search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "City Council"

    • பாதாள சாக்கடை பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று நகரசபை தலைவர் கூறினார்.
    • இனி குடிநீர் சப்ளை செய்ய வரும்போது உங்களிடம் கையொப்பம் வாங்கப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் அபிதா பர்வீன், என்ஜினீயர் ரெங்க ராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    குமார்: பாதாள சாக்கடை குழாய்கள் சரிசெய்வதாக கூறி மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் செலவழிக்கப் படுகிறது. ஆனால் பாதாள சாக்கடை பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    தலைவர்: பாதாள சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண ரூ.11 கோடி அனுமதி பெறப்பட்டு ள்ளது. இதற்கான நிதி ஒருவா ரத்திற்குள் வந்துவிடும். அதன்பின்னர் பழுதடைந்த குழாய்களை மாற்றி விட்டால் பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகிவிடும்.

    அய்யனார்: போடப் படாத சாலையை போட்ட தாக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. மன்ற பொருளில் தவறான தகவலை தெரிவிக்க வேண்டாம்.

    தலைவர்: அந்த பணி நடைபெறும்போது முதல்-அமைச்சர் வருகைக்காக நிறுத்தப்பட்டது. அதனால் தாமதமாகிவிட்டதால் இந்த குழப்பம். இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் சரிசெய்யப்படும்.

    காளி: தெருவிளக்குகள் எரியாததால் மக்கள் நடமாட முடியவில்லை. எல்.இ.டி. விளக்குகள் வந்துவிட்ட நிலையிலும் இன்னும் பொருத்தப்படாதது ஏன்?

    தலைவர்: விளக்கு கள் பொருத்துவதற்கு தேவை யான இதர சாமான்கள் வரவேண்டியுள்ளது. விரைவில் வந்துவிடும்.

    இந்துமதி: எனது வார்டில் பாதாள சாக்கடை மூடிகள் 11 இடங்களில் போடச்சொல்லியும் இதுவரை போடவில்லை. அடிகுழாய் பழுது குறித்து புகார் செய்தால் சரிசெய்வ தில்லை. குடிநீர் வருவது கிடையாது. லாரி டிராக்டரில் குடிநீர் சப்ளை செய்வதாக கூறுகிறீர்கள். எனது வார்டுக்கு ஒருநாள் கூட வந்தது கிடையாது.

    தலைவர்: பாதாள சாக்கடை மூடி உடனடியாக போடப்படும். இனி குடிநீர் சப்ளை செய்ய வரும்போது உங்களிடம் கையொப்பம் வாங்கப்படும்.

    குமார்:- பொதுவான பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி பேசியபோது அதற்கு சில கவுன்சிலர்கள் அவர்களது வார்டு பிரச்சினைகள் பற்றி மட்டும் கேள்வி எழுப்பட்டும். கூட்ட நேரத்தினை வீணடிக்க வேண்டாம் என்று கூறி வாதிட்டனர். இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது. பஸ் நிலைய கடைகளை வாடகைக்கு எடுத்தவர்களின் கேட்பு தொகையை நீக்கம் செய்வது தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். கேட்பு தொ கையை செலுத்தாத வர்களுக்கு இனி புதிய பஸ்நிலையத்தில் கடை கொடுக்க கூடாது என்று கூறினர்.

    இவ்வாறு அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    • சிவகங்கையை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நகர் மன்ற தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • ஆண்டு வரி வருமானம் ரூ.9.94 கோடியாக உள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கையில் சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினரிடம் சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை நகரம், வரலாற்றுச்சிறப்பு மிக்க நகரமாகும். இந்த நகராட்சியில் 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆண்டு வரி வருமானம் ரூ.9.94 கோடியாக உள்ளது. மாவட்ட தலைநகராக உள்ள சிவகங்கை நகராட்சி தரம் உயர்த்தப்படுவதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளது. எனவே சிவகங்கையை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும்.

    நகராட்சியில் கழிவு நீர் கால்வாய்கள் சேதமடைந்து உள்ளதால் மழைநீர் சாலையில் செல்கிறது. எனவே சுமார் 100 கி.மீ. நீளம் கால்வாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே 50 கி.மீட்டர் நீளத்திற்கு பாதாள சாக்கடை கழிவு நீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது விரிவாக்கப்பகுதிகளிலும் மேலும் 30 கி.மீட்டர் நீளத்திற்கு கழிவு நீர் குழாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நகரின் மைப் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த தெப்பக்குளத்தை பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி குப்பைகளை கொட்டி தரம் பிரிக்க சுமார் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை நகராட்சியை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×