search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cuddalore police"

    • கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
    • சட்டத்தை மீறிய 2 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் என்எல்சி நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது. வளையமாதேவியில் பரவனாறு வாய்க்கால் அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியது. இதற்காக அங்கு பயிரிடப்பட்ட நெற் பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்து பணிகளை தொடங்கினார்கள். இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

    பயிர்கள் அழிக்கப்படுவதை கண்டித்தும், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்தும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று என்எல்சி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

    அன்புமணி உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்ட நிலையில், போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் தாக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில், பாமக போராட்டம் மற்றும் நடவடிக்கை குறித்து கடலூர் மாவட்ட காவல்துறை விரிவான விளக்கம் அளித்துள்ளது. என்.எல்.சி. முற்றுகை தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 26 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 26 மற்றும் 28ம் தேதிகளில் பதிவு செய்யப்பட்ட கல்வீச்சு வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டதாகவும், சட்டத்தை மீறிய 2 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

    சுமார் 900 சாலை மறியல் போராட்டங்கள் நடத்த முயன்ற 2000 பாமகவினர் தடுப்பு நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் கடலூர் காவல்துறை கூறியுள்ளது.

    கடலூர் அருகே பெண்ணை திட்டி தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் அடுத்த கோரப்பட்டு சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 35). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவருக்கும் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த உறவினர்கள் புவனேஸ்வரியை கண்டித்ததால் ஜெயபாலிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று புவனேஸ்வரிடம் ஜெயபாலன் பேச முயற்சி செய்த போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜெயபால் புவனேஸ்வரியை கையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

    மேலும் ஜெயபாலுக்கு ஆதரவாக மூன்று பேர் புவனேஸ்வரியை திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த ஜெயபால், சிவமணி, பாண்டித்துரை, சந்தோஷ் குமார் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×