search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    40-வது வார்டில் காவலர் குடியிருப்பு மாநகராட்சி பூங்காவை சீரமைக்க வேண்டும்- பா.ஜனதா கூட்டத்தில் தீர்மானம்
    X

     நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் பேசிய போது எடுத்த படம்.

    40-வது வார்டில் காவலர் குடியிருப்பு மாநகராட்சி பூங்காவை சீரமைக்க வேண்டும்- பா.ஜனதா கூட்டத்தில் தீர்மானம்

    • பா.ஜனதா கட்சியின் மேலப்பாளையம் நகர் கிழக்கு மண்டல நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் பாளை என்.ஜி.ஓ. காலனியில் நடைபெற்றது.
    • குடிநீர் பிரச்சினையை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துவது என கேட்டுக் கொள்ளப்பட்டது.

    நெல்லை:

    பா.ஜனதா கட்சியின் மேலப்பாளையம் நகர் கிழக்கு மண்டல நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் பாளை என்.ஜி.ஓ. காலனியில் நடைபெற்றது.

    மண்டல தலைவர் பெரியதுரை தலைமை தாங்கினார்.மண்டல பொதுச்செயலாளர் பாலகுரு வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக மாவட்ட பொது செயலாளர் சுரேஷ், ராதாபுரம் சட்டமன்ற பொறுப்பாளர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிர்வாகிகள் கோபால்,அருள் முகேஷ், சுப்பிரமணி சண்முகம் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

    இந்த செயற்குழு கூட்டத்தில் 31-வது வார்டு பகுதியில் குடிநீர் பிரச்சினையை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துவது, 43-வது வார்டு பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீர் சாலைகளில் தேங்குவதையும், குடியிருப்பு பகுதிகளில் நுழைவதையும் தடுக்கும் வகையில் மழைநீர் வடிகால் அமைக்க வலியுறுத்துவது, 51-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை சரிவர செயல்படுத்த வேண்டும்.

    40-வது வார்டு பகுதியில் காவலர் குடியிருப்பு அருகில் உள்ள மாநகராட்சி பூங்காவை சீரமைக்க வேண்டும். 41- வது வார்டு பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும். 42- வது வார்டு தாமஸ் தெரு பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×