என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » chidambaram flood
நீங்கள் தேடியது "chidambaram flood"
சிதம்பரம் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று பண்ருட்டியில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #PMK #AnbumaniRamadoss
பண்ருட்டி:
இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொள்ளுக்காரன் குட்டை பகுதியில் உள்ள தேசிங்கு நினைவு இடத்தில் வன்னியர் சங்கம் சார்பில் இன்று நடந்தது.
இதில் முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகி தேசிங்கு குடும்பத்துக்கு அன்புமணி ராமதாஸ் நிவாரண உதவி வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் தற்போது மின்தட்டுப்பாடு உள்ளது. இதற்கு காரணம் ஊழல்தான். அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையங்களை ஆட்சியாளர்கள் செயலிழக்க செய்து விட்டனர்.
தற்போது தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கும் முயற்சியில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கமிஷனுக்காகவும், ஊழலுக்காகவும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் தற்போது எல்லா துறையிலும் ஊழல் மலிந்து விட்டது. ஊழலில் ஈடுபட்டுள்ள அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளை உடனடியாக பதவியில் இருந்து விலக்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர் மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
குட்கா ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருக்கு கட்சியில் பதவி உயர்வு கொடுத்தது கண்டிக்கத்தக்கது.
அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் பயப்படுகிறார். ஏனென்றால் அவர் மீது நடவடிக்கை எடுத்தால் முதல்-அமைச்சர் செய்யும் ஊழல் வெளிபடும் என பயப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #PMK #AnbumaniRamadoss
இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொள்ளுக்காரன் குட்டை பகுதியில் உள்ள தேசிங்கு நினைவு இடத்தில் வன்னியர் சங்கம் சார்பில் இன்று நடந்தது.
இதில் முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகி தேசிங்கு குடும்பத்துக்கு அன்புமணி ராமதாஸ் நிவாரண உதவி வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் தற்போது மின்தட்டுப்பாடு உள்ளது. இதற்கு காரணம் ஊழல்தான். அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையங்களை ஆட்சியாளர்கள் செயலிழக்க செய்து விட்டனர்.
தற்போது தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கும் முயற்சியில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கமிஷனுக்காகவும், ஊழலுக்காகவும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் தற்போது எல்லா துறையிலும் ஊழல் மலிந்து விட்டது. ஊழலில் ஈடுபட்டுள்ள அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளை உடனடியாக பதவியில் இருந்து விலக்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர் மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
குட்கா ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருக்கு கட்சியில் பதவி உயர்வு கொடுத்தது கண்டிக்கத்தக்கது.
அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் பயப்படுகிறார். ஏனென்றால் அவர் மீது நடவடிக்கை எடுத்தால் முதல்-அமைச்சர் செய்யும் ஊழல் வெளிபடும் என பயப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #PMK #AnbumaniRamadoss
சிதம்பரம் அருகே ஏற்பட்ட வெள்ளத்தால் அரசு பள்ளிகள் கடந்த 10 நாட்களாக மூடி கிடப்பதால் மாணவர்கள் அவதியடைந்துள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து கீழணைக்கு வந்த காவிரி உபரிநீர் கொள்ளிடத்தில் அதிக அளவில் திறந்து விடப்பட்டது. இதனால் கொள்ளிடக்கரையோரம் உள்ள கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த திட்டு காட்டூர், அகரநல்லூர், அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம், பெராம்பட்டு உள்ளிட்ட 24 கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது.
அந்த கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கடும் வெள்ளப்பெருக்கால் வெள்ளம் பாதித்த கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகள் மூடப்பட்டன.
கீழணைக்கு வரும் நீர்வரத்து தற்போது குறைந்து வருகிறது. இதனால் கொள்ளிடத்தில் வெள்ளம் குறைய தொடங்கியுள்ளது. மேடான பகுதிகளில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் தாழ்வான பகுதிகளில் உள்ள அகரநல்லூர், அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம், பெராம்பட்டு, கண்டியாமேடு, எருக்கன்காட்டு பாளையம், வெள்ளூர் உள்ளிட்ட 8 கிராமங்களில் உள்ள பள்ளிகளில் தேங்கியிருந்த தண்ணீர் இன்னும் முழுமையாக வடியவில்லை. பள்ளிகளை சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் அந்த 8 கிராமங்களில் உள்ள 8 அரசு பள்ளிகளும் 10 நாட்களாகியும் இதுவரை திறக்கப்படவில்லை. மாணவர்கள் அவதியடைந்துள்ளனர். எனவே பள்ளிகளை சுற்றியுள்ள தண்ணீரை வடிய வைக்க வேண்டும். பள்ளிகளை விரைவில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து கீழணைக்கு வந்த காவிரி உபரிநீர் கொள்ளிடத்தில் அதிக அளவில் திறந்து விடப்பட்டது. இதனால் கொள்ளிடக்கரையோரம் உள்ள கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த திட்டு காட்டூர், அகரநல்லூர், அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம், பெராம்பட்டு உள்ளிட்ட 24 கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது.
அந்த கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கடும் வெள்ளப்பெருக்கால் வெள்ளம் பாதித்த கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகள் மூடப்பட்டன.
கீழணைக்கு வரும் நீர்வரத்து தற்போது குறைந்து வருகிறது. இதனால் கொள்ளிடத்தில் வெள்ளம் குறைய தொடங்கியுள்ளது. மேடான பகுதிகளில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் தாழ்வான பகுதிகளில் உள்ள அகரநல்லூர், அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம், பெராம்பட்டு, கண்டியாமேடு, எருக்கன்காட்டு பாளையம், வெள்ளூர் உள்ளிட்ட 8 கிராமங்களில் உள்ள பள்ளிகளில் தேங்கியிருந்த தண்ணீர் இன்னும் முழுமையாக வடியவில்லை. பள்ளிகளை சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் அந்த 8 கிராமங்களில் உள்ள 8 அரசு பள்ளிகளும் 10 நாட்களாகியும் இதுவரை திறக்கப்படவில்லை. மாணவர்கள் அவதியடைந்துள்ளனர். எனவே பள்ளிகளை சுற்றியுள்ள தண்ணீரை வடிய வைக்க வேண்டும். பள்ளிகளை விரைவில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X