என் மலர்
நீங்கள் தேடியது "ARESTED"
- போலீசார்ரூ.10 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்
- திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர்
பல்வேறு தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த திருச்சி மாவட்டம், தொட்டியம் வடுக தெருவை சேர்ந்த ஜெயபிரகாசின் மகன் சுபாசை (வயது 25) மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சுபாசை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சுபாஷ் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் 6 திருட்டு வழக்குகளிலும், மருவத்தூர், வி.களத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா ஒரு திருட்டு வழக்கிலும், மங்களமேடு போலீஸ் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்டிருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் சுபாஷிடம் இருந்து 20 பவுன் நகை, ஒரு மோட்டார் சைக்கிள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் சுபாசை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
- வழியாக சென்றவர்கள் உடனடியாக அமீனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
பீளமேடு.
கோவை சிவானந்தபு ரத்தை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மகன் அமீன் (வயது 29). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். தற்போது வீட்டில் இருந்த படி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
சம்பவத்தன்று இவர் நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிள் காளப்பட்ட மோகன் நகர் அருகே சென்ற போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அமீனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். அதற்கு அவர் கொடுக்க மறுத்து விட்டார். பின்னர் அவர்கள் 2 பேரும் சேர்ந்து அமீனை தாக்கினர். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடினர். அவர்களை அமீன் துரத்தி சென்றார்.
அப்போது அந்த வாலிபர்கள் கையில் வைத்து இருந்த கத்தியால் அமீனின் தலை உள்ளிட்ட இடங்களில் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக அமீனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அமீனை கத்தியால் குத்தியது சரவணம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவன், காளப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. போலீசார் சிறுவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.






