என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ARGUE"

    • நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , துணை மேயர் பாலசுப்ரமணியம் , மண்டல தலைவர்கள் , மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் மாநகராட்சி கவுன்சிலர்கள் பயிற்சி முகாமிற்கு வந்திருந்த பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மாநகராட்சி சார்பில் மேயர், துணை மேயர் , மண்டல தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் வந்திருக்கக் கூடிய நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் உயர் அதிகாரிகள் யாரும் ஏன் வரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிகழ்ச்சி ஒரு வாரத்திற்கு முன்னதாகவே திட்டமிட்ட நிலையில் திடீரென முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னையில் ஆய்வு கூட்டம் தேதி குறிக்கப்பட்டதால் அங்கு சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்து மாமன்ற உறுப்பினர்களை சமரசம் செய்தனர்.

    இதன் பின்னர் பள்ளி மேலாண்மை குழுவின் உரிமைகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளித்தனர். இதில் மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபட்டனர்.

    • அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
    • முக்கிய பிரச்சனைகள் உள்ள கிராமமாக தேர்ந்தெடுத்து அதனுடைய முக்கிய அடிப்படைகளை நிறைவேற்றி வருவதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய வளாக கூட்டரங்கில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் ஆண்டிமடம் மருதமுத்து தலைமையில் நடைபெற்றது.

    ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேன்மொழி வைத்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மன்ற தீர்மான நகலை கணக்கர் பாக்யராஜ் வாசித்தார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வரவு, செலவு கணக்கு குறித்தும், எங்களுடைய ஊராட்சிகளில் வரும்பணிகளை எங்களுக்கு தராமல் அவர்களுக்கு தேவையான பஞ்சாயத்துகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எங்களிடம் தகவல் தெரிவிக்காமல் அவர்களே முடிவு செய்து வருவதாக கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது இது மாவட்ட ஆட்சியர் உடைய தலைமையில் கிராமத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகள் உள்ள கிராமமாக தேர்ந்தெடுத்து அதனுடைய முக்கிய அடிப்படைகளை நிறைவேற்றி வருவதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

    இதனால் கூட்டத்தில் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    மேலும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதம் நடத்தினர். கூட்டத்தில் அனைத்து கட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) அழகானந்தம் நன்றி கூறினார்.

    ×