search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Demonstration by"

    • இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமையில், ராகுல்காந்தி எம்.பி.பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செய லாளர்கள் சிரஞ்சீவி, தினேஷ் குமார், சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் பவானிசாகர் கார்த்தி, அந்தியூர் ராஜ்குமார், கோபி கோதண்டம், பிரசாந்த் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்

    சிறப்பு அழைப்பா ளர்களாக மாநில செயலாளர் ஜெனித், இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் நரேந்திர தேவ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்த லைவர் எல்.முத்துக்குமார், மாநில செயலாளர் குறிச்சி சிவக்குமார், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மொடக்குறிச்சி முத்துக்கு மார், மாநில பொதுக்குழு உறுப்பினர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் இந்த ஆர்ப்பாட்ட த்தில் வட்டார தலைவர்கள் தேவராஜ், முத்துச்சாமி, வேலுமணி, ஆறுமுகம், இந்துஜா, பவானிசாகர் ஒன்றிய குழு உறுப்பினர் பூங்கொடி முத்துச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    • பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அந்த பகுதியில் பவானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    பவானி அருகே ஆப்பகூடல் மெயின் ரோட்டில் ஜம்பை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது.

    இந்த சங்கத்தின் முன்பு இன்று (திங்கட்கிழமை) காலை பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரணடனர்.

    தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அவர்கள் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்கிட வேண்டும். கால்நடை மருத்துவர் வாரம் ஒருமுறை வர வேண்டும்.

    50 சதவீதம் கால்நடை தீவன மானியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும். கால்நடைகளுக்கு 24 மணி நேரமும் வாரத்தில் அனைத்து நாட்களும் இலவச மருத்துவ உதவி மற்றும் மருந்துகள் வழங்க வேண்டும்.

    கால்நடை களுக்கு தடை இல்லாமல் விலையில்லா இறப்பு காப்பீடு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதேபோல் அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரும் வரை பல்வேறு கட்ட போரா ட்டங்கள் நடைபெறும் என தெரிவித்தனர்.

    இதையொட்டி அந்த பகுதியில் பவானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

    ×