search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில்  ஒலிம்பியாட் வினாடி-வினா போட்டி
    X

    வெற்றி பெற்ற மாணவர்களை படத்தில் காணலாம்.

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் ஒலிம்பியாட் வினாடி-வினா போட்டி

    • நமது இந்தியா உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்களின் நுண்ணறிவைச் சோதிக்கும் விதமாக வினாடி- வினா போட்டி நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற அணியினருக்கு துணை முதல்வர் பாலசுந்தர் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒலிம்பியாட் வினாடி- வினா போட்டி நடைபெற்றது. மனித உடலின் பாகங்கள், அரசு ஆவண தொகுப்பு, ஆரோக்கிய உணவுகள் , அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் புதுமை விண்வெளித் தொழில் நுட்பம், விலங்குகள், பறவைகள், தாவரங்களின் வாழ்க்கை, நமது இந்தியா உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்களின் நுண்ணறிவைச் சோதிக்கும் விதமாக வினாடி- வினா போட்டி நடைபெற்றது.

    இதில் திரிசன்னா குழுவினர் 35 புள்ளிகள் பெற்று முதலிடமும், தமிழ் மதி குழுவினர் 25 புள்ளிகள் பெற்று 2-ம் இடமும், பாவனா குழுவினர் 20 புள்ளிகள் பெற்று 3-ம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு துணை முதல்வர் பாலசுந்தர் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். ஒலிம்பியாட் வினாடி- வினாவில் வெற்றி பெற்றவர்களை பாரத் கல்விக்குழுத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் பாராட்டினர்.

    Next Story
    ×