search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Candlelight Tribute"

    • வீரவணக்கம் செலுத்தப்பட்டது
    • பலர் கலந்து கொண்டனர்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு தெற்கு மாவட்ட பாமக செயலாளர் ஏந்தல் பக்தவச்சலம் தலைமையில் மெழுகுச் சுடர் ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

    இதில் மாநில செயற்குழு உறுப்பினர் இரா.காளிதாஸ், முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், வக்கீல் ஆனந்தன், மாவட்ட பொருளாளர் வீரம்மாள், மாவட்ட துணை செயலாளர் கான்டீபன், நகர செயலாளர்கள் உதயகுமார், கார்த்திகேயன், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் பாலு, ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், ராஜ்குமார், நகர தலைவர் ரவி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி, கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
    • அவனியாபுரம் பஸ் நிலையம் முன்பாக பகுதி செயலாளர் ஆட்டோ கருப்பையா தலைமையில் நடந்தது.

    அவனியாபுரம்

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவனியாபுரம் பஸ் நிலையம் முன்பாக பகுதி செயலாளர் ஆட்டோ கருப்பையா தலைமையில் வட்ட கழக செயலாளர் கொம்பையா முன்னிலையில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் கண்ணன், மகாலிங்கம், பவுண்டு ராஜ், வட்டச் செயலாளர் கமலக்கண்ணன், பகுதி இளைஞரணி செயலாளர் ஓம் ஜெயபிரகாஷ், அம்மா பேரவை செயலாளர் பைபாஸ் ரமேஷ், வெள்ளூர் கார்த்திகேயன், ராதா, முத்து, கணேசத்தேவர், திருப்பதி, ஆட்டோ ராஜ கோபால், கலைப் பிரிவு முத்துப்பாண்டி மற்றும் அவனியாபுரம் கிழக்கு மேற்கு மத்திய பகுதி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ×