search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore Costituency"

    • மத்திய அரசு திட்டம் கொடுத்தாலும் அதனை செயல்படுத்துவதில் சுணக்கம் இருந்து வருகிறது.
    • இந்தியாவில் உள்ள இளைஞர்கள் எல்லாம் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    கோவை:

    பா.ஜ.க மாநில தலைவரும், கோவை தொகுதி பா.ஜ.க வேட்பாளருமான அண்ணாமலை சூலூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த 3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக மின் கட்டணம் உயர்வு உள்ளிட்டவற்றால் பொதுமக்கள், தொழில்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி தொழிலாளர்களுக்கு என்று மத்திய அரசு பவர் டெக்ஸ் என்ற திட்டத்தை கடந்த 2017-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் விசைத்தறியாளர்களுக்கு சோலார் தகடுகள் 50 சதவீத மானியத்தில் கொடுக்கப்பட்டு வந்தது.

    2021-ம் ஆண்டு வரை இந்த திட்டம் இருந்தது. இந்த திட்டத்தை அப்போது இருந்த எம்.பிக்கள் யாரும் அவ்வளவு ஆர்வமாக செயல்படுத்தவில்லை. மத்திய அரசு திட்டம் கொடுத்தாலும் அதனை செயல்படுத்துவதில் சுணக்கம் இருந்து வருகிறது. இதுவரை இருந்த எம்.பிக்களை அதனை கண்டு கொள்வில்லை.

    பா.ஜனதா வெற்றி பெற்றதும் 2024 முதல் 2026-ம் ஆண்டு வரை 2 ஆண்டுக்கு மீண்டும் பவர்டெக்ஸ் திட்டம் கொண்டு வரப்படும்.


    சோமனூரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும். அம்ரூத் பாரத் திட்டத்தில் சோமனூர் ரெயில் நிலையத்தை இணைத்து, அதனை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுப்போம்.

    ப.சிதம்பரம் கூறுவது போல நாட்டில் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மையால் பாதிக்கப்படவில்லை. இளைஞர்கள் அனைவரும் வேலையில் தான் உள்ளனர். அவர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர்.

    ப.சிதம்பரமும், அவரது தலைவருமான ராகுல் காந்தியும் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் தான் வேலையில்லாமல் இருக்கின்றனர். எனவே ப.சிதம்பரம், ராகுல் தான் வேலையில்லாமல் உள்ளார் என குறிப்பிட்டு இருக்கலாம். அவர்கள் தான் வேலையில்லாமல் இந்தியா முழுவதும் சுற்றி வந்து பிரச்சனை செய்து வருகின்றனர். மற்றபடி இந்தியாவில் உள்ள இளைஞர்கள் எல்லாம் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி 10 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி நடத்தி வந்துள்ளார்.
    • வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் 400 எம்.பிக்களை பெற்று மிக வலிமையுடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக அரியணை ஏறுவார்.

    சூலூர்:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை இன்று சூலூர், காங்கேயம் பாளையம், சாமளாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-

    கோவை பாராளுமன்ற தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர் மத்திய அரசின் திட்டங்களை இங்கு கொண்டு வர எந்தவித முனைப்பும் காட்டவில்லை. கோவையின் வளர்ச்சியில் அவருக்கு அக்கறை இல்லை.

    பிரதமர் மோடி 10 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி நடத்தி வந்துள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் 400 எம்.பிக்களை பெற்று மிக வலிமையுடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக அரியணை ஏறுவார்.

    இந்த முறை பிரதமர் மோடியின் ஆட்சியை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தங்களுக்கு தேவையானதை பெற்று கொள்ள இங்கு போட்டியிடும் என்னை வெற்றி பெற செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.

    தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படப்போவது நிச்சயம். இது வருகிற 19-ந் தேதியில் இருந்து தொடங்குகிறது. மாற்றத்தை விரும்பும் கோவை மக்கள் மாற்றத்தின் பக்கம் நிற்பீர்கள். எனக்கு ஆதரவு கொடுப்பீர்கள் என நம்புகிறோம்.

    இந்த பகுதியில் அரசு வேலை செய்கிறதோ இல்லையோ மக்கள் தங்கள் வேலைகளை செய்து தாங்களாகவே முன்னேறி கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

    மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் விசைத்தறி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். நான் வெற்றி பெற்றதும் விசைத்தறி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். மீண்டும் பவர்டெக்ஸ் திட்டத்தை கொண்டு வருவோம்.

    கோவையில் கடந்த 2 மாதங்களாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இங்கு நிலவக்கூடிய குடிநீர் பிரச்சனைக்கு மாநில அரசு எந்த தீர்வும் காணவில்லை. குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். கோவையின் நொய்யல் நதியை மீட்டெடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×