search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arunjuna Katha Ayyanar Temple"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுனையில் குளித்தால் தீராத நோய்கள் விலகும்.
    • அய்யனாரை வழிபட்டால் கடன் தொல்லை தீரும்

    தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் உள்ள சுனையில் குளித்தால் தீராத நோய்கள் விலகு வதாகவும், அய்யனாரை வழிபட்டால் கடன் தொல்லை தீரும் என்றும், எந்த துயரில் இருந்தும் நீங்கலாம் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    கோவில் வரலாறு

    சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டத்தை தலைமையிடமாக கொண்டு சிங்கராஜன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அப்பகுதியில் இருந்த தடாகத்தில் உள்ள நீர் பன்னீர் போன்று தெளிந்தும், சுவை மிக்கதாகவும் இருந்தது. ஒரு முறை இதில் இருந்து கனகமணி என்ற கன்னிப்பெண் குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சென்றபோது கல்லால் கால் தவறி விழுந்தார்.

    அவர் கொண்டு சென்ற குடத்து நீர் அவ்விடத்தில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர் மீது கொட்டியது. ஆத்திரமடைந்த அவர், அந்த பெண் கையால் நீர் வாங்குபவர் இறப்பார் என்றும், அந்த பெண் இறக்கும் தருணத்தில் சொல்வது எல்லாம் பலிக்கும் என்றும், மரணத்திற்கு பிறகு அவர் சொர்க்கம் செல்வார் என்றும் சாபமிட்டார்.

    அவ்வூரில் தினமும் ஒரு கனி காய்க்கும் மரத்தில் இருந்து கனியை எடுத்து மன்னன் உண்டு வந்தான். இதனால் அம்மரத்திற்குக் காவல் போடப்பட்டிருந்தது. ஒரு முறை முனிவரிடம் சாபம் பெற்ற பெண் தண்ணீர் எடுத்துவரும் போது குடத்திற்குள் அந்த மரத்தில் இருந்த கனி விழுந்து விட்டது. அவர் வரும் வழியில் 21 தேவாதி தேவதைகள் எதிரில் தண்ணீர் கேட்க, அந்த பெண் கொடுக்க மறுத்துவிட்டார். அப்போது மரத்தில் இருந்த கனி திருடப்பட்டதாக எண்ணினர்.

    மேலும் அந்த கனியை சாபம் பெற்ற பெண் எடுத்து சென்றதாக கருதினர். இதைத்தொடந்து கனகமணி வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு மரத்தில் இருந்து விழுந்த கனி இருந்தது. இதனால் மன்னரின் காவலர்கள் அந்த பெண்ணை அழைத்து சென்று மன்னன் முன் நிறுத்தினர். அப்போது கனகமணியின் குடத்தில் இருந்த நீருக்குள் கனி இருந்தது என காவலர்கள் கூறினர்.

    தேவதைகளும் தாங்கள் தண்ணீர் கேட்ட போது கனி வைத்திருந்ததால் தண்ணீர் தர மறுத்தார் என கூறினர். எனவே கனகமணி தான் கனியை திருடியிருக்க வேண்டும் என கூறினர்.

    இதைத்தொடர்ந்து கனகமணிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவர் இறக்கும் தருவாயில் தன் தெய்வமான அரிகரபுத்திரனை அழைக்க, அவர் உயிர்ப்பிக்க முயலும் போது அவள் இனி எவரும் தண்ணீருக்காக அலைந்து சாபம் பெறக்கூடாது என்று கூறி அவ்விடத்தில் சுனையாக மாறி இருக்க விரும்புவதாகக் கூறினார். அப்போது அருமையான சுனையாக மாறும் அவளைக் காத்தருளுவதாக என்று அய்யன் சாஸ்தா கூறினார்.

    இதனால் தான் அருஞ்சுனை காத்த அய்யனார் என்றழைக்கப்பட்டார். பின்னர் உண்மையறிந்த மன்னன் தான் தவறிழைத்ததாக கருதி உயிரை மாய்த்துக்கொண்டான். இதேபோல் தேவதைகள் அய்யனாரிடம் மன்னிப்பு கோர, அவர்களைத் தனது கண்காணிப்பில் வைத்துக்கொண்டார் அய்யனார்.

    ×