search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bharath montessori school"

    • முகாமில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மாணவர்கள் வயல் வெளியில் நாற்றுகள் நட்டு, பயிர்களுக்கு இயற்கை உரங்களை விதைத்து நேரடி செயல்பாடுகளின் மூலம் அறிந்து கொண்டனர்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் இயற்கை முறை விவசாயம் குறித்த விழிப்புணர்வு முகாம் இலஞ்சி குமார கோவில் அருகே உள்ள வயல்வெளி பகுதிகளில் நடைபெற்றது. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்திய மக்களின் உயிர்நாடி விவசாயம் என்பதை உணர்த்தும் வகையில் வேளாண்மை தொழிலில் பயிர் செய்யும் முறை பற்றியும், பயிர் பாதுகாப்பதின் முக்கியத்துவம் பற்றியும், பயிர் விளைச்சலில் விவசாயிகள் எதிர் கொள்ளும் பிரச்சினை களை பற்றியும் எடுத்து ரைக்கும் விதமாக மாணவ- மாணவிகள் விவசாயம் செய்வதற்கு பாரம்பரிய ஆடை யினை அணிந்து வயல் வெளியில் நாற்றுகள் நட்டு, பயிர்க ளுக்கு இயற்கை உரங்களை விதைத்தும், தண்ணீர் பாய்ச்சு தல் போன்ற வேளாண் செயல்களை தங்களின் நேரடி செயல்பாடுகளின் மூலம் அறிந்து கொண்டனர்.

    விழிப்புணர்வுக்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நிகழ்ச்சியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மாணவ, மாணவிகள் விலங்குகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தனர்.

    தென்காசி:

    தேசிய வன விலங்குகள் வாரத்தினை முன்னிட்டு இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் ஒவ்வொரு நாளும் வன விலங்குகள் பாதுகாப்பு முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், காட்டு விலங்குகள் மற்றும் வீட்டு விலங்குகள் குறித்து விளக்கம் அளித்தும், வன விலங்குகள் போல வேடமணிந்தும், விலங்குகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தனர்.

    விலங்குகள் பற்றிய வினாடி-வினாவும் கேட்கபட்டது. மேலும் விலங்குகள் பாதுகாப்பதின் முக்கிய பங்கினை பற்றி கருத்துரை நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • லயாள் ஹலோவீன் தின விழிப்புணர்வு குறித்து பேசினார். லோகமித்ரா ஹலோவீன் கதாபாத்திரங்கள் பற்றிப் பேசினார்.
    • மாணவ- மாணவியர் எலும்புக்கூடு பேய், கொம்பு முளைத்த மனிதன் உள்ளிட்ட பல்வேறு முகமூடிகளை அணிந்து ஹலோவீன் தினத்தை கொண்டாடினர்

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் ஹாலோவீன் தின கொண்டாட்டம் நடைபெற்றது. மாணவி ஹரிணி இறைவணக்கம் பாடினார். முத்து ஜனனி வரவேற்றார். நிவேதிகா நிகழ்ச்சித் தொகுப்பு வழங்கினார். அபிநயா செய்தி வாசித்தார்.

    லயாள் ஹலோவீன் தின விழிப்புணர்வு குறித்து பேசினார். லோகமித்ரா ஹலோவீன் கதாபாத்திரங்கள் பற்றிப் பேசினார். மணிஷா பூசணிக்காயின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். மாணவ- மாணவியர் எலும்புக்கூடு பேய், கொம்பு முளைத்த மனிதன் உள்ளிட்ட பல்வேறு முகமூடிகளை அணிந்து அனைவரையும் அச்சமூட்டும் வண்ணம் நடித்து ஹலோவீன் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மைமூன் உறுதிமொழி எடுத்தார்.

    மகாலட்சுமி நன்றி கூறினார். பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்தமதி மோகனகிருஷ்ணன், ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் ஹாலோவீன் தின கொண்டாட்டத்தில் பங்கேற்றோரை பாராட்டினர்.


    • நமது இந்தியா உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்களின் நுண்ணறிவைச் சோதிக்கும் விதமாக வினாடி- வினா போட்டி நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற அணியினருக்கு துணை முதல்வர் பாலசுந்தர் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒலிம்பியாட் வினாடி- வினா போட்டி நடைபெற்றது. மனித உடலின் பாகங்கள், அரசு ஆவண தொகுப்பு, ஆரோக்கிய உணவுகள் , அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் புதுமை விண்வெளித் தொழில் நுட்பம், விலங்குகள், பறவைகள், தாவரங்களின் வாழ்க்கை, நமது இந்தியா உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்களின் நுண்ணறிவைச் சோதிக்கும் விதமாக வினாடி- வினா போட்டி நடைபெற்றது.

    இதில் திரிசன்னா குழுவினர் 35 புள்ளிகள் பெற்று முதலிடமும், தமிழ் மதி குழுவினர் 25 புள்ளிகள் பெற்று 2-ம் இடமும், பாவனா குழுவினர் 20 புள்ளிகள் பெற்று 3-ம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு துணை முதல்வர் பாலசுந்தர் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். ஒலிம்பியாட் வினாடி- வினாவில் வெற்றி பெற்றவர்களை பாரத் கல்விக்குழுத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் பாராட்டினர்.

    ×