search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்
    X

    சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

    • இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமையில், ராகுல்காந்தி எம்.பி.பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செய லாளர்கள் சிரஞ்சீவி, தினேஷ் குமார், சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் பவானிசாகர் கார்த்தி, அந்தியூர் ராஜ்குமார், கோபி கோதண்டம், பிரசாந்த் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்

    சிறப்பு அழைப்பா ளர்களாக மாநில செயலாளர் ஜெனித், இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் நரேந்திர தேவ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்த லைவர் எல்.முத்துக்குமார், மாநில செயலாளர் குறிச்சி சிவக்குமார், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மொடக்குறிச்சி முத்துக்கு மார், மாநில பொதுக்குழு உறுப்பினர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் இந்த ஆர்ப்பாட்ட த்தில் வட்டார தலைவர்கள் தேவராஜ், முத்துச்சாமி, வேலுமணி, ஆறுமுகம், இந்துஜா, பவானிசாகர் ஒன்றிய குழு உறுப்பினர் பூங்கொடி முத்துச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×