search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் வறட்சி கிராமங்களை தேர்வு செய்து  ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும்- மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் பேச்சு
    X

    மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் அதன் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமையில் நடைபெற்றதையும், கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்களையும் படத்தில் காணலாம்.

    நெல்லை மாவட்டத்தில் வறட்சி கிராமங்களை தேர்வு செய்து ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும்- மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் பேச்சு

    • ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.1.5 கோடிக்கு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
    • ரூ.4 கோடி வரையில் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் வழங்கப்பட உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் இன்று மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து தலை வர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தலைமை தாங்கி னார். செயலர் சுப்பிர மணியன் முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து மாவட்ட பஞ்சாயத்து சார்பில் செய்யப்பட்டுள்ள பணிகள், வரவு-செலவு உள்ளிட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் பேசியதாவது:-

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.1.5 கோடிக்கு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கவுன்சிலருக்கும் தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.4 கோடி வரையில் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் வழங்கப்பட உள்ளது. அந்த தொகையை வைத்து கவுன்சிலர்கள் தங்களது பகுதிக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளை தேர்வு செய்து அங்கு அத்தியாவசிய பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதியை செலவு செய்யலாம்.

    அனைத்து கவுன்சி லர்களும் தங்களது பகுதிக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் முக்கிய தேவைகள் குறித்து தேர்வு செய்து அதற்கான ஆவணங்களை மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் 10 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    தற்போது நெல்லை மாவட்டத்தில் பருவமழை சரியாக பெய்யாத காரணத்தினால் வறட்சி ஏற்படும் நிலை உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும். எனவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை குடிதண்ணீருக்கு முக்கியத்துவம் அளித்து ஆழ்துளை கிணறு அமைத்தல், மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்தல், குழாய் பதித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    மாவட்டம் முழுவதும் உள்ள 204 பஞ்சாயத்துகளில் குறிப்பிட்ட வறட்சி கிராமங்களை தேர்வு செய்து 50 ஆழ்துளை கிணறுகள் வரை அமைக்க வேண்டும். மேலும் நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சா யத்துகளில் பணியாற்றும் சுமார் 1,497 தூய்மை பணியாளர் களுக்கு மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து கையுறைகள், ஆடைகள் உள்ளிட்ட வற்றை ஒரு மாதத்துக்குள் வழங்கு வதற்கு ஏற்பாடு செய்ய ப்பட்டு வருகிறது. அவற்றை கலெக்டர் கார்த்திகேயன், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் தலை மையில் வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் சாலமோன் டேவிட், கனகராஜ், கிருஷ்ணவேணி, தனித் தங்கம், மகேஷ் குமார், பாஸ்கர், அருண் தவசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×