என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டவர் எடப்பாடி பழனிசாமி- அமைச்சர் செங்கோட்டையன்
By
மாலை மலர்25 Jun 2018 6:45 AM GMT (Updated: 25 Jun 2018 6:45 AM GMT)

காவிரி நதிநீர் பிரச்சினையில் ஜெயலலிதா வழியில் தீர்வுகண்டவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். #ADMK #sengottaiyan #EdappadiPalanisamy
ஈரோடு:
ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் காவிரி உரிமை மீட்பு போராட்ட வெற்றி விழா விளக்க பொதுக்கூட்டம் ஈரோடு அடுத்த காலிங்கராயன் பாளையத்தில் நடந்தது.
எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், தென்னரசு, செல்வகுமார சின்னையன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார்.
ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன் என சட்டமன்றத்தில் சூளுரைத்தவர் நமது இதய தெய்வம் ஜெயலலிதா. எனக்கு பிறகும் கழகம் 100 ஆண்டுகள் சட்டமன்றத்தில் இருக்கும் என குறிப்பிட்டார்.
காவிரி நதிநீர் பிரச்சினையில் மக்களை ஏமாற்ற தி.மு.க. செய்யும் நாடகம் பொதுமக்களிடம் எடுபடாது.

தமிழர்களின் ஜீவாதார உரிமையை பெற்று தரும் ஒரே அரசு அ.தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் மக்கள் சிறப்புடன் வாழ திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் தங்குதடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்ட அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. கொங்கு மண்டலம் எப்போதும் அ.தி.மு.க.வின் கோட்டைதான். இந்த கோட்டையை எவராலும் கிட்ட நெருங்க முடியாது.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #ADMK #sengottaiyan #EdappadiPalanisamy
ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் காவிரி உரிமை மீட்பு போராட்ட வெற்றி விழா விளக்க பொதுக்கூட்டம் ஈரோடு அடுத்த காலிங்கராயன் பாளையத்தில் நடந்தது.
எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், தென்னரசு, செல்வகுமார சின்னையன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார்.
ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன் என சட்டமன்றத்தில் சூளுரைத்தவர் நமது இதய தெய்வம் ஜெயலலிதா. எனக்கு பிறகும் கழகம் 100 ஆண்டுகள் சட்டமன்றத்தில் இருக்கும் என குறிப்பிட்டார்.
காவிரி நதிநீர் பிரச்சினையில் மக்களை ஏமாற்ற தி.மு.க. செய்யும் நாடகம் பொதுமக்களிடம் எடுபடாது.
காவிரி நதிநீர் பிரச்சினையில் ஜெயலலிதா வழியில் தீர்வுகண்டவர் நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அவரது வழியில் காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டு வெற்றி பெற்றுள்ளார்.

தமிழர்களின் ஜீவாதார உரிமையை பெற்று தரும் ஒரே அரசு அ.தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் மக்கள் சிறப்புடன் வாழ திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் தங்குதடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்ட அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. கொங்கு மண்டலம் எப்போதும் அ.தி.மு.க.வின் கோட்டைதான். இந்த கோட்டையை எவராலும் கிட்ட நெருங்க முடியாது.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #ADMK #sengottaiyan #EdappadiPalanisamy
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
