search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "carried"

    • போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.
    • மோப்ப நாய்கள் கொண்டு சோதனை செய்யப்படுகிறது.

    கோவை

    குடியரசு தின விழா நாளை மறுநாள் (வியாழக்கி ழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கோவை மாநகரில் குடியரசு தின விழா நடைபெறும் வ.உ.சி. மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் வழிபா ட்டுத் தலங்கள் ரெயில் நிலையங்கள், பஸ் நிலைய ங்கள் விமான நிலையம் ஆகியவற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரெயில் நிலையத்தில் போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் எவ்வாறு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறா ர்கள் என கேட்டறிந்தார். மேலும் ரெயில் நிலைய த்திற்கு வரும் பயணிகளின் உடமைகளை சோதனை செய்யும் ஸ்கேனர் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.பின்னர் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது

    கோவை மாநகரில் குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மத்திய ரெயில் நிலையம், போத்தனூர், சிங்கா நல்லூர், வடகோவை ரெயில் நிலையங்கள், காந்திபுரம், சிங்காநல்லூர் பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ரெயில் நிலையத்தில் 24 மணி நேரமும் மோப்ப நாய்கள் கொண்டு சோதனை செய்யப்படுகிறது. பயணிகளின் உடைமைகளும் சோத னை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்க ப்படுகிறார்கள். பயணிகள் பாதுகாப்புக்கு எந்தவித சுணக்கம் இல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.பார்சல்கள் அனைத்தும் திறந்து பார்த்த பின்னர் தான் அனுப்பு அறிவுறு த்தப்பட்டுள்ளது. குடியரசு தினம் முடியும் வரை இந்த நடைமுறைகள் இருக்கும்.பாதுகாப்பு தொடர்பா ன வழக்குகளில் சம்மந்தப்ப ட்டவர்கள் கண்காணிப்பில் உள்ளார்கள்.மாநகரில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    லாட்ஜ்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அங்கு தங்குபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. விபரங்களை சேகரிக்காத லாட்ஜ் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாநகர எல்லைகளில் உள்ள 11 சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாநகர முக்கிய இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆந்திராவில் சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்ணை போர்வையில் தொட்டில் கட்டி 6 கி.மீ. தூரம் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். #AndhraPregnantWoman #AndhraRoad
    விசாகப்பட்டினம்:

    ஆந்திர மாநிலம்  விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது அனுக்கு கிராமம். பழங்குடியின மக்கள் வாழும் இந்த மலை கிராமத்திற்கு முறையான சாலை வசதிகள் இல்லை. எனவே, வாகன போக்குவரத்து கிடையாது. அந்த கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு அருகில் உள்ள ஊர்களுக்கு நடந்தே செல்கின்றனர்.



    இந்நிலையில், அனுக்கு கிராமத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. சாலை வசதி இல்லாததால் அந்த கிராமத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வர முடியவில்லை. இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து போர்வையில் தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர். சுமார் 6 கி.மீ. தூரம் இவ்வாறு தூக்கி வரப்பட்ட அந்த கர்ப்பிணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி கேள்விப்பட்ட தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. அனிதா, வருத்தம் தெரிவித்துள்ளார். #AndhraPregnantWoman #AndhraRoad
    ×