search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bull Tamer"

    ஈரோட்டில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு பெருந்துறை ரோட்டில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளி மைதானத்தில் வரும் 19-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு நடக்கிறது. #Jallikattu
    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மற்றும் தேனி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடக்கும்.

    தென் தமிழகத்தில் நடந்து வரும் இந்த ஜல்லிக்கட்டு இப்போது வட தமிழகத்திலும் நடந்து வருகிறது.

    கடந்த ஆண்டு கோவையில் பாலக்காடு மெயின் ரோட்டோரம் முதன் முதலாக ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த ஆண்டு ஈரோட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    ஈரோட்டில் முதன்முறையாக ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளி மைதானத்தில் வரும் 19-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு நடக்கிறது.

    இதற்காக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் தயார் செய்யப்பட்டு வாடிவாசலும் அமைக்கப்பட்டு உள்ளது.

    மாடுகள் பாய்ந்துவரும் இடமும் தயாராகி இரு புறமும் பொதுமக்கள் ஜல்லிக்கட்டை பார்த்து மகிழவும் இடம் தயாராக அமைக்கப்பட்டு தடுப்பு கம்புகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஈரோட்டில் முதன் முதலாக ஜல்லிக்கட்டு நடக்க இருப்பதையொட்டி மாடுபிடி வீரர்கள் தயாராகி வருகிறார்கள். இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்கள் போட்டியில் பங்கேற்க பெயர் கொடுத்து உள்ளனர். இவர்கள் தற்போது அதற்கான பயிற்சியிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் ஜல்லிக்கட்டு முதன்முறையாக ஈரோட்டில் நடக்க இருப்பதையொட்டி அதை நேரில் காண பொதுமக்களும் ஆர்வமாக உள்ளனர்.

    ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்கள்.

    மேலும் மாவட்ட கலெக்டர் கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட துறை அதிகாரிகளும் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண்கிறார்கள். #Jallikattu

    பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டியின்போது காயமடைந்த வீரர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற மறுத்து வெளியேறினார். #Jallikattu #BullTamerInjured
    பாலமேடு:

    மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டில் சுமார் 900 காளைகள் பங்கேற்றுள்ளன. காளைகளை அடக்குவதற்கு சுமார் 800 வீரர்கள் களமிறங்கி உள்ளனர். காளைகளை அடக்கும் வீரருக்கும், காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

    இன்றைய ஜல்லிக்கட்டில் பெரும்பாலான பரிசுகள் காளை வளர்ப்போருக்கு சென்றவண்ணம் உள்ளன. வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகள், மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் மிரட்டுவதை காண முடிகிறது. சில காளைகள், வீரர்களை ஆக்ரோஷமாக முட்டி தாக்கின.



    இவ்வாறு காளைகளை அடக்க முயன்று காயமடைந்த வீரர்களுக்கு, அங்குள்ள மருத்துவக் குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்து வருகின்றனர். தேவைப்பட்டால், மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். அவ்வகையில் காளை முட்டியதில் பலத்த காயமடைந்த ஒரு வீரருக்கு, மேல் சிகிச்சை தேவைப்பட்டதால், அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

    ஆனால், காயமடைந்த வீரர், அரசு மருத்துவமனைக்கு செல்ல மறுத்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்வதாக கூறி அந்த இடத்தில் இருந்து அவசரம் அவசரமாக சென்றுவிட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #Jallikattu #BullTamerInjured
    ×