என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Civil war in Syria"

    • சிரிய அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
    • விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்.

    மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011 ஆன் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உள்நாட்டு போர் வெடித்தது. சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து யாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற கிளர்ச்சி அமைப்பினர் கடந்த வாரம் முதல் ராணுவத்துடன் மீண்டும் சண்டையை தொடங்கியுள்ளனர்.

    ஆசாதின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் வடமேற்கு சிரியாவில் நடத்திய தாக்குதலில் இராணுவத்தினர் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போ நகர் கடந்த சனிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் கைக்குள் சென்றது.

    இந்த நிலையில், சிரியா தலைநகர் டமாஸ்கஸ்-க்குள் நுழைந்ததாக சிரிய கிளிர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தலைநகரில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு சத்தங்கள் கேட்பதாக தெரிவித்துள்ளனர். எனினும், இது குறித்து சிரிய அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    இது குறித்து அந்நாட்டின் ஷாம் எப்.எம். ரேடியோ வெளியிட்ட தகவல்களில் டமாஸ்கஸ் விமான நிலையம் கைப்பற்றப்பட்டு, அங்கிருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிரிய தலைநகர் வடக்கில் உள்ள சயித்நயா ராணுவ சிறைக்குள் நுழைந்து தங்களது குழுவை சேர்ந்த சிறைவாசிகளை விடுவித்துள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸ்-ஐ அரசாங்கப் படைகள் கைவிட்டதைத் தொடர்ந்து முந்தைய நாள் இரவு, எதிர்க்கட்சிப் படைகள் அதைக் கைப்பற்றின. ஹோம்ஸ் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அதிபர் பஷார் ஆசாத் சிரியாவை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அதிபர் பஷார் ஆசாத் நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியான வதந்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது.

    அமெரிக்க தேசிய ஆலோசகரின் வருகை இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்தும் முதல் படிக்கட்டாக அமையும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று குறிப்பிட்டுள்ளார். #Putinvoiceshope #TrumpadvisorvisitMoscow
    மாஸ்கோ:

    சிரியா விவகாரத்தால் அமெரிக்கா - ரஷியா இடையே சமீபத்தில் ஏற்பட்ட பூசல், பிரிட்டன் நாட்டில் ரஷிய முன்னாள் உளவாளி மற்றும் அவரது மகளை ரசாயன தாக்குதலால் ரஷியா கொல்ல முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டினால் பூதாகரமாக வெடித்தது.

    இதுதவிர, அமெரிக்கா - ரஷியா இடையிலான மேலும் சில வேறுபாடுகளை களைவதற்காக இருநாட்டு தலைவர்களும் நேருக்குநேர் சந்தித்துப் பேச வேண்டும் என சர்வதேச அரசியில் நோக்கர்கள் கருதுகின்றனர். ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு ஒற்றுமையை ஏற்படுத்துவதில் ஆஸ்திரியா நாட்டு பிரதமர் செபாஸ்டின் குரூஸ் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பும், முக்கிய பேச்சுவார்த்தையும் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெறும் என ரஷிய அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமிர்ட்டி பெஸ்கோவ் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு அச்சாரமாக அமெரிக்க தேசிய ஆலோசகர் ஜான் பால்டோன் இன்று ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்றுள்ளார். கிரெம்ளின் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது அவரை வரவேற்று கருத்து தெரிவித்துள்ள புதின், உங்களது மாஸ்கோ பயணம் நமது இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவு முழுமையடைவதற்கான முதல் படிக்கட்டாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். #Putinvoiceshope #TrumpadvisorvisitMoscow
    ×