என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "beauty contest"
- ஆடிஷனில் கலந்து கொண்ட நிலையில் அவர்களில் 50 பேர் இரண்டாம் நிலைக்கு தேர்வு செய்யப்பட்டு இறுதியாக 32 பேர் தேர்வாகினர்.
- அழகுப் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக ராப்பர், பாடகர் ஐக்கி பெர்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ரேடிசன் ப்ளூ ஜிஆர்டி நட்சத்திர விடுதியில் 12ம் ஆண்டு பேஸ் ஆப் சென்னை 2023 அழகுப் போட்டி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், ஐரிஸ் பேஸ் ஆப் சென்னை 2023 அழகுப் போட்டியில் 18 வயது முதல் 28 வயது வரையிலான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல், 50 வயதிற்கு உட்பட்ட திருமணமான பெண்கள் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள், திருமணமான பெண்கள் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த அழகு போட்டியில் 14 ஆண்கள் மற்றும் திருமணமான பெண்கள் பிரிவில் 7 பேரும், இளம் பெண்கள் பிரிவில் 11 பேரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக 500 பேர் பேஸ் ஆப் சென்னை 2023 நிகழ்ச்சிக்காக நடைபெற்ற ஆடிஷனில் கலந்து கொண்ட நிலையில் அவர்களில் 50 பேர் இரண்டாம் நிலைக்கு தேர்வு செய்யப்பட்டு இறுதியாக 32 பேர் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைவரும் ஒய்யாரமாக நடைபோட்டனர். இவர்கள் அனைவரும் ராம்ப்வாக், ஸ்டைலிங், கம்யூனிகேஷன் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இவர்களில், சிறப்பாக செயல்பட்ட திருமணமான பெண்கள் பிரிவில் திருமதி ஐரின் பேஸ் ஆப் சென்னை பட்டத்தை துருத்தினா, இளம்பெண்கள் பிரிவில் மிஸ் ஐரிஸ் பேஸ் ஆப் சென்னை பட்டத்தை நிஹாரிகா, ஆண்கள் பிரிவில் மிஸ்டர் ஐரிஸ் பேஸ் ஆப் சென்னை பட்டத்தை மணிகண்டன் உள்ளிட்டோர் ஐரிஸ் பேஸ் ஆப் சென்னை 2023 ஆண்டின் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த அழகுப் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக ராப்பர், பாடகர் ஐக்கி பெர்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- ‘சர்வதேச மக்களின் தேர்வு’ அழகி பட்டம் வென்றார்.
- பன்முகத் திறமை கொண்டவர் இவர்.
மியாமி
கோவையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி, இரு பெண் குழந்தைகளின் தாய்.
இவர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் பங்கேற்றார். அதில் 'சர்வதேச மக்களின் தேர்வு' அழகி பட்டம் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம், அடுத்த முறை நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பிளாரன்ஸ் ஹெலன் நளினிக்கு கிடைத்துள்ளது.
மனநல சிகிச்சை நிபுணர், பெண் தொழில்முனைவாளர், எழுத்தாளர், யோகா பயிற்சியாளர் என்று பன்முகத் திறமை கொண்டவர் இவர்.
கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற 'மிசஸ் இன்டர்நேஷனல் வேர்ல்டு கிளாசிக்' அழகி போட்டியில் பட்டம் வென்றவர் ஹெலன்.
இவர் பல்வேறு சமூக சேவைப் பணிகளிலும் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார்.
கென்யாவை சேர்ந்த பெண் ரூத் கமான்டே (24). இவர் பரீத்முகமது (24) என்ற வாலிபரை காதலித்தார். அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதையொட்டி நடந்த தகராறில் ரூத் கமாண்டே தனது காதலன் பரீத் முகமதுவை 25 தடவை கத்தியால் குத்தி கொலை செய்தார். எனவே கைது செய்யப்பட்ட அவர் நைரோபி சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்றது.
இந்த நிலையில் பெண் சிறை கைதிகளுக்கான அழகிப்போட்டி நடைபெற்றது. அதில் ரூத் கமான்டே அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
அவரது கொடூரமான செயலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். ஆனால் இந்த தண்டனை மனிதாபிமானம் அற்றது என வலதுசாரி குழுக்கள் தெரிவித்துள்ளன.
இந்த தீர்ப்பை எதிர்த்து ரூத் கமான்டே மேல்முறையீடு செய்ய இருப்பதாக அவரது வக்கீல் தெரிவித்தார். #kenya #ruthkamande
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்