search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bitter Gourd"

    ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது பாகற்காய். இந்தியாவில் மட்டுமல்ல, சீனாவிலும்கூட நீரிழிவு நோயாளிகள் அதிகம் தேடும் காய் பாகற்காய்தான்.
    ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது பாகற்காய் என நிறைய மருத்துவ சான்றுகள் வெளிவந்துவிட்டன. இந்தியாவில் மட்டுமல்ல, சீனாவிலும்கூட நீரிழிவு நோயாளிகள் அதிகம் தேடும் காய் பாகற்காய்தான். அதில் உள்ள சரண்டின், மொமார்டின் போன்ற தாவர நுண்கூறுகள்தான் இந்த மருத்துவ செயல்பாட்டுக்கு காரணம் என்று சான்றளித்துள்ளனர்.

    அதே நேரத்தில், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துதல் என்பது வெறும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் மட்டும் என்று புரிந்துகொள்ளக்கூடாது. உடனடியாக ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் ஒரு பொருள், நீரிழிவு நோய்க்கான முழுமையான மருந்தல்ல. பாகற்காய் ரத்த கொழுப்பு வகையை குறைப்பதிலும், செல் அழிவை கட்டுப்படுத்தும் ஆன்ட்டி ஆக்ஸிடண்டையும் கொண்டிருப்பது தனிச்சிறப்பு.

    பாகற்காய் சாப்பிடுவதால் நீங்கள் சாப்பிடும் பிற நவீன மருந்துகளின் செயல்பாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதே நேரம் பல சித்த மருந்துகளுக்கு பத்தியமாக பாகற்காய் அறிவுறுத்தப்படுகிறது. சித்த மருந்து எடுத்துக்கொள்ளும் காலத்தில் உங்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு பின், பாகற்காய் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கலாம்.

    அதிக சர்க்கரையை சாப்பிடுவது, உடலுழைப்பு குறைவு, அதிக உடல் எடை அல்லது அதிக மனஉளைச்சல் ஆகியவை மட்டுமே நீரிழிவு நோய்க்கான முழுமையான காரணம் இல்லை. ஆனால் 1960-க்கு பின்பு பல மில்லியன் டன் உரங்களை பூமியில் கொட்டியதுடன், பூச்சிக்கொல்லிகள் மூலம் உணவுப் பயிர் விளைவித்ததால் இந்த நோய் பெருகியதா, பாஸ்சுரைஸ்டு என்ற பாலில் உள்ள ஒரு புரதம் கணையத்தைத் துன்புறுத்தியதால் பிறக்கிறதா, இல்லை நம் சுற்றுச்சூழலில் கண்ணுக்கு தெரியாத வைரஸ்கள் நமது கணையத்து ஐலட் செல்களை சிதைத்ததால் தாக்கம் பெருவாரியாகப் பெருகுகிறதா? எனப் பல்வேறு ஆய்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன.

    எனவே, நீங்கள் எந்தத் துறை சார்ந்த மருந்துகளை உட்கொண்டுவந்தாலும், உணவில் கவனம், சரியான உடற்பயிற்சி, உள்ளத்தையும் உடலையும் ஒருங்கே சீரமைக்கும் யோகாசன பயிற்சி ஆகிய அனைத்தும் சேர்ந்திருந்தால் மட்டுமே படிப்படியாக சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். அதற்கு பாகற்காய் மிகவும் உதவுகிறது.

    பாகற்காய் நன்மைகளை மட்டும்தான் வழங்குகிறதா என்ற கேள்வி எழும்போது அதற்கு இல்லை என்பதுதான் பதில். ஏனெனில் பாகற்காய் சாப்பிடுவது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.
    நமது அன்றாட உணவில் மிக அரிதாக சேர்க்கும் ஒரு காய் என்றால் அது பாகற்காய்தான். குறிப்பாக இது சர்க்கரை நோய்க்கு எதிராக எப்படி செயல்படக்கூடியது என்பதை நாம் நன்கு அறிவோம். சர்க்கரை நோய் மட்டுமின்றி இது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. இருப்பினும் நாம் இதை தவிர்க்க காரணம் அதன் கசப்பு சுவைதான்.

    பாகற்காய் நன்மைகளை மட்டும்தான் வழங்குகிறதா என்ற கேள்வி எழும்போது அதற்கு இல்லை என்பதுதான் பதிலாக அமைகிறது. ஏனெனில் பாகற்காய் சாப்பிடுவது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பாகற்காய் சாப்பிடுவது என்னென்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை பார்க்கலாம்.

    கர்ப்பிணி பெண்கள் பாகற்காய் சாப்பிடக்கூடாது என்பது பொதுவாக நிலவி வரும் கருத்து ஆகும். இது 100 சதவீத உண்மையான கருத்தாகும். அதிகளவு பாகற்காய் சாப்பிடுவது கர்ப்பிணி பெண்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் கசப்பு சுவை சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும், பொதுவாகவே கசப்பு சுவை உள்ள காய்கறிகளை கர்ப்ப காலத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. பாகற்காய் அதிகம் சாப்பிடுவது கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவை கூட ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

    பாகற்காய் போன்ற காய்கறிகள் சாப்பிடுவது சில மருந்துகளால் உங்கள் உடலில் ஏற்படும் சில மாற்றங்களை தடுக்கும். மாத்திரைகளுடன் சேர்த்து பாகற்காயை சாப்பிடும்போது அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் பாதிக்கும். இதனால் சர்க்கரையின் அளவு மிகவும் குறைய வாய்ப்புள்ளது, இதனால் அடிக்கடி மயக்கம் கூட ஏற்படலாம். ஏற்கனவே சர்க்கரை நோய்க்காக மருந்து சாப்பிடுபவர்கள் பாகற்காய் சாப்பிடும் முன் மருத்துவர்களுடன் ஆலோசிப்பது நல்லது.

    சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்களுக்கு பாகற்காய் சாறு குடிக்க கொடுத்து சோதனை செய்யப்பட்டது. பாகற்காய் சாறு குடிக்கும் முன் சீராக இருந்த இதய துடிப்பு பாகற்காய் சாறு குடித்தபின் சீரற்றதாக மாறுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதய துடிப்பில் மாற்றம் ஏற்படும்போது அது இதயத்தில் ஆங்காங்கே இரத்தம் உறைதல் ஏற்படலாம். இதனால் மாரடைப்பு கூட ஏற்படலாம்.

    கல்லீரலுக்கும், பாகற்காய்க்கும் எப்பொழுதும் ஒத்துவராது, அதற்கு ஆதாரங்களும் உள்ளது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்காக பாகற்காயை தொடர்ந்து சாப்பிடுவது கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். பாகற்காய் சாப்பிடுவது நேரடியாக கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் தொடர்ந்து பாகற்காய் சாப்பிடுவது உங்கள் தமனிகளை கடினமாக்கும் ஆர்தேரொக்ளோரோஸிஸ் நோயை உருவாக்கும் என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
    ×