search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகங்கையை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நகர் மன்ற தலைவர் கோரிக்கை
    X

    சிவகங்கையை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நகர் மன்ற தலைவர் கோரிக்கை

    • சிவகங்கையை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நகர் மன்ற தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • ஆண்டு வரி வருமானம் ரூ.9.94 கோடியாக உள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கையில் சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினரிடம் சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை நகரம், வரலாற்றுச்சிறப்பு மிக்க நகரமாகும். இந்த நகராட்சியில் 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆண்டு வரி வருமானம் ரூ.9.94 கோடியாக உள்ளது. மாவட்ட தலைநகராக உள்ள சிவகங்கை நகராட்சி தரம் உயர்த்தப்படுவதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளது. எனவே சிவகங்கையை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும்.

    நகராட்சியில் கழிவு நீர் கால்வாய்கள் சேதமடைந்து உள்ளதால் மழைநீர் சாலையில் செல்கிறது. எனவே சுமார் 100 கி.மீ. நீளம் கால்வாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே 50 கி.மீட்டர் நீளத்திற்கு பாதாள சாக்கடை கழிவு நீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது விரிவாக்கப்பகுதிகளிலும் மேலும் 30 கி.மீட்டர் நீளத்திற்கு கழிவு நீர் குழாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நகரின் மைப் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த தெப்பக்குளத்தை பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி குப்பைகளை கொட்டி தரம் பிரிக்க சுமார் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை நகராட்சியை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×