search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ashwini Kumaras"

    • உடலில் இருக்கின்ற எப்படிப்பட்ட நோய்களும் நீங்கும்.
    • தீய எண்ணம் கொண்ட மனிதர்கள் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடாமல் தடுக்கும்.

    சூரியபகவானை வழிபடும் நாளும், அஸ்வினி நட்சத்திரமும் இணைந்து வரும் இந்நாளில், சூரிய புத்திரர்களான அஸ்வினி குமாரர்களை வழிபடலாம். அஸ்வினி நட்சத்திர தினத்தன்று அஸ்வினி தேவர்களை மானசீகமாக வழிபட்டால், உடலில் இருக்கின்ற எப்படிப்பட்ட நோய்களும் நீங்கும். விபத்துக்கள், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படாமல் காக்கும். தீய எண்ணம், நடத்தை கொண்ட மனிதர்கள் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடாமல் தடுக்கும்.

    தேவர்கள் பாற்கடலை கடைந்த போது அமிர்தகலசத்தோடு வெளிப்பட்டவர் தன்வந்திரி பகவான், தன்வந்திரி பகவானிடம் அமிர்தம் பெற்று அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களை காத்து வருபவர்கள் அஸ்வினி தேவர்களாவர். எனவே, அஸ்வினி நட்சத்திர அன்பர்கள் தன்வந்திரி பகவானையும் வழிபடலாம். தன்வந்திரி பகவான் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலில் தனி சன்னிதியில் இருந்து அருள் பாலிக்கிறர்.

    உலகுக்கே வெளிச்சம் தருபவர் சூரிய பகவான். அப்பேற்பட்ட சூரிய பகவானே வெளிச்சத்தை இழந்து உடல் வலிமையற்று இருந்த போது சூரிய புத்திரர்களான அஸ்வினி குமாரர்கள் தங்களுடைய சக்தியை கொடுத்து காப்பாற்றினர். 27 நட்சத்திரங்களின் வரிசையில் முதலாவதாக வரும் நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான். இந்த நட்சத்திரத்தின் தேவதைகள் குதிரை முகம் கொண்ட அஸ்வினி தேவர்கள். தேவ மருத்துவர்களாக கருதப்படும் அஸ்வினி தேவர்கள் மனிதர்களின் உடல் ஆரோக்கியக் குறைபாடு மற்றும் திடீர் ஆபத்துகளை நீக்க வல்லவர்கள்.

    அஸ்வினி குமாரர்கள் சூரியனுக்கும்-சரண்யு தம்பதிக்கும் பிறந்தவர்கள் என்று வேதம் சொல்கிறது. குதிரை முகம் கொண்ட இவர்கள் இரட்டையர்கள். இவர்கள் தேவ மருத்துவர்கள். இவர்களில் ஒருவர் பெயர் நாசத்ய, மற்றொருவர் பெயர் தஸ்ரா, சிவபெருமானிடமும், விஷ்ணுபகவானிடமும் இருந்து பிரம்ம தேவர் ஆயுர்வேத மருத்துவ முறைகளை அறிந்து அதற்கான விளக்கமுறைகளை எழுதி தட்சபிரஜாபதிக்கு உபதேசித்தார். அவரிடம் இருந்து அஸ்வினி குமாரர்கள் ஆயுர்வேத மருத்துவ கலையை கற்றுக்கொண்டனர்.

    வேதலோக மருத்துவ பதவியை அடைய சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து அந்த பதவியை அடைந்தார்கள். இவர்கள் தேவர்களுக்கான மருத்துவர்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். மகரிஷி ததீட்சர் பிரம்மவித்யாவை இந்திரனிடம் இருந்து கற்றுக்கொண்டார். பிரம்மவித்யா என்பது நோயுற்றவர்களை இறக்கவிடாமல் காக்கும் மந்திரம்.

    இந்திரன், ததீட்சருக்கு பிரம்மவித்யாவை யாருக்கும் கற்றுக்கொடுக்க கூடாது என ஆணையிட்டார். ஆனால் அஸ்வினிகுமாரர்கள் பிரம்மவித்யாவை தங்களுக்கு கற்றுக்கொடுக்குமாறு வேண்டினார்கள். அதற்கு கற்றுக்கொண்ட வித்தையை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்காமல் இருப்பது பாவம் என்று ததீட்சர் கருதினார். இந்திரனுடை ஆணையை அறிந்த அஸ்வினிகுமாரர்கள் ததீட்சரின் தலையை எடுத்து குதிரை தலையை பொருத்தினார்கள். அதன்பிறகு ததீட்சர் பிரம்மவித்யாவை அஸ்வினிகுமாரர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.

    இதை அறிந்த இந்திரன் ததீட்சரின் குதிரை தலையை வெட்டி எறிந்தார். உடனே அஸ்வினி குமாரர்கள் மீண்டும் அவருடைய தலையையே பொருத்தினார்கள். அஸ்வினி குமாரர்கள் பற்றிய குறிப்புகள் ரிக்வேதம், புராணம் மற்றும் மகாபாரதத்திலும் காணப்படுகிறது. மனிதர்களுக்கு முதலில் மருத்துவம் பார்த்தவர்கள் இவர்கள். நோய்களை குணப்படுத்துவது அஸ்வினிகுமாரர்கள் என்னும் இரட்டையர் என்று நம்பப்படுகிறது.

    ஆபத்தில் சிக்கொக்கொண்டவர்களை விரைந்து சென்று காப்பாற்றுவது அஸ்வினிகுமாரர்கள் என்னும் இரட்டையர். அஸ்வினி தேவர்கள் தங்களுடைய தேரில் சூரியனையும், சந்திரனையும் ஏற்றிச்செல்வார்கள். கூடவே தேனையும் கொண்டு செல்வார்கள். அவர்களுடைய தேரில் குதிரை, கழுதைகள், கழுகு, அன்னங்கள் ஆகியவைகள் இருக்கும். அவர்கள் இருக்கும் இடம் ஆகாயம், மலை உச்சி, தாவரம், அந்தர வானம், வீடுகள் என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.

    மகாபாரதத்தில் பாண்டுவின் 2-வது மனைவி மாதுரி பிள்ளைவரம் வேண்டி இவர்களை வணங்கி பின்னர் பிறந்தவர்கள் தான் நகுலனும், சகாதேவனும். இருவரில் சகாதேவன் ஜோதிடத்திலும், நகுலன் குதிரைகளை பழக்குவதிலும் வல்லவர்கள். அஸ்வினி புத்திரர்களால் தான் இவர்களுக்கு இந்த கலைகள் கைவந்தன என்கிறது இதிகாசமும், புராணமும்.

    இன்றைக்கும் கூட மேற்குவங்கத்தில் மருத்துவர்களை அஸ்வினி குமாரர்கள் என்று அழைக்கின்றனர். அஸ்வினி தேவர்கள் தம்முடை தந்தை சூரியபகவானின் இரண்டு குதிரைகள் பூட்டிய தேரின் சாரதிகளாகவும் இருப்பார்கள். இவர்களது பெயரால் ஐப்பசி மாதம் சமஸ்கிருத மொழியில் குறிக்கப்படுகிறது. சமஸ்கிருதத்தில் அஸ்தினா என்றால் தமிழில் ஐப்பசி என்கிறோம். யாகங்கள் வளர்க்கும் போது அஸ்வினி தேவர்களும் வணங்கப்படுவதாக வேதங்கள் குறிப்பிடுகிறது.

    இந்த அஸ்வினிகுமாரர்கள் எந்தநேரமும் உலகை சுற்றிக்கொண்டே இருப்பார்கள். அப்படி அவர்கள் சுற்றிக்கொண்டு இருக்கும் போது யாருக்காவது அருகில் வரும் போது நாம் என்ன நினைக்கிறோமோ, அது அப்படியே பலிக்கட்டும் என்று ஆசீர்வதித்து செல்வார்கள். அதாவது நீங்கள் நல்லது நினைத்தாலும், கெட்டது நினைத்தாலும் அது உங்களுக்கு நடக்கும்.

    • தினமும் காலையில் 27 முறை துதிப்பது நல்லது.
    • உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படாமல் காக்கும்.

    எந்த ஒரு மனிதனுக்கும் வாழ்க்கை என்பது ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வாழ்வில் நமக்கு பாதகமான விஷயங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க முடிந்த அளவு நாம் விழிப்புணர்வுடன் இருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டும். ஆனாலும் நம்மில் பலருக்கு கடும் நோய்கள், எதிர்பாராத ஆபத்துக்கள், தீய எண்ணம் நடத்தை கொண்ட மனிதர்களுடன் சகவாசம் அல்லது தொடர்பு போன்றவை ஏற்படுகிறது. இவை எல்லாவற்றில் இருந்தும் நம்மை காக்க வல்லவர்கள் அஸ்வினி தேவர்கள். அவர்களுக்குரிய அஸ்வினிதேவ மந்திரம்.

    அஸ்வினி தேவ மந்திரம்

    அஸ்வினி தேவதே ஸ்வேத வர்நொவ்

    தாவஸ்விநௌ துமஹ

    அஸ்வினி நட்சத்திரத்தின் தேவதைகளான அஸ்வினி குமாரர்களுக்குரிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை துதிப்பது நல்லது. மாதத்தில் வருகின்ற அஸ்வினி நட்சத்திர தினத்தன்று அஸ்வினி தேவர்களை மானசீகமாக வழிபட்டு, இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிப்பதால் உங்கள் உடலில் இருக்கின்ற எப்படிப்பட்ட நோய்களும் நீங்கும். விபத்துக்கள், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படாமல் காக்கும். தீய எண்ணம், நடத்தை கொண்ட மனிதர்கள் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடாமல் தடுக்கும்.

    27 நட்சத்திரங்களின் வரிசையில் முதலாவதாக வரும் நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவானாவார். இந்த நட்சத்திரத்தின் தேவதைகள் குதிரை முகம் கொண்ட அஸ்வினி தேவர்கள் ஆவர். தேவ மருத்துவர்களாக கருதப்படும் அஸ்வினி தேவர்கள் மனிதர்களின் எப்படிப்பட்ட உடல் ஆரோக்கியக் குறைபாடு மற்றும் திடீர் ஆபத்துகளை நீக்க வல்லவர்களாக இருக்கிறார்கள். அவர்களை வழிபடுவதால் பல நன்மைகள் உண்டாகும்.

    ×