search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauvery water problem"

    காவிரி நதிநீர் பிரச்சினையில் ஜெயலலிதா வழியில் தீர்வுகண்டவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். #ADMK #sengottaiyan #EdappadiPalanisamy
    ஈரோடு:

    ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் காவிரி உரிமை மீட்பு போராட்ட வெற்றி விழா விளக்க பொதுக்கூட்டம் ஈரோடு அடுத்த காலிங்கராயன் பாளையத்தில் நடந்தது.

    எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், தென்னரசு, செல்வகுமார சின்னையன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார்.

    ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன் என சட்டமன்றத்தில் சூளுரைத்தவர் நமது இதய தெய்வம் ஜெயலலிதா. எனக்கு பிறகும் கழகம் 100 ஆண்டுகள் சட்டமன்றத்தில் இருக்கும் என குறிப்பிட்டார்.

    காவிரி நதிநீர் பிரச்சினையில் மக்களை ஏமாற்ற தி.மு.க. செய்யும் நாடகம் பொதுமக்களிடம் எடுபடாது.

    காவிரி நதிநீர் பிரச்சினையில் ஜெயலலிதா வழியில் தீர்வுகண்டவர் நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அவரது வழியில் காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டு வெற்றி பெற்றுள்ளார்.



    தமிழர்களின் ஜீவாதார உரிமையை பெற்று தரும் ஒரே அரசு அ.தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் மக்கள் சிறப்புடன் வாழ திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் தங்குதடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்ட அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. கொங்கு மண்டலம் எப்போதும் அ.தி.மு.க.வின் கோட்டைதான். இந்த கோட்டையை எவராலும் கிட்ட நெருங்க முடியாது.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #ADMK #sengottaiyan #EdappadiPalanisamy
    காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது கர்நாடகாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். #CauveryManagementBoard #Vaiko

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் கண்மூடித் தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக காவரி நீரை திறக்க மாட்டார்கள் என ஏற்கனவே கூறினேன்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது கர்நாடகாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அணை பாதுகாப்பு, சி.ஆர்.பி.எப். வீரர்களை பாதுகாப்புக்காக நிறுத்துவது போன்ற எந்த அதிகாரமும் இல்லாமல் அதிகாரமற்ற அமைப்பாக காவிரி மேலாண்மை வாரியம் உள்ளது.

    தற்போது உள்ள சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மாறும் வரை நமக்கு நீதி கிடைக்காது.

    முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் அணை பாதுகாப்பாக உள்ளது என ஆய்வு செய்து கூறி உள்ளனர். ஆனால் இதுகுறித்து தமிழக அரசு எந்த முயற்சியும் மேற் கொள்ளவில்லை.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #CauveryManagementBoard #Vaiko

    ×