search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bore wells"

    • 27 பஞ்சாயத்துகளிலும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • திசையன்விளையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திசையன்விளை:

    ராதாபுரம் யூனியன் பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டினை தீர்க்கும் வகையில், 'நீரோ 65' என்ற திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள், நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், நெல்லை திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் யூனியனில் உள்ள 27 பஞ்சாயத்துகளிலும் போர்க்கால அடிப்படையில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய தீவிரமான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஊராட்சி நிதி, ஊராட்சி ஒன்றிய நிதி மற்றும் ஊராட்சி நிதிகளின் கீழ் பணிகள் எடுக்கப்பட்டு சீரிய முறையில் நடைபெற்று வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக உதயத்தூர் பஞ்சாயத்தில் நீரோ 65 திட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்படுவதை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், ''ராதாபுரம் யூனியன் பகுதியில் ஆண்டு முழுவதும் மக்களுக்கு பயன்படும் வகையில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது. விரைவில் அனைத்து ஆழ்துளை கிணறுகளும், பைப்லைன்களும் அமைக்கப்பட்டு இந்த திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்'' என்று கூறினார்.

    ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, மாவட்ட பிரதிநிதிகள் கோவிந்தன், வேலப்பன், ஒன்றிய கவுன்சிலர் படையப்பா முருகன், இசக்கிபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராதாபுரம் யூனியன் பகுதிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. திசையன்விளையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நவ்வலடியில் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நவ்வலடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆயங்குளத்தில் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து ராதாபுரம் யூனியன் துணைத்தலைவர் இளையபெருமாள் ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் வழங்கினார். விழாவில் பஞ்சாயத்து தலைவர்கள் ராதிகா சரவணகுமார், ஆனந்தகுமார், சாந்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.1.5 கோடிக்கு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
    • ரூ.4 கோடி வரையில் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் வழங்கப்பட உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் இன்று மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து தலை வர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தலைமை தாங்கி னார். செயலர் சுப்பிர மணியன் முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து மாவட்ட பஞ்சாயத்து சார்பில் செய்யப்பட்டுள்ள பணிகள், வரவு-செலவு உள்ளிட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் பேசியதாவது:-

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.1.5 கோடிக்கு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கவுன்சிலருக்கும் தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.4 கோடி வரையில் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் வழங்கப்பட உள்ளது. அந்த தொகையை வைத்து கவுன்சிலர்கள் தங்களது பகுதிக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளை தேர்வு செய்து அங்கு அத்தியாவசிய பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதியை செலவு செய்யலாம்.

    அனைத்து கவுன்சி லர்களும் தங்களது பகுதிக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் முக்கிய தேவைகள் குறித்து தேர்வு செய்து அதற்கான ஆவணங்களை மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் 10 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    தற்போது நெல்லை மாவட்டத்தில் பருவமழை சரியாக பெய்யாத காரணத்தினால் வறட்சி ஏற்படும் நிலை உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும். எனவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை குடிதண்ணீருக்கு முக்கியத்துவம் அளித்து ஆழ்துளை கிணறு அமைத்தல், மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்தல், குழாய் பதித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    மாவட்டம் முழுவதும் உள்ள 204 பஞ்சாயத்துகளில் குறிப்பிட்ட வறட்சி கிராமங்களை தேர்வு செய்து 50 ஆழ்துளை கிணறுகள் வரை அமைக்க வேண்டும். மேலும் நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சா யத்துகளில் பணியாற்றும் சுமார் 1,497 தூய்மை பணியாளர் களுக்கு மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து கையுறைகள், ஆடைகள் உள்ளிட்ட வற்றை ஒரு மாதத்துக்குள் வழங்கு வதற்கு ஏற்பாடு செய்ய ப்பட்டு வருகிறது. அவற்றை கலெக்டர் கார்த்திகேயன், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் தலை மையில் வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் சாலமோன் டேவிட், கனகராஜ், கிருஷ்ணவேணி, தனித் தங்கம், மகேஷ் குமார், பாஸ்கர், அருண் தவசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×