search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cong JDS"

    கர்நாடகாவில் எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபிக்காத நிலையில், ஆங்கிலோ இந்திய எம்.எல்.ஏவை நியமித்த கவர்னரின் உத்தரவுக்கு எதிராக காங்கிரஸ், மஜத சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளன. #KarnatakaCMRace
    புதுடெல்லி:

    கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்கள் வென்ற கட்சி என்ற அடிப்படையில் எடியூரப்பா இன்று முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்துள்ள மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

    இந்நிலையில், ஆங்கிலோ இந்திய எம்.எல்.ஏ பதவிக்கு வினிஷா நீரோ என்பவரை நியமித்து கவர்னர் வாஜுபாய் வாலா உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் மஜக சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்துள்ளது. எடியூரப்பா அரசு பெரும்பான்மையை இன்னும் நிரூபிக்காத நிலையில், ஆங்கிலோ இந்திய எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது என அதில் கூறப்பட்டுள்ளது.

    எடியூரப்பா பதவியேற்க தடை கோரிய மனுவுடன், இந்த மனு நாளை சேர்த்து விசாரிக்கப்பட உள்ளது. நீதிபதிகள் ஏகே சிக்ரி, எஸ்ஏ போப்டே, அசோக் பூஷன் மேற்கண்ட மனுவை விசாரிக்கின்றனர். 
    ×