search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corporation park"

    • திருப்பூர் மாநகராட்சி வெள்ளி விழா பூங்காவில் இன்று காலை முதல் ஏராளமான காதல்ஜோடியினர் குவிந்தனர்.
    • ஓட்டல்கள், ஐஸ்கிரீம் பார்களுக்கு சென்று தங்களுக்கு விருப்பப்பட்ட உணவுகளை சாப்பிட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருப்பூர் மாநகராட்சி வெள்ளி விழா பூங்காவில் இன்று காலை முதல் ஏராளமான காதல்ஜோடியினர் குவிந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் ரோஜா பூக்களை வழங்கி காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். மேலும் ஓட்டல்கள், ஐஸ்கிரீம் பார்களுக்கு சென்று தங்களுக்கு விருப்பப்பட்ட உணவுகளை சாப்பிட்டனர்.

    இதேப்போல் உடுமலை அமராவதி பூங்கா, அமராவதி அணை உள்ளிட்ட இடங்களிலும் காதல்ஜோடியினர் திரண்டனர்.

    மேலும் சில இளைஞர்கள், இளம்பெண்கள் இன்று தங்களது காதலை வெளிப்படுத்தினர். அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் பூங்கா உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    காதலர் தினத்தையொட்டி திருப்பூர் பூ மார்க்கெட்டுகளில் விதவிதமான ரோஜா பூக்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டு இருந்தன. இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.  

    • பா.ஜனதா கட்சியின் மேலப்பாளையம் நகர் கிழக்கு மண்டல நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் பாளை என்.ஜி.ஓ. காலனியில் நடைபெற்றது.
    • குடிநீர் பிரச்சினையை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துவது என கேட்டுக் கொள்ளப்பட்டது.

    நெல்லை:

    பா.ஜனதா கட்சியின் மேலப்பாளையம் நகர் கிழக்கு மண்டல நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் பாளை என்.ஜி.ஓ. காலனியில் நடைபெற்றது.

    மண்டல தலைவர் பெரியதுரை தலைமை தாங்கினார்.மண்டல பொதுச்செயலாளர் பாலகுரு வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக மாவட்ட பொது செயலாளர் சுரேஷ், ராதாபுரம் சட்டமன்ற பொறுப்பாளர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிர்வாகிகள் கோபால்,அருள் முகேஷ், சுப்பிரமணி சண்முகம் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

    இந்த செயற்குழு கூட்டத்தில் 31-வது வார்டு பகுதியில் குடிநீர் பிரச்சினையை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துவது, 43-வது வார்டு பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீர் சாலைகளில் தேங்குவதையும், குடியிருப்பு பகுதிகளில் நுழைவதையும் தடுக்கும் வகையில் மழைநீர் வடிகால் அமைக்க வலியுறுத்துவது, 51-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை சரிவர செயல்படுத்த வேண்டும்.

    40-வது வார்டு பகுதியில் காவலர் குடியிருப்பு அருகில் உள்ள மாநகராட்சி பூங்காவை சீரமைக்க வேண்டும். 41- வது வார்டு பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும். 42- வது வார்டு தாமஸ் தெரு பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×