search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhishma Ekadasi"

    • சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
    • பக்தர்கள் சுவாமிக்கு தீப தூப நெய்வேத்தியம் சமர்பித்தனர்.

    ஸ்ரீ காளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் தேவஸ்தானத்தில் பீஷ்ம ஏகாதசியை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி வீதி உலா நான்கு மாட வீதிகளில் நடைபெற்றது. முன்னதாக சிவன் கோவிலில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சப்பரங்களில் ஊர்வலமாக புறப்பட்டு பாபு அக்ரஹாரம் குளம் வழியாக குமார சுவாமி திப்பா வரை மேளதாளங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க சென்றார்.

    பக்தர்கள் சுவாமிக்கு தீப தூப நெய்வேத்தியம் சமர்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுனிதா, ரமாபிரபா, தேவஸ்தான அதிகாரிகள், கோவில் உதவி ஆணையர் மல்லிகார்ஜுன பிரசாத், தேவஸ்தான முதன்மை அர்ச்சகர் கருணாகர் குருக்கள், தட்சிணாமூர்த்தி, தேவஸ்தான பணியாளர்கள், கோவில் ஆய்வாளர் ஹரி யாதவ், சுதர்சன் ரெட்டி காமேஸ்வர ராவ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×