர்த்தனைகள் மேற்கொண்டதாகவும், மொத்தம் 275 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    • காகித பணத்துக்கு நிகராக டிஜிட்டல் கரன்சியும் மதிக்கப்படுகிறது.
    • ஒருசில நாடுகள் மட்டுமே டிஜிட்டல் கரன்சியை அங்கீகரித்துள்ளன.

    மும்பை :

    நடப்பு நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இந்த ஆண்டு டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறி இருந்தார்.

    தற்போது நாம் பயன்படுத்தும் பணம், காகித வடிவத்திலும், உலோக நாணய வடிவத்திலும் உள்ளன. அதேபோன்று, 'டிஜிட்டல் கோட்' பயன்படுத்தி டிஜிட்டல் கரன்சி உருவாக்கப்படுகிறது. தனியார் துறையினரும் இதை வெளியிடுகிறார்கள்.

    காகித பணத்துக்கு நிகராக டிஜிட்டல் கரன்சியும் மதிக்கப்படுகிறது. ஒருசில நாடுகள் மட்டுமே டிஜிட்டல் கரன்சியை அங்கீகரித்துள்ளன.

    இந்தநிலையில், இந்தியாவில் ரிசர்வ் வங்கி முதல்முறையாக டிஜிட்டல் கரன்சியை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடுகிறது. சோதனை அடிப்படையில் இந்த கரன்சி வெளியிடப்படுகிறது.

    இதற்கு டிஜிட்டல் ரூபாய் (மொத்த விலை பிரிவு) என்று பெயரிடப்பட்டுள்ளது. அரசு பங்கு பத்திரங்களில் பரிமாற்றம் செய்வதற்கு இந்த டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

    இதில் கிடைக்கும் அனுபவங்களை பொறுத்து, இதர பரிமாற்றங்களுக்கும் இந்த கரன்சியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

    பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் வங்கி, எச்.எஸ்.பி.சி. ஆகிய 9 வங்கிகள் மூலமாக டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது.

    இதுபோல், 'டிஜிட்டல் ரூபாய் (சில்லறை பிரிவு)' என்ற டிஜிட்டல் கரன்சி, இன்னும் ஒரு மாதத்தில் குறிப்பிட்ட நகரங்களில் அறிமுகம் செய்யப்படுகிறது. அந்த கரன்சியை வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் ஆகியோர் பயன்படுத்தலாம்.

    • வங்கிகளில் பணத்திற்கு பதிலாக இந்த கரன்சிகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும்.
    • இந்த கரன்சியை அனைத்து தரப்பினரும் வணிகத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

    புதுடெல்லி:

    கிரிப்டோகரன்சிகள் சர்வதேச நிதிச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மக்கள் பலரும் இதில் முதலீடு செய்துவருகின்றனர். அதேசமயம் இதை அணுக முறையான வழிமுறைகள் ஏதும் இல்லாத காரணத்தால் பலர் இதில் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். எனவே இதனை தவிர்க்க அரசாங்கமே டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்ய உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-23 பட்ஜெட் உரையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியின் ஆதரவுடன் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார். 

    இந்நிலையில், குறிப்பிட்ட சில பயன்பாட்டிற்காக, சோதனை அடிப்படையில் டிஜிட்டல் ரூபாய் அல்லது இ-ரூபாய் நோட்டுக்களை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    டிஜிட்டல் ரூபாய் நோட்டுக்கள் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சோதனை முறையில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது போன்ற சோதனை திட்டங்களை நாடு முழுக்க விரிவுபடுத்தும் போது, அதனுடைய சிறப்பம்சங்கள், நன்மைகள் குறித்து அவ்வப்போது எடுத்துரைக்கப்படும்.

    தற்போது புழக்கத்தில் உள்ள பணத்திற்கு, இ-ரூபாய் கூடுதல் விருப்பத் தேர்வாக இருக்கும். இது வழக்கமான ரூபாய் நோட்டுகளிலிருந்து வேறுபட்டதல்ல. ஆனால் டிஜிட்டல் முறையில் இருப்பதால் பரிமாற்றத்திற்கு எளிதாகவும், வேகமாகவும் இருக்கும். மேலும், இது மற்ற டிஜிட்டல் பணத்தின் அனைத்து பரிவர்த்தனை நன்மைகளையும் கொண்டிருக்கும்.

    நாணயக் கொள்கைக்கு ஏற்ப ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் நாட்டின் அதிகாரப்பூர்வ நாணயமாக டிஜிட்டல் கரன்சி இருக்கும். இதனை குடிமக்கள், நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் வணிகத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அதேபோல தற்போது ரூபாய் நோட்டுக்களாக வங்கியில் இருப்பு வைத்திருப்பதைப் போல இந்த டிஜிட்டல் கரன்சியையும் வங்கியில் இருப்பு வைத்துக்கொள்ளலாம். இது முழுக்க முழுக்க சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

    வங்கிகளில் பணத்திற்கு பதிலாக இந்த கரன்சிகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும். அதேபோல இதனை சேமித்து வைத்துக்கொள்வதற்கென தனியாக வங்கிக் கணக்குகள் தேவையில்லை. தற்போது புழக்கத்தில் இருக்கும் பணத்தை பரிவர்த்தனை செய்ய ஏற்படும் செலவை இந்த டிஜிட்டல் கரன்சி குறைக்கும். சர்வதேச அளவில் காகித பயன்பாட்டை குறைத்து உலக நாடுகள் டிஜிட்டல் கரன்சியை நோக்கி நகர்ந்திருக்கிறது. எனவே டிஜிட்டல் கரன்சியை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×