search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "carrying"

    பொன்னமராவதியில்ரூ.4.50 லட்சம் மதிப்பிலான கம்பி திருடியவர் கைது; லாரி பறிமுதல்

    பொன்னமராவதி.  

    பொன்னமராவதி - புதுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் ஸ்டீல் கடையில் ரூ.4.50 லட்சம் மதிப்பிலான கம்பிகள் திருடப்பட்டு விட்டதாக கடையின் உரிமையாளர் சாதிக் பாட்சா அளித்த புகாரின் பேரில் பொன்னமராவதி போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான காவல்து றையினர் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட தடயங்களை கைபற்றி தொடர்ந்து நடத்திய விசாரணையில் கம்பிகளை திருடிய புதுக்கோட்டை பூசத்துறையை சேர்ந்த டீசல்முருகேசன்(வயது 54) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த ரூ.4.50 லட்சம் மதிப்பிலான கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட டீசல் முருகேசன் இதே போன்ற 77 கம்பித்திருட்டு வழக்கில் தேடப்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
    • சுரங்கத்துறை உதவி புவியியலாளர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சிலால் நால்ரோடு பகுதியில் அரியலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் ராமஜெயம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை வழிமறித்து சோதனை செய்தபோது, அரசு அனுமதி இல்லாமல் 2 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து டிப்பர் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தா.பழூர் போலீசாருக்கு சுரங்கத்துறை அதிகாரி ராமஜெயம் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திலிருந்து கூழாங்கற்கள் கடத்திவரப்பட்ட டிப்பர் லாரியை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்"

    பாலக்காடு மாவட்டம் எடவானியில் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை சாலை வசதி இல்லாததால் 5 கி.மீ. தூரம் தொட்டில் கட்டி தூக்கிக்கொண்டு அவரது உறவினர்கள் கோட்டதுறை மருத்துவமனையில் சேர்த்தனர்.
    திருவனந்தபுரம்:

    மேட்டுப்பாளையத்தை அடுத்த கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டபாடி அருகே எடவானி என்னும் மலை கிராமம் உள்ளது.

    இங்கு ஆதிவாசி, பழங்குடி இனத்தை சேர்ந்த 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சாலை வசதி இல்லாததால் இம் மலை கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், கல்வி கற்கவும், மருத்துவமனை செல்லவும் சுமார் 5 கி.மீ. தூரம் நடந்து அட்டப்பாடியில் உள்ள கோட்டத்துறைக்கு தான் செல்ல வேண்டும்.

    இந்த பாதையில் 5 இடங்களில் வரகை ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த நிலையில் எடவானியில் வசித்து வரும் பழனி என்பவரது மனைவி மணி (28) 4-வது முறையாக கர்ப்பம் தரித்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    வீட்டில் வைத்து பிரசவம் பார்க்க முயன்றனர். அதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே கர்ப்பிணியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர்.



    சாலை வசதி இல்லாத நிலையில் கர்ப்பிணியை மூங்கிலில் தொட்டில் கட்டி சுமந்து செல்ல தீர்மானித்தனர். அதன்படி மணியை தொட்டில் கட்டி தூக்கி கொண்டு உறவினர்கள் ஓட்டமும், நடையுமாக அட்டபாடியில் கோட்டதுறை மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர்.

    மருத்துவமனையில் மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    சாலை வசதி இல்லாத நிலையில் இது போன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் நோயாளிகள் பலரையும் தொட்டில் கட்டிதான் மருத்துவமனைக்கு கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலை மாற பாலக்காடு மாவட்ட நிர்வாகம் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    ×