என் மலர்
நீங்கள் தேடியது "Aral area"
- உடுத்திய உடையோடு மட்டுமே காணப்படும் கிராம மக்கள் அடுத்த வேளை உணவுக்கே கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
- தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு ஓராண்டுக்கு மேல் ஆகி விடுமே... அதுவரை என்ன செய்யப் போகிறோம்?
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை பேயாட்டம் ஆடி விட்டு சென்றுள்ள பெரு வெள்ளம் புரட்டிப் போட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் ஏரல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சின்னாபின்னமாக்கி இருக்கிறது.
ஏரல் திருவமுதி நாடார்விளை, காமராஜ நல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்கள் பெரு வெள்ளம் ஏற்படுத்தி விட்டு சென்றிருக்கும் பாதிப்பால் உருக்குலைந்து போய் காட்சி அளித்து கொண்டிருக்கின்றன.
கஷ்டப்பட்டு உழைத்து கட்டிய வீடுகள், வீட்டில் வளர்க்கப்பட்ட கால் நடைகள், வீட்டில் வாங்கி போட்டிருந்த கட்டில், மெத்தை, டி.வி., பாத்திரங்கள் என ஒட்டு மொத்த உடைமைகளையும் வெள்ளம் வாரி சுருட்டிக் கொண்டு போயிருக்கிறது.
இதனால் உடுத்திய உடையோடு மட்டுமே காணப்படும் கிராம மக்கள் அடுத்த வேளை உணவுக்கே கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஏதாவது வழியில் வெள்ள நிவாரண பொருட்கள், தண்ணீர் கிடைத்தாலும் அது வயிற்றுப் பசியை போக்க போதுமானதாக இல்லை என்றே கிராம மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
இதுவரை சம்பாதித்து வைத்திருந்த ஒட்டு மொத்த பொருட்களையும் இழந்து விட்டு வாழ வழி தெரியாமலும், வெள்ள பாதிப்பில் இருந்து மீள வழி தெரியாமலும் ஏரல் சுற்று வட்டார பகுதி மக்கள் தவியாய் தவித்து வருகிறார்கள்.
இனி என்ன செய்யப் போகிறோம்? என்பது தெரியாமல் தவிக்கும் மக்கள் தங்களது எதிர்காலம் என்ன? என்பது தெரியாமலும் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு ஓராண்டுக்கு மேல் ஆகி விடுமே... அதுவரை என்ன செய்யப் போகிறோம்? என்றும் அப்பகுதி மக்கள் புலம்பியபடியே உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் பல பகுதிகளும் இதே போன்று பாதிப்புகளை சந்தித்துள்ளன. நெல்லை மாவட்டத்திலும் பல இடங்களில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இது போன்று பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முழுமையாக கண்டறிந்து தேசிய பேரிடர் என அறிவிக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது.
தங்களது ஒட்டு மொத்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ஏரல் போன்று பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்து கூடுதல் நிவாரண உதவிகளை மத்திய-மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
- மரத்தை சுற்றி சந்தனம் குங்குமம் தேய்த்து வழிபாடு செய்தனர்.
- மரத்தில் பால் வடிவதை மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.
ஸ்ரீவைகுண்டம்:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பெருங்குளம் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு மேல்புறத்தில் சிவகளைக்கும், பெருங்குளத்துக்கும் இடையே குளம் உள்ளது.
இந்த குளத்துக்கரை பகுதியில் உள்ள ஒரு வேப்பமரத்தில் இருந்து நேற்று மாலை பால் வடிந்துள்ளது. இதை அந்த வழியாகச் சென்றவர்கள் அருகே உள்ள ஊர்மக்களிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து அங்கு வந்த ஊர்மக்கள் அம்மன் விரும்பும் மரமான வேப்பமரத்தில் இருந்து பால் வருவதை பார்த்து அம்மன் தான் இதை உருவாக்கி உள்ளார் என்று அந்த மரத்தை சுற்றி சந்தனம் குங்குமம் தேய்த்து சூடம் ஏற்றி வழிபாடு செய்துள்ளனர். தொடர்ந்து நேற்றும் பால் வடிந்ததை பார்த்து அவர்கள் வழிபாடு செய்தனர்.
அதை பார்த்து அந்த வழியாகச் சென்ற இளம்பெண் தனது தாயுடன் ஆட்டோவில் வந்துள்ளார். இங்கு நின்ற கூட்டத்தை பார்த்து ஆர்வத்துடன் அந்த இடத்தில் இறங்கி சாமி கும்பிட்டு விட்டு சென்றார். அந்த நேரத்தில வேப்பமரத்தில் இருந்து நுரை பொங்கியபடி பால் போன்ற வெள்ளை நிறத்தில் வடிந்தது.
இந்த செய்தி அந்த பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் காட்டுத் தீ போல் பரவவும் ஊர்மக்கள் மற்றும் அந்த வழியாக சாலையில் செல்பவர்கள் என அனைவரும் இறங்கி வேப்பமரத்தில் இருந்து பால் வடிவதை ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், வேப்பமரத்தில் இருந்து பால் வடிவது மிகவும் அபூர்வமாகும். இது தெய்வ சக்தியான மரம் என்று கூறுகிறார்கள்.






