search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ம.க.வினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
    X

    பா.ம.க.வினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

    • வீரவணக்கம் செலுத்தப்பட்டது
    • பலர் கலந்து கொண்டனர்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு தெற்கு மாவட்ட பாமக செயலாளர் ஏந்தல் பக்தவச்சலம் தலைமையில் மெழுகுச் சுடர் ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

    இதில் மாநில செயற்குழு உறுப்பினர் இரா.காளிதாஸ், முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், வக்கீல் ஆனந்தன், மாவட்ட பொருளாளர் வீரம்மாள், மாவட்ட துணை செயலாளர் கான்டீபன், நகர செயலாளர்கள் உதயகுமார், கார்த்திகேயன், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் பாலு, ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், ராஜ்குமார், நகர தலைவர் ரவி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி, கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×