search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central Government Office"

    • சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான போர்ட் டிரஸ்ட் வரி பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
    • சொத்து வரி செலுத்தாத மற்ற நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

    சென்னை:

    சொத்து வரி பாக்கி வைத்துள்ள கட்டடங்கள் மீது, சென்னை மாநகராட்சி வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அந்த வகையில், சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான போர்ட் டிரஸ்ட் வரி பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. வரி பாக்கி குறித்து பல முறை தகவல் தெரிவித்தும் இன்னும் அந்த தொகை செலுத்தப்படவில்லை என தெரிகிறது.

    இந்நிலையில், நிலுவையில் உள்ள ரூ.10.37 கோடி சொத்து வரியை செலுத்தவில்லை என்பதால், மத்திய அரசு அலுவலகமான போர்ட் டிரஸ்டுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. குறிப்பிட்ட அவகாசத்திற்குள் வரி செலுத்தவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

    வரி பாக்கி தொகை செலுத்தவில்லை எனில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதேபோல், சொத்து வரி செலுத்தாத மற்ற நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

    மத்திய அரசின் காவிரி செயல் திட்டத்தை கண்டித்து புதுவையில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காவிரி மீட்பு குழுவினர் கைது செய்யப்பட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் தமிழ்நாடு, புதுவைக்கு துரோகம் செய்யும் மத்திய அரசின் காவிரி செயல் திட்டத்தை கண்டித்தும், கர்நாடகத்தின் அணைகளை திறந்து மூடும் அமைப்பை உருவாக்க கோரியும், காவிரி தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி அதிகாரம் உள்ள அமைப்பை சட்டப்படி உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசின் ஆவண காப்பகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி போராட்டம் நடத்த ஜீவானந்தபுரத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலத்துக்கு ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மணிபாரதி முன்னிலை வகித்தார்.

    ஊர்வலம் ஆவண காப்பகம் அருகே சென்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால், தடுப்பை மீறி போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றபோது அவர்களை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ×