search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "contour canal"

    • மாவட்டத்தில் உள்ள சுமார் 3. 77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
    • பல இடங்களில் கால்வாய் கரைகள் சிதலமடைந்ததால் தண்ணீர் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டது.

    உடுலை:

    உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வந்து சேமிக்கப்படுகிறது. இதன் மூலம் கோவை திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3. 77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆணடுக்கு 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

    காண்டூர் கால்வாய் அடர்வனப் பகுதி வழியாக வருவதால் மழைக்காலங்களில் பாறைகள் சரிந்தும் காரை உடைந்தும் பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் கால்வாய் கரைகள் சிதலமடைந்ததால் தண்ணீர் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து கால்வாயை புனரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று கொண்ட அரசு காண்டூர் கால்வாயில் தரைத்தளம் மற்றும் பக்கவாட்டுப் பகுதியில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக செய்து வருகிறது.

    தற்போது பொக்லைன் எந்திரங்கள் மற்றும் ராட்சத கிரேன் மூலம் பணிகள் முழு வீ ச்சில் நடைபெற்று வருகின்றன. நிர்ணிக்கப்பட்ட பகுதிகளில் பணிகள் வேகமாக நடக்கின்றன.

    இதனால் இந்த மாத இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பி.ஏ.பி பாசனத்துக்கு உட்பட்ட 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, நான்கு மண்டலமாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
    • 2011ம் ஆண்டு முதல் 2015 வரை 224 கோடி ரூபாய் செலவில் காண்டூர் கால்வாயில் முதல் கட்டமாக அதிக நீர் இழப்பு உள்ள பகுதிகளில் பணி மேற்கொள்ளப்பட்டது.

    மடத்துக்குளம் :

    திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணை மூலம் பி.ஏ.பி பாசனத்துக்கு உட்பட்ட 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, நான்கு மண்டலமாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. திருமூர்த்தி அணைக்கு போதிய நீர்ப்பிடிப்பு பகுதிகள் இல்லை. எனவே தொகுப்பு அணைகளான ஆழியாறு மற்றும் சர்க்கார்பதி நீர்மின் நிலையத்தில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக நீர் கொண்டுவரப்பட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்.

    எனவே பாசனத்துக்கு காண்டூர் கால்வாய் வாயிலாக பெறப்படும் தண்ணீரே முக்கிய ஆதாரமாக உள்ளது. திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து சேகரித்து, பரம்பிக்குளம் அணை மற்றும் சர்க்கார்பதி வழியாக, திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக நீர் கொண்டு வரப்படுகிறது.

    இக்கால்வாய் மலைப்பகுதியில் 49 கி.மீ., தூரம் அமைந்துள்ளது. நீண்ட கால பயன்பாடு, மண் சரிவு, பாறைகள் விழுந்து பாதிப்பு, மரங்களின் வேர்கள் ஊடுருவல் என கரைகள் வலுவிழந்தது. திட்ட தொகுப்பு அணைகளில் முழுமையான நீர் எடுக்க முடியாததோடு, நீர் இழப்பும் அதிகரித்து வந்தது. கடந்த 2011ம் ஆண்டு முதல் 2015 வரை 224 கோடி ரூபாய் செலவில் காண்டூர் கால்வாயில் முதல் கட்டமாக அதிக நீர் இழப்பு உள்ள பகுதிகளில் பணி மேற்கொள்ளப்பட்டது.

    இதில் கி.மீ., 30 முதல் 49 வரை 5.26 கி.மீ., உள்ள கால்வாய் பகுதி புதுப்பிக்கப்படாமல் விடுபட்டது. விடுபட்ட பகுதிகளை புதுப்பிக்க கடந்த ஆண்டு தொழில்நுட்ப ஒப்புதல் பெறப்பட்டு ரூ.72 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் சமீபத்தில் துவங்கியது. குறிப்பாக நல்லாறு, காண்டூர் கால்வாயுடன் இணையும் ஷட்டர் பகுதியில் கரைகள் அதிக சேதமடைந்துள்ளது.

    அப்பகுதியில் கால்வாய் கரைகளில் மரங்களின் வேர்கள் ஊருடுவி கான்கிரீட் சேதமடைந்துள்ளது. மழைக்காலத்தில் நல்லாற்றில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தால் காண்டூர் கால்வாய் ஷட்டர் மற்றும் சரிவு கட்டமைப்பும் சேதத்துக்குள்ளாகிறது. எனவே தற்போது அப்பகுதியில் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முழுமையாக இருபுறமும் பழைய கரை அகற்றப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

    அடித்தளத்திலும் புதிதாக கான்கிரீட் தளம் அமைக்கப்படுகிறது. இது குறித்து வெள்ளகோவில் கிளைக் கால்வாய் பாசன விவசாயிகள் கூறுகையில்,காண்டூர் கால்வாய் வினாடிக்கு 1,150 கனஅடி நீர் கொண்டு வரும் வகையில் வி வடிவில் திட்டமிட்டு கட்டப்பட்டது. கால்வாய் பல இடங்களில் சேதமடைந்து நீர் விரயம் அதிகரித்திருந்தது. படிப்படியாக புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் நீர் விரயத்தை குறைத்து முழு கொள்ளளவில் தண்ணீர் வரும் என எதிர்பார்த்துள்ளோம்.

    தற்போது திட்ட தொகுப்பு அணைகளான நிராறு, சோலையாறு, காதம்பாறை,பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாம் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.

    எனவே காண்டூர் கால்வாய் புதுப்பிப்பு பணிகளை திட்டமிட்ட காலத்துக்குள் முடித்து தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் பெற வேண்டும். இல்லையெனில் அனைத்து அணைகளும் நிரம்பும் நிலையில் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வர முடியாமல் உபரியாக திறந்து விடப்படும் நிலையே உருவாகும் என அவர்கள் தெரிவித்தனர்.

    • அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
    • சாரல் மழை மட்டுமே பெய்து வருவதால் பரம்பிக்குளம் சோலையார் உள்ளிட்ட அணைகளுக்கு போதுமான நீர்வரத்து இல்லை.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. பி.ஏ.பி., தொகுப்பு அணைகளின் கடைசி அணையாக இது உள்ளது. இந்த அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 4 மண்டலங்களாக பிரித்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. ஏராளமான கூட்டுக் குடிநீர் திட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன.

    திருமூர்த்தி அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து பொள்ளாச்சி சர்க்கார்பதி மின் நிலையம் வழியாக காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. இது தவிர பாலாறு மூலமும் தண்ணீர் வருகிறது. ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்கு பருவமழை தான் பி.ஏ.பி., அணைகளின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்குரிய தென்மேற்கு பருவமழை இன்னும் பெய்யவில்லை. அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருவதால் பரம்பிக்குளம் சோலையார் உள்ளிட்ட அணைகளுக்குபோதுமான நீர்வரத்து இல்லை. இதனால் நீர்மட்டம் மெதுவாக தான் உயர்ந்து வருகிறது. இதற்கிடையில் காண்டூர் கால்வாயில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

    இதனால் அணையின் நீர்மட்டம் 28.67 அடியாக குறைந்துள்ளது. பாலாறு மூலம் வெறும் 8 கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. குடிநீர் மற்றும் பிற தேவைக்காக 27 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் திருமூர்த்தி அணையில் 41.85 அடி நீர்மட்டம் இருந்தது. தற்போது கால்வாய் பராமரிப்பு பணி முடிந்ததும் ஆகஸ்ட் மாதம் தண்ணீர் திறக்கப்படும் என தெரிகிறது.

    ×