search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chathuragiri Sundaramakalingam History"

    • ஏராளமான மருத்துவ மூலிகைகள் உள்ளன.
    • சதுரகிரியில் உள்ள சிவலிங்கம் மட்டும் சாய்ந்த கோணத்தில் இருக்கும்.

    நான்குபுறமும் மலை சூழ்ந்து இருப்பதாலும், இது சதுரமாக இருப்பதாலும் சதுரகிரி என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையில் ஏராளமான மருத்துவ மூலிகைகள் இருப்பதை தெரிந்துகொண்ட பல சித்தர்கள் இந்த இடத்தை தேர்வு செய்து தவம் செய்து வந்துள்ளனர்.

    அதோடு தங்களை தேடி வரும் பக்தர்களுக்கு தீராத நோய்களை இங்கு கிடைக்கக்கூடிய மூலிகைகளை வைத்து வைத்தியம் செய்து வந்துள்ளனர். பழனி நவபாஷான முருகன் சிலையை போகர் சித்தர் தான் செய்தார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அவர்கள் இந்த சதுரகிரியில் தங்கி இருந்து தான் அதிக சக்திவாய்ந்த நவபாஷான முருகர் சிலையை செய்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

    எல்லா சிவன் கோவில்களிலும் சிவன் சிலை நேராக இருக்கும். ஆனால் சதுரகிரியில் உள்ள சிவலிங்கம் மட்டும் சாய்ந்த கோணத்தில் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். அதற்கு இரண்டுவிதமான கதைகள் சொல்லப்படுகிறது.

    கயிலாயத்தில் சிவபெருமானின் பூதகணங்களில் ஒருவர் யாழ்வல்லதேவன். இவர் யாழ் இசைத்து சிவனை மகிழ்வித்து வந்துள்ளார். அவர் அப்சரஸ் கன்னிகை மீது காதல் வயப்பட்டார். இவர்கள் இருவருக்கும் சிற்றின்ப ஆசை ஏற்பட்டுள்ளது. இதை அறிந்துகொண்ட சிவபெருமான் கோபம் கொண்டு இரண்டுபேரும் பூமியில் மனிதர்களாக பிறந்து உங்களோட விருப்பு வெறுப்பு எல்லாம் தீர்ந்து எப்போது முக்தி அடைகிறீர்களோ அப்போது என் இடத்திற்கு திரும்பி வருவீர்கள் என்று சாபம் அளித்தார்.

    சதுரகிரி மலைக்கு அடியில் கோட்டையூரில் யாழ்வல்ல தேவன், பச்சைமாலாகவும், அப்சரஸ் கன்னிகை சடைமங்கையாக பிறந்து இரண்டுபேரும் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் பசுக்களை மேய்த்து பால் கறந்து விற்று வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

    சடை மங்கை குறிப்பிட்ட அளவு பால் கறந்து வியாபாரியிடம் கொடுத்த வாணிபம் செய்து வந்தாள். ஒருமுறை பால் எடுத்துக்கொண்டு செல்லும்போது ஒரு துறவி அவளிடம் பசிக்கிறது எனக்கு பால் தருமாறு கேட்டாள். அவளும் அந்த துறவிக்கு பருகுவதற்கு பால் கொடுத்தாள்.

    உடனே அந்த துறவி நான் தினமும் இங்கு வருவேன் எனக்கு பால் அருந்துவதற்கு கொடுத்து எனது பசியை போக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு மறுத்து பேசாமல் சடைமங்கை கணவருக்கு தெரியாமல் துறவியின் பசியை ஆற்றுவதற்கு பால் அருந்த கொடுத்து வந்தாள்.

    பால் அளவு நாட்கள் செல்ல செல்ல குறைந்து கொண்டுவருகிறது என்று வணிகர்கள் பச்சைமாலிடம் சொல்லி வந்துள்ளனர்.

    தன்னோட மனைவி தினமும் என்ன செய்கிறாள் என்று பச்சைமால் மறைந்திருந்து பார்த்தான். சடைமங்கை வழக்கம்போல் அந்த துறவிக்கு குடிப்பதற்கு பால் கொடுத்தாள். இதைபார்த்ததும் கோபம் கொண்ட பச்சைமால் மனைவியை சரமாரியாக தாக்கினான்.

    உடனே துறவி, தனக்கு இரக்கப்பட்டு குடிப்பதற்கு பால் கொடுத்த சடைமங்கை இப்படி அடிவாங்கிவிட்டாளே என்று அவளை சடைதாரி என்ற பெயரில் காவல் காக்கும் தெய்வமாக சிலையாக மாற்றிவிட்டு அந்த இடத்தைவிட்டு மறைந்துவிட்டார் துறவி.

    மனைவியை பிரிந்த பச்சைமால் தன்னோட தவறை உணர்ந்து திருந்தி சதுரகிரியில் உள்ள சுத்தநாத சித்தர், சட்டைமுனி சித்தர் ஆகியோருக்கு பசியாற பால் கொடுத்து வந்தான் பச்சைமால்.

    சதுரகிரிக்கு துறவி ஒருவர் புதிதாக வந்தார். அவரை எல்லோரும் நன்றாக உபசரித்து வந்துள்ளனர். அவருக்கு பச்சைமால் பசியாறுவதற்கு பால் கொடுத்து வந்துள்ளான். ஒருநாள் புதிதாக வந்த சித்தர் மாட்டின் மடியில் இருந்து பால் குடித்துள்ளார். சிவ பூஜைக்கு உள்ள பாலை யாரோ திருடன் குடித்துள்ளான் என்று கோபப்பட்டு ஒரு கம்பால் தலையில் அடித்தான். அதில் அந்த துறவியின் தலை உடைந்து ரத்தம் கொட்டியது.

    சட்டைமுனி பச்சைமாலுக்கு சாபம் கொடுப்பதற்காக வந்தார். உடனே துறவி உருவத்தில் வந்த சிவபெருமான்  புலித்தோல் அணிந்து அவரோட சுயரூபத்தை காட்டினார். அப்போது அந்த துறவியிடம் அவனது முன்ஜென்ம கதையையும், பெற்ற சாபத்தையும் பற்றி கூறி சாபவிமோச்சனம் அளிக்க வந்தேன் என்று சிவபெருமான் கூறினார்.

    முனிவர்கள் கேட்டுக்கொண்டதால் சுயம்புவாக சுந்தர மகாலிங்கம் என்ற பெயரில் சாய்ந்த கோணத்தில் தலையில் அடிபட்ட தழும்புடன் இன்றளவும் சதுரகிரி மலையில் ஆசி வழங்கி வருகிறார்.

    ஒரு கதையில் சிவபெருமானின் பக்தன் யாழ்வல்லதேவன் என்று சொல்லப்படுகிற மாதிரி மற்றொரு கதையில் காவல் தெய்வமான கருப்பசாமியின் காவலை சோதித்து பார்க்க நினைத்த சிவபெருமான் கருப்பசாமியின் காவலில் இருந்த ஒரு மாட்டின் பாலை திருட்டுத்தனமாக குடித்து வந்துள்ளார். இதை பார்த்த கருப்பசாமி பிரம்பால் சிவபெருமானை அடித்துள்ளார். அதனால் தான் சுந்தரமகாலிங்கத்திற்கு அடிபட்டது.

    கடமை தவறாத கருப்பசாமியை காவல் தெய்வமாக நியமித்தார் சிவபெருமான் என்றும், காவல் தெய்வமான கருப்பசாமியை வழிப்பட்ட பிறகுதான் சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்க முடியும்.

    எந்த இடத்திலேயும் இல்லாத அளவுக்கு சதுரகிரி மலையில் மட்டும் தான் இரட்டை லிங்கங்கள் ஒரே இடத்தில் காணப்படுகிறது.

    ×