என் மலர்
நீங்கள் தேடியது "Aritapatti"
- வெடிகுண்டுகள் வெடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
- சினிமா படப்பிடிப்பு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் விரட்டியடிப்பு
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பல்லுயிர் வனக்காப்பக்கமாக அரிட்டாபட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் மிகுந்த மற்றும் 200-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் வசித்து வரும் இந்த பகுதியில் திரைப்பட குழுவினர் அவ்வப்போது வந்து திரைப்படங்களை சூட்டிங் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட குழுவினர் அதிக சத்தம் எழுப்பக்கூடிய வெடிகளை பிடித்து வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சிகளை படமாக்கினர். இதன் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறும், பறவைகள் மற்றும் வன விலங்குகளுக்கும் அச்சம் எழுந்தது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் சினிமா படப்பிடிப்பு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த குழுவினரை விரட்டினர்.
இதற்கிடையே தற்போது அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழக அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்காது என்று அமைச்சர் மூர்த்தி உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முதல் சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் புதியதாக ஒரு திரைப்படத்திற்கு படப்பிடிப்பு குழுவினர் பெட்ரோல் கேன்கள் போன்ற பொருட்களுடன் பல்லுயிர் வனகாப்பகம் அருகே வந்து முகாமிட்டு உள்ளனர். தொடர்ந்து அவர்கள் அந்த பகுதியில் படப்பிடிப்பு காட்சியை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது அதிக சத்தம் எழுப்பக்கூடிய வெடிகுண்டுகள் வெடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. மேலும் ஜே.சி.பி., கிரேன், கம்ப்ரசர்களை கொண்டு சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பாறைகளை வெடிவைத்து தகர்த்தாக தெரிகிறது.
மேலும் அதிக அளவில் மண்எண்ணை, பெட்ரோல் கேன்களும் அங்கு இருந்தன. அந்த படக்குழுவினர் ஜே.சி.பி. எந்திரம், வெடிமருந்து பொருட்கள், கிரேன்கள் ஆகியவற்றையும் கொண்டு வந்திருந்தனர்.
அந்த வழியாக விவசாய பணிகளுக்காக சென்ற உள்ளூர் மக்கள் இது குறித்து அரிட்டாபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து படப்பிடிப்பு குழுவினர்களை சிறைபிடித்து சரமாரி கேள்வி கேட்டனர்.
தாங்கள் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அனுமதி பெற்றுள்ளதாக கூறியதை ஏற்க மறுத்த கிராம மக்கள் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் தளத்தில் எவ்வாறு வெடிவைத்து தகர்க்கலாம் என கேள்வி எழுப்பி அவர்களை வாகனங்களோடு சிறைப்பிடித்ததனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறை பிடிக்கப்பட்டவர்களை மீட்டு திருப்பி அனுப்பி உள்ளனர்.
டங்ஸ்டன் பிரச்சனையால் பரபரப்பாக இருக்கின்ற சூழலில் அரிட்டாப்பட்டி பகுதியில் சினிமா படப்பிடிப்பு என்று கூறி பல்வேறு வாகனங்களோடு குவிந்தவர்களால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
- 500-க்கும் மேற்பட்டோர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- வேளாண் மண்டலமாக்கிட சட்டம் இயற்ற வேண்டும்.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்துக்கு ஏல அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரிட்டாப்பட்டி ஏற்கனவே பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.
எனவே டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த முத்து வேல்பட்டி, கிடாரிபட்டி, எட்டிமங்கலம், செட்டி யார்பட்டி, நாயக்கர்பட்டி, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக மேலூர் பகுதி விவசாயிகள், வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் இன்று காலை மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் பெண்கள், விவசாயிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் திரண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சுரங்க ஏல திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். தொன்மையான தொல்லியல் சின்னங்கள்-பல்லுயிர் சூழல்கள் அடங்கியுள்ள மதுரை மாவட்டத்தை பாரம்பரிய தமிழ் பண்பாட்டு மண்டலமாக அறிவித்திட வேண்டும்.
முல்லை பெரியாறு பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கிட சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- உங்கள் அன்பை ஏற்க நாளை அரிட்டாபட்டிக்கு வருகிறேன்
- அ.வள்ளாலப்பட்டி கிராமத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்திக்கிறார்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்துக்கு உட்பட்ட அரிட்டாபட்டி மற்றும் மதுரை கிழக்கு வட்டத்துக்கு உள்பட்ட மீனாட்சிபுரம் ஆகிய கிரா மங்களில் இருக்கும் 193.215 ஹெக்டேர் பரப்பள உள்ள பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறி வித்தது.
தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமான இந்த பகுதிகள் கழுகுமலை, கழிஞ்சமலை, நாட்டார்மலை, ராமாயி மலை, ஆப்டான் மலை, தேன்கூடு மலை, கூகைகந்தி மலை ஆகிய 7 சிறிய குன்றுகளை கொண்டுள்ளது.
அதேபோல் 2,200 ஆண்டுகளுக்கு முந்தய தமிழி கல்வெட்டுகள், சமணர் படுகைகள், சங்ககால கற்ப டுக்கைகள், குடைவரைக் கோவில்கள் என தனித்துவமான அடையாளங்களும் அரிட்டாபட்டியில் அமைந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீரால் இப்பகுதியில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ஆண்டு முழுவதும் ஒருபோக பாசன விவசாயமும் நடைபெறுகிறது.
இந்தநிலையில் மேலூர் வட்டத்தில் உள்ள நாயக் கர்பட்டியை மையமாக கொண்டு அந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைத்து கனிமவளம் எடுக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இந்த திட்டத்துக்கு அரிட்டாபட்டி சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள சுமார் 5,000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என தகவல் வெளியானது.
அரிட்டாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள தெற்குத் தெரு, முத்து வேல்பட்டி, குளனிப்பட்டி, கிடாரிப்பட்டி, எட்டிமங்கலம், வெள்ளாளப்பட்டி, சிலீப்பியாபட்டி, செட்டியார்பட்டி, நாயக்கர்பட்டி, செட்டியார்பட்டி, சண்முகநாதபுரம் என 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த பகுதியில் இந்த திட்டத்தை அமல்படுத்த வேதாந்தா குழுமத்தை சேர்ந்த ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது.
இது தொடர்பான அறி விப்பை மத்திய சுரங்கங்கள் துறை அமைச்சகம் கடந்த ஆண்டு நம்பவர் 7-ந்தேதி வெளியிட்டது. இதனால், அதிருப்தியடைந்த மேலூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், வணிகர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஜனவரி 7-ந்தேதி நடைபெற்ற பிரமாண்ட போராட்டத்தில் மேலூர் மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேர வையில் டிசம்பர் 9-ந்தேதி தமிழக அரசு சிறப்பு சட்ட மன்றத்தை கூட்டி அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றியது.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நான் முதலமைச்சராக இருக்கும் வரை நிச்சயமாக டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்கமாட்டேன் என சூளுரைத்தார்.
இருந்தபோதிலும் மத்திய அரசு இந்த திட்டத்தை ரத்து செய்யாமல் அரிட்டாபட்டி பல்லுயிர் சூழல் தளத்திற்கு உட்பட்ட 500 ஏக்கர் நிலத்தை தவிர மீதமுள்ள 4 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தில் சுரங்கம் அமைக்கப்படுவதற்கு இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் மறுவரையறை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. எனவே பொது மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது.
இந்தநிலையில் டெல்லி சென்ற போராட்டக் குழுவி னர், டங்ஸ்டன் கனிம சுரங்கத்தால் மேலூர் வட்டத்தில் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகளையும், விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், நிலத்தடி நீர் சீர்கேட்டையும் மத்திய மந்திரி கிஷன் ரெட்டியிடம் விளக்கி கூறினர். இதையடுத்து டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதையடுத்து தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 11 கிராம மக்கள் சந்தித்துப் பேசினர்.
அப்போது அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு அத்திட்டம் ரத்து செய்யப்பட காரணமாக இருந்தமைக்காக முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இன்று அரிட்டாபட்டியில் முதல்-அமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த உள்ளதாகவும், அதற்கு வருகை தரும்படியும் பொதுமக்கள் அழைப்பு விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "உங்கள் அன்பை ஏற்க நாளை அரிட்டாபட்டிக்கு வருகிறேன்," என்று தெரிவித்து இருந்தார்.
அதன்படி இன்று சென்னையில் குடியரசு தின விழாவை முடித்துக் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு மதுரை வந்தடைகிறார்.
விமான நிலையத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் சங்கீதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வரவேற் கிறார்கள். பின்னர் தனியார் ஓட்டலில் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 4.30 மணிக்கு காரில் மேலூர் செல்கிறார்.
தொடர்ந்து அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெறும் பாராட்டு விழா கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதையடுத்து அ.வள்ளாலப்பட்டி கிராமத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்திக்கிறார்.
48 கிராம மக்கள் ஒருங்கிணைந்து நடத்த இருக்கும் இந்த பாராட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் அவரை வரவேற்க அனைத்து தரப்பினரும் தயாராகி வருகிறார்கள்.
- அனைத்து கட்சிகள் ஆதரவுடன் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
- விழா ஏற்பாடுகளை மதுரை பா.ஜ.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏல அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
தமிழக சட்ட சபையிலும் அனைத்து கட்சிகள் ஆதரவுடன் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இதையடுத்து மத்திய அமைச்சர் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு அரிட்டாபட்டி உள்ளிட்ட 48 கிராம மக்கள் வரவேற்றனர்.
டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த வாரம் அரிட்டாபட்டியில் பாராட்டு விழா நடத்தினர். அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராம மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் சந்தித்து போராட்டக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்த மத்திய மந்திரி கிஷன் ரெட்டிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரிட்டாபட்டி மற்றும் வல்லாளப்பட்டியில் கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா இன்று (30-ந்தேதி) மாலை நடைபெறுகிறது.
இதற்காக மத்திய மந்திரி கிஷன் ரெட்டி, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விமானம் மூலம் மதுரைக்கு பிற்பகலில் வருகின்றனர்.
தொடர்ந்து அரிட்டாபட்டிக்கு செல்லும் அவர்களுக்கு மாலையில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






