search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coimbatore market"

    • கோவை டி.கே.மார்க்கெட்டிற்கு இன்று காலை முதலே பொதுமக்கள் அதிகமாக வந்தனர்.
    • மல்லிப்பூ கிலோ ரூ.800க்கு விற்பனையானது.

    கோவை,

    நாளை தமிழ்புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. புத்தாண்டையொட்டி மக்கள் தங்கள் வீடுகளில் சாமி படங்களுக்கு மாலை அணிவித்து, கனிகள் உள்பட பல்வேறு பொருட்களை படைத்து சாமி கும்பிடுவது வழக்கம்.

    இதையடுத்து பொதுமக்கள் மார்க்கெட்டுகளுக்கு சென்று பூஜைக்கு தேவையான பழம், பூக்கள் வாங்கி வருகின்றனர்.

    கோவை டி.கே.மார்க்கெட்டிற்கு இன்று காலை முதலே பொதுமக்கள் அதிகமாக வந்தனர். அவர்கள் அங்கு புத்தாண்டுக்கு சாமி கும்பிடுவதற்கு தேவையான பழங்கள், காய்கனிகள் உள்ளிட்டவற்றை பார்த்து வாங்கினர்.

    மேலும் பூஜைக்கு தேவையான பொருட்களையும் வாங்கி கொண்டனர்.

    இதேபோல் கோவை பூமார்க்கெட்டில் காலை முதலே பூக்கள் விற்பனை களைகட்டியது. வழக்கத்தை விட இன்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மக்கள் தங்களுக்கு தேவையான பூக்களை தேர்ந்தெடுத்து வாங்கி சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    தமிழ்புத்தாண்டை யொட்டி கோவையில் பழங்கள், பூக்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக பூக்களின் விலை சற்று அதிகமாகவே காணப்பட்டது. மல்லிப்பூ கிலோ ரூ.800க்கு விற்பனையானது.

    கோவை மார்க்கெட்டுகளில் விற்பனையாகும் பழங்கள் மற்றும் பூக்களின் விலை கிலோவில் வருமாறு:-

    மாம்பழம்(செந்தூரம்)-ரூ.120, மல்கோவா மாம்பழம்-ரூ.180, சாத்துகுடி-ரூ.70, கொய்யா-ரூ.80, மாதுளை-ரூ.180, ஆரஞ்சு-ரூ.100, திராட்சை-ரூ.100, ஆப்பிள்-ரூ.200, அன்னாசி-ரூ.60, எலுமிச்சை-ரூ.120க்கு விற்பனையானது.

    மல்லி பூ-ரூ.800, செவ்வந்தி-ரூ.320, தாமரை 1-ரூ.10, ரோஜா(ரெட்)-ரூ.160, ரோஜா(கலர்)-ரூ.240, அரளி-ரூ.320, சம்பங்கி-ரூ.240, முல்லை-ரூ.800, கனகாம்பரம்-ரூ.400, செண்டுமல்லி-ரூ.60க்கு விற்பனையாகி வருகிறது.

    • கர்நாடகாவில் இருந்து கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டுக்கு, தினமும் 200 டன் வெங்காயம் இறக்குமதி ஆகும்.
    • வெங்காயம், தக்காளி விலை உயர்ந்ததால் பெரும்பாலான ஓட்டல்களில் தக்காளி சட்னி வைப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.

    கோவை :

    கோவை மேட்டுப்பாளையம் சாலையில் எம்.ஜி.ஆர் மார்க்கெட் உள்ளது.

    இங்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் தங்கள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    மகராஷ்டிரா, மத்தியபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வெங்காயம் அதிகளவில் வருகிறது. குறிப்பாக கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டுக்கு தினமும் 500 டன் வெங்காயம் இறக்குமதி ஆகிறது. அதில் 80 சதவீதம் அப்படியே கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    தற்போது தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பரு வமழை பெய்துள்ளதால் வெங்காயம் வரத்து மிகவும் குறைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டுக்கு, தினமும் 200 டன் வெங்காயம் இறக்குமதி ஆகும். தற்போது 50 டன் மட்டுமே இறக்குமதியாகிறது.

    இதன் காரணமாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.18க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது ரூ.22க்கு விற்பனையாகிறது.

    அதேபோல கடந்த மாதம் ரூ.30க்கு விற்க ப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டுக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் இருந்து தக்காளிகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது தக்காளி வரத்து குறைந்துள்ளதால், தக்காளியின் விலையும் உயர்ந்துள்ளது.தற்போது தக்காளி கிலோ ரூ.50க்கு விற்பனையாகி வருகிறது.கோவை டி.கே.மார்க்கெட்டிலும் தக்காளி, வெங்காயம் விலை அதிகரித்து காணப்பட்டது.

    டி.கே.மார்க்கெட்டில் தக்காளி கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தக்காளி ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையானது. இன்று ஆப்பிள் தக்காளி கிலோ ரூ.50க்கு விற்பனையாகி வருகிறது. நாட்டு தக்காளி கிலோ ரூ.45க்கு விற்பனையாகி வருகிறது.இதேபோல் சின்னவெங்காயம் 3 கிலோ ரூ.100க்கும், பெரிய வெங்காயம் 5 கிலோ ரூ.100க்கும் என விற்பனை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த மாதம் வரை தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை சற்று குறைவாகவே இருந்தது. ஆனால் இந்த மாதம் விலை அதிகரி த்துள்ளது. வெங்காயம், தக்காளி விலை உயர்ந்ததால் பெரும்பாலான ஓட்டல்களில் தக்காளி சட்னி வைப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளி போன்ற அத்தியாவசிய பொரு ட்களை கூட்டுறவுத்துறை மூலம் ரேசன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் அதிகளவில் சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை பயிர்கள் பயிரிடப்படுகிறது.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தக்காளி, வெண்டை, கத்தரி உள்ளிட்டவைகளும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து மலைக்காய்கறிகளும் வந்த வண்ணம் இருக்கின்றன.

    கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் கோவை மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் வரத்து சற்று குறைய தொடங்கியுள்ளது. இதனால் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களும் கவலையடைந்துள்ளனர்.

    தியாகி குமரன் மார்க்கெட்டில் இன்று விற்கப்படும் காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-

    நாட்டு தக்காளி-ரூ.100, ஆப்பிள் தக்காளி- ரூ.90, புடலைங்காய்- ரூ.35, மாங்காய்- ரூ.60, எலுமிச்சை- ரூ.40, தேங்காய்- ரூ.35, கத்தரி- ரூ.80, வெண்டைக்காய்- ரூ.70, அவரை-ரூ.70, மிளகாய்-ரூ.40, பீன்ஸ்-ரூ.80, பாகற்காய்-ரூ.60, முட்டைக்கோஸ்-ரூ.60, வெள்ளரி-ரூ.20, பீட்ரூட்-ரூ.60, சவ்சவ்-ரூ.20, கேரட்-ரூ.80, பச்சை பட்டாணி-ரூ.180, சுரைக்காய்-ரூ.50, பீர்க்கங்காய்-ரூ.80, முள்ளங்கி-ரூ.50, இஞ்சி-ரூ.40, கருணை கிழங்கு-ரூ.40, சேனை கிழங்கு-ரூ.25, சேப்ப கிழங்கு-ரூ.30, உருளை கிழங்கு-ரூ.40, பெரிய வெங்காயம்-ரூ.40, சின்னவெங்காயம்-ரூ.30, காலிபிளவர்-ரூ.50, பூண்டு-ரூ.160க்கு விற்பனையாகி வருகிறது.

    தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் அதிகளவில் சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை பயிர்கள் பயிரிடப்படுகிறது. விளையும் பயிர்களை பூலுவப்பட்டி, தொண்டாமுத்தூர் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. தொண்டாமுத்தூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் 14 கிலோ எடையுள்ள டிப்பர் தக்காளி நேற்று முன்தினம் 950 ரூபாய்க்கும், நேற்று 1,200 ரூபாய்க்கு விற்பனையானது.

    மழை குறைந்தாலும் தக்காளி வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறையும். அதுவரை விலை குறைவதற்கு வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.
    கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக கோவை மார்க்கெட்டில் காய்கறிகள் விலை வீச்சி அடைந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கோவை:

    கோவை மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தும், கேரட், உருளை கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் நீலகிரி மாவட்டத்தில் இருந்தும், தக்காளி, கத்தரிக்காய் பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் கோவை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    கோவை மார்க்கெட்டில் இருந்து கேரள மாநிலத்துக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் டன் காய்கறிகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். அங்கு ஏற்பட்ட வெள்ளபெருக்கு,ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டதன் காரணமாக கோவை மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளது. தற்போது ஒரு நாளைக்கு 250 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் கோவை மார்க்கெட்டில் காய்கறி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    மொத்த விலையில் கடந்த வாரம் ரூ. 20-க்கு விற்பனையான பெரிய வெங்காயம் விலை குறைந்து ரூ 12 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மார்க்கெட்டில் 500 முதல் 600 டன் வரை தேக்கம் அடைந்துள்ளது. ரூ. 40-க்கு விற்பனையான சின்ன வெங்காயம் ரூ.22-க்கும், ரூ. 45-க்கு விற்பனையான பீன்ஸ் ரூ. 15-க்கும், ரூ. 40-க்கு விற்பனையான கேரட் ரூ. 35-க்கும், ரூ. 20-க்கு விற்பனையான முட்டைகோஸ் ரூ. 10-க்கும், ரூ. 25-க்கு விற்பனையான தக்காளி ரூ. 10-க்கும், ரூ. 20-க்கு விற்பனையான கத்தரிக்காய் ரூ. 15-க்கும், ரூ. 35-க்கு விற்பனையான வெண்டைக்காய் ரூ. 10-க்கும், ரூ. 20-க்கு விற்னையான முள்ளங்கி ரூ.10-க்கும், ரூ. 40-க்கு விற்பனையான முருங்கைகாய் ரூ. 20-க்கும், ரூ. 30-க்கு விற்பனையான உருளைகிழங்கு ரூ. 20-க்கும்,ரூ. 30-க்கு விற்பனையான பச்சை மிளகாய் ரூ. 10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகள் விலை வீச்சி அடைந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ×