search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cell Phones Recovery"

    • மதுரையில் திருடு போன 265 செல்போன்கள் மீட்கப்பட்டன.
    • போலீஸ் கமிஷனர் ஒப்படைத்தார்.

    மதுரை

    மதுரையில் செல்போன் திருட்டு தொடர்கதையாக நடந்து வருகிறது. இதன் குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் துணை கமிஷனர்கள் சாய் பிரனீத் (தெற்கு), அரவிந்த் (வடக்கு), கவுதம் கோயல் (தலைமையிடம்) ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    அவர்கள் சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன் பயனாக திருடுபோன 265 செல்போன்கள் மீட்கப்பட்டன.

    தல்லாகுளம் சரகத்தில் மட்டும் 106 செல்போன்களும், அண்ணாநகரில் 64 செல்போன்களும், திடீர் நகரில் 42 செல்போன்களும் மீட்கப்பட்டது. இதே போன்று செல்லூர்-17, மீனாட்சி அம்மன் கோவில் சரகம்-13, அவனியாபுரம்-9, திருப்பரங்குன்றம்-4, தெற்கு வாசல்-6 செல்போன்களும் மீட்கப்பட்டன.

    மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் கலந்து கொண்டு செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

    இதில் இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
    • திருப்பத்தூர் எஸ்.பி. எச்சரிக்கை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகார்களை பெற்று வழக்கு பதிவு செய்து அதன் விவரங்களை திருப்பத்தூர் மாவட்ட சைபர் செல் பிரிவிற்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    சைபர் செல் பிரிவினர் மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து செல்போன் தொலைத்தவர்களின் 170 செல்போன்களை சைபர் செல் பிரிவினர் கண்டுபிடித்தனர்.

    மேலும் கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை உரியவரிடம் வழங்கும் நிகழ்ச்சி ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வரவேற்றார். ஆயுதப்படை டிஎஸ்பி விநாயகம், சைபர் செல் பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து செல்போன்களை தொலைத்த செல்போன் உரிமையாளர்கள் மற்றும் அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    இதனை அடுத்து போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் செல்போன் உரிமையாளர்களை அழைத்து உரியவரிடம் ஒப்படைத்தார். இதனை பெற்றுக் கொண்ட செல்போன் உரிமையாளர்கள் போலீசாருக்கு நன்றியை தெரிவித்தனர்.

    இதனை அடுத்து தொலைந்த செல்போன்களை துரிதமாக செயல்பட்டு செல்போன்களை மீட்ட சைபர் செல் பிரிவு போலீசாரை எஸ்பி ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார்.

    சட்ட விரோதமாக திருட்டு செல்போன்களை விற்பனை செய்வதும் அதை வாங்கி உபயோகிப்பதும் சட்டப்படி குற்றமாகும்.

    இது போன்ற செயல்களில் யாராவது ஈடுபடுவது சம்பந்தமாக தகவல் கிடைக்கப்பெற்றால் உடனடியாக அந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும்.

    மேலும் 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் உதவி எண் மற்றும் வாட்ஸ் அப் எண் 9442992526 போன்றவற்றிற்கு புகார் தெரிவிக்கலாம்.

    மேலும் புகார் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் கடந்த 2021 -ம் ஆண்டில் 17 லட்சத்து 10 ஆயிரத்து 800 மதிப்புள்ள 100 செல்போன்களும், 2022-ல் 37 லட்சத்து 49 ஆயிரம் மதிப்புள்ள 163 செல்போன்களும், 2023 கடந்த 3 மாதத்தில் 40 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான 170 செல்போன்கள் என மொத்தமாக 58 லட்சத்து 67 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பில் 433 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

    • ரூ.37.50 லட்சம் மதிப்பிலான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது
    • பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் பல்வேறு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன்கள் காணாமல் போனதாக அந்தந்த போலீஸ் நிலை யங்களுக்கு கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் விவரங்களை திருப்பத்தூர் மாவட்ட சைபர் செல் பிரிவில் மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டு மனுக்கள் மீது போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட னர்.

    மேலும் மாவட்டம் முழுவதும் 37 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 163 செல்போன்களை கண்டுபிடித்தனர்.

    கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை உரியவரிடம் வழங்கும் நிகழ்ச்சி ஜோலார்பேட்டை அருகே உள்ள பால்னாங்குப்பம் கூட்ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி மாவட்ட முழுவதும் செல்போன்க ளை தவறவிட்ட 163 நபர்களை வரவழைத்து அவர்களின் செல்போன்களை நேரடியாக உரியவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் பொதுமக்களிடம் எஸ்.பி. பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

    சட்டவிரோதமாக திருட்டு செல்போன்களை விற்பனை செய்வதும் அதை வாங்கி சிம்கார்டு போட்டு உபயோகிப்பதும் சட்டப்படி குற்றமாகும்.

    இது போன்ற செயல்களில் எவரேனும் ஈடுபடுவது சம்பந்தமாக எந்த ஒரு தகவல் கிடைக்கப் பெற்றாலும் உடனடியாக அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்க வேண்டும்.

    இது மட்டுமல்லாமல் 24 மணி நேரமும் காவல் கண்காணிப்பாளர் அலுவலக காவல் உதவி எண் மற்றும் வாட்ஸ் அப் எண் 9442992526 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். மேலும் புகாரின் மீது உடனடியாக சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

    மேலும் செல்போன்களை இழந்த பயனாளிகள் அனைவரும் மீட்டுக் கொடுத்த போலீசாருக்கு நன்றியை தெரிவித்தனர். இதற்கு முன்னதாக சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேமா ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர் ஏற்படுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மங்கை யர்க்கரசி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்தும் புகார் அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    நிகழ்ச்சியின் போது ஏ.டி.எஸ்.பி.புஷ்பராஜ், திருப்பத்தூர் டிஎஸ்பி கணேஷ், வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன், ஆம்பூர் டிஎஸ்பி சரவணன், ஆயுதப்படை டிஎஸ்பி விநாயகம் உள்ளிட்ட இன்ஸ்பெக்டர்கள், செல்போனை தவறவிட்ட பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜோலார்பேட்டை தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் நன்றி கூறினார்.

    ×