என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anibal Kennedy MLA."

    • புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட அப்துல் கலாம் குடியிருப்பு பகுதியில் மின் கம்பங்கள் சேதமடைந்து மின் விளக்குகள் எரியாமல் இருந்து வந்தன.
    • இதையடுத்து அப்பகுதி மக்கள் புதிய மின் கம்பங்கள் அமைத்து மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தருமாறு தொகுதி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட அப்துல் கலாம் குடியிருப்பு பகுதியில் மின் கம்பங்கள் சேதமடைந்து மின் விளக்குகள் எரியாமல் இருந்து வந்தன.

    இதனால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டதால் சில சமூக விரோதிகள் மது அருந்துவதற்கும் குற்ற செயல்களுக்கும் பயன்படுத்தி வந்தனர்.

    இதையடுத்து அப்பகுதி மக்கள் புதிய மின் கம்பங்கள் அமைத்து மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தருமாறு தொகுதி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து அப்பகுதியில் மின் துறை சார்பில் ரூ.15 லட்சம் செலவில் புதிய மின் கம்பங்கள் அமைத்தல், புதிய மின் விளக்குகள் பொறுத்தி பராமரித்தல் உள்ளிட்ட பணிகளுக்கான தொடக்க விழா நடந்தது.

    இதில் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் வல்லவன், துணை பொறியாளர் மோகன்ராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பேசியதாவது:
    • கிறிஸ்தவ மக்களின் நீண்டநாள் கோரிக்கையான புனிதவெள்ளி அன்று இறைச்சி, மதுக்கடைகளை மூட முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பேசியதாவது:-

    கிறிஸ்தவ மக்களால் புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. அன்றயை தினம் புதுவையில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும், இறைச்சிகடைகளையும் விடுமுறை அளித்து மூட உத்தரவிட வேண்டும். வள்ளலார்தினம், காந்திஜெயந்திபோல கிறிஸ்து மறித்த தினத்தை புதுவை அரசு அனுசரிக்க வேண்டும்.

    கிறிஸ்தவ மக்களின் நீண்டநாள் கோரிக்கையான புனிதவெள்ளி அன்று இறைச்சி, மதுக்கடைகளை மூட முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுவை சட்டசபையில் திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அனிபால்கென்னடி எம்.எல்.ஏ. தனிநபர் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
    • திருக்குறளில் இல்லாததே இல்லை. 2 வரியில் அனைத்து கருத்துக்களும் அடங்கியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அனிபால்கென்னடி எம்.எல்.ஏ. தனிநபர் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

    அப்போது அவர் பேசியதாவது: திருக்குறள் நம் நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க அனைத்து தகுதிகளையும் கொண்ட ஒரு அற்புத நூலாகும். 14 ஐரோப்பிய மொழிகள், 10 ஆசிய மொழிகள், 14 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட ஒரு உன்னத நூல். மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்கு கூறிய அறிவுரைதான் இந்த திருக்குறள் பொதுமறை. வள்ளுவனை பெற்றதால், புகழ் வையகம் பெற்றது.அவருக்கு சிறப்பு செய்யும் வண்ணம் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த தீர்மானத்தை வரவேற்று எதிர்கட்சி தலைவர் சிவா, நாஜிம், செந்தில்குமார், நாக.தியாகராஜன், நேரு, சிவசங்கர், ராமலிங்கம், வெங்க டேசன்,ரிச்சர்டு, ஜான்குமார் ஆகியோர் பேசினர்.

    இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசும்போது, மனிதன் செம்மையாகவும், அமைதியாகவும் வாழ வேண்டும் என்றால், திருக்குறளை படித்து அதன் கருத்துக்களை ஏற்றால் போதும். திருக்குறளில் இல்லாததே இல்லை. 2 வரியில் அனைத்து கருத்துக்களும் அடங்கியுள்ளது. இதை அரசு தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பலாம் என தெரிவித்தார்.

    இதையடுத்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அனிபால் கென்னடியிடம் தனிநபர் தீர்மானத்தை வாபஸ் பெற கேட்டுக்கொண்டார். இதையேற்று தீர்மானத்தை வாபஸ் பெற்றார். தொடர்ந்த திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி அரசு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பள்ளிவாசல்களுக்கு தனித்தனியாக தலா ரூ. 10 ஆயிரம் வீதம் வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குத்பா பள்ளி முஹம்மதியா பள்ளி, முவஹீதியா பள்ளி மிராபள்ளி,பூராப் பள்ளி ஆகிய பள்ளிவாசல்களுக்கு ரமலான் நோன்பு கஞ்சி நன்கொடை முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பள்ளிவாசல்களுக்கு தனித்தனியாக தலா ரூ. 10 ஆயிரம் வீதம் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் புதுவை மாநில வக்பு வாரிய உறுப்பினர்கள் சையத் அஹமது மெய்தீன், பசிலா பாத்திமா, வக்பு அதிகாரி முஹம்மது இஸ்மாயில், மீராபள்ளி முத்தவல்லி ஹாஜாமெய்தீன் முஹமதியா பள்ளி முத்தவல்லிகள், ஷேக் அப்துல் கப்பார்திரு முஹம்மது ரஃபி, முவஹிதியா பள்ளி முத்தவல்லி, முஹம்மது அமீன், பூரா பள்ளி முத்தவல்லி , முஹம்மது முசாதிக் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • பயனாளிகளுக்கு பரிசீலிக்கப்பட்டு தவணைத் தொகை ஆணையை தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி வழங்கினார்.
    • கழிவறையுடன் கல்வீடு கட்ட வேண்டும் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் வீடு கட்டுவதற்கான தவணைத் தொகை ரூ.3,50,000 பெற வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளுக்கு பரிசீலிக்கப்பட்டு தவணைத் தொகை ஆணையை தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி வழங்கினார்.

    வீடு கட்டுவதற்கான மானியத்தொகை பயனா ளிகளின் வங்கிக் கணக்கில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் செலுத்தப்படும் மானிய தவணைத் தொகை பெற்ற தேதியில் இருந்து 4 மாத காலத்திற்குள் அதற்கான கட்டிட வேலையை முடித்து விட வேண்டும்.

    கழிவறையுடன் கல்வீடு கட்ட வேண்டும் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் இளநிலை பொறியாளர் சத்தியவாணி, ஆய்வாளர் சங்கர், சக்திவேல், தொகுதி செயலாளர் சக்திவேல், பொருளாளர் மணிமாறன், கிளைச் செயலாளர்கள் ராகேஷ் மற்றும் ரவிக்குமார், ரகுமான் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பாகீரப் பாளையம் சன்னியாசி தோப்பு மயான கொள்ளை நடைபெறும் இடத்தை தற்போது பேச்சி யம்மன் உருவ பொம்மை அமைக்கும் பணி நடந்தது.
    • பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பாகீரப் பாளையம் சன்னியாசி தோப்பு மயான கொள்ளை நடைபெறும் இடத்தை தற்போது பேச்சி யம்மன் உருவ பொம்மை அமைக்கும் பணி நடந்தது.

    இதனை தனியார் ஒருவர் என்னுடைய இடம் என்று கூறி கோவில் பணிகளை தடுத்து நிறுத்தினார். இதனால் பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

    இதுகுறித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தினார். இடத்திற்கு உரிமை கொண்டாடுபவரிடம் ஊர்மக்களின் தெய்வவழி பாட்டில் எந்த தடையும் பிரச்சினையும் வரக்கூடாது என்றும் கோவிலுக்கே அந்த இடத்தை தந்து விடுமாறும் முதல்-அமைச்சரிடம் இந்த பிரச்சினையை கூறி தங்களுக்கு இடத்திற்கு உண்டான தொகையினை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

    அவரின் கோரிக்கையை ஏற்று இடத்தின் உரிமையா ளர் சம்மதம் தெரிவித்தார். இதனால் அப்பகுதி பொதுமக்களின் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.வுக்கு நன்றியைத் தெரிவித்தனர். இந்த பேச்சுவார்த்தையின் போது வக்கீல் பரிமளம் உடனிருந்தார்.

    • புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அப்துல் கலாம் அரசு குடியிருப்பு பகுதிகளில் பல வருடங்களாக பல இடங்களில் மின் விளக்குகள் இயங்காமல் இருந்து வந்தது.
    • அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. அனிபால் மனு கொடுத்து மின்விளக்குகளை அமைத்துக் கொடுக்கும்படி வலியுறுத்தி வந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அப்துல் கலாம் அரசு குடியிருப்பு பகுதிகளில் பல வருடங்களாக பல இடங்களில் மின் விளக்குகள் இயங்காமல் இருந்து வந்தது.

    அரசு குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் தெரிவித்து வந்தனர்.

    இது குறித்து தொடர்ச்சியாக பொதுப்பணித்துறை பிரிவு அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. அனிபால் மனு கொடுத்து மின்விளக்குகளை அமைத்துக் கொடுக்கும்படி வலியுறுத்தி வந்தார்.

    அதன் பிரதிபலிப்பாக தற்பொழுது சுமார் ரூ.14,88,000 செலவில் மின்விளக்குகள் குடியிருப்பு முழுவதும் பொருத்தப்பட்டது. இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    உடன் பொதுப்பணி துறை உதவி பொறியாளர் பார்த்தசாரதி , மின்துறை உதவி பொறியாளர் மோகன்ராஜ் , கிளை செயலாளர் ராகேஷ் மற்றும் ஊர் பொது மக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இந்த தொகுதியில் இதுவரை 15 மோட்டார் புதிதாக அமைத்து கொடு த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
    • அங்கு உள்ள குறைகளை மக்களிடம் கேட்டறிந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பான்மையான பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி மூலமும், பொதுப்பணித்துறை மூலமும், நகராட்சி மூலமும், சட்டமன்ற நிதியின் கீழ் பல பணிகள் அனிபால் கென்னடிஎம்.எல்.ஏ., முயற்சியால் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

    அதில் ஒரு கட்டமாக ரூ.2 ½ கோடி மதிப்பீட்டுத் தொகையில் பெரிய பள்ளி மற்றும் வீரவெள்ளி பகுதிகளில் எல் வடிவ வாய்க்கால் மற்றும் யூ வடிவ வாய்கால் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

    அதனைத் தொடர்ந்து இன்று வீரர்வெளியில் பணிகள் மேற்கொள்ளும் போது கென்னடி எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அங்கு உள்ள குறைகளை மக்களிடம் கேட்டறிந்தார்.

    உடன் உதவி பொறியாளர் பிரபாகரன் , இளநிலை பொறியாளர் சண்முகம், தி.மு.க. பிரமுகர் பிராங்க்ளின், தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் தொகுதி செயலாளர் ராஜி, அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், மீனவர் அணி மாநில துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி, கிளைச் செயலாளர் அசோக், மற்றும் கட்சியினர் செல்லப்பன், மோகன் அனைவரும் உடனிருந்தனர்.

    அனிபால் கென்னடி எம்.எல்.ஏ, கட்டிட பணியை தொடங்கிவைத்தார்

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட தமிழ் தாய் நகர் பகுதியை சார்ந்த கருமாதிக்கொட்டகை மற்றும் அங்கன்வாடிக்கு பல வருட காலமாக கழிப்பிடம் இல்லை. இது சம்பந்தமாக உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற எம்.எல்.ஏ, ரோட்டரி கிளப் தலைவர் சகோதரர் அனிபால் நேருவிடம் மக்கள் நலம் கருதி இக்கட்டிடங்களை அமைத்து தரும்படி கேட்டுக்கொண்டார்.இதையடுத்து இக்கட்டிடங்கள் ரோட்டரி கிளப் மூலம் கருமாதி கொட்டகையில் நவீன கழிப்பிடம் மற்றும் குளியல் அறையும், அங்கான்வாடியில் நவீன கழிப்பிடமும் குளியல் அறையும் கட்டும் பணி நடக்கிறது .இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    உடன் தொகுதி செயலாளர் சக்திவேல், துணை தொகுதி செயலாளர் ஆரோக்கியராஜ், மீனவர் அணி துணை அமை ப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர் காந்தி மற்றும் சங்கரநாராயணன், கார்த்திக், பவி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ அங்கு சென்று பாதிப்புக்கு உள்ளானவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
    • அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் உடனடியாக வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேத்தாஜி நகரில் மின்கசிவு காரணமாக ஒரு வீடு தீ பிடித்து எரிந்தது. வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும், முக்கிய ஆவணங்களும் தீயில் கருகியது. இதை அறிந்த அனிபால் கென்னடி எம்.எல்.ஏ அங்கு சென்று பாதிப்புக்கு உள்ளானவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்பு தன் சொந்தப்பணம் ரூ.10,000 காசோலையை வழங்கினார். மேலும் அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட வர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் உடனடியாக வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    பாதிப்புக்குள்ளானவருக்கு வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்து தருவதாக உறுதியளித்தார். நேத்தாஜி நகர் கிளை செயலாளர் செழியன், தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர் மணி, மூத்த உறுப்பினர் பத்ராசலம், மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடனிருந்தனர்.

    • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ வழங்கினார்.
    • ஓய்வூதியத்திற்கான ஆணை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலம் மூலம் உப்பளம் தொகுதியை சேர்ந்த மீனவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் தொகை பெறுவதற்கான ஆணையை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பொதுமக்களின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து வழங்கினார்.

    பயனாளிகளுக்கு ஓய்வூதியம் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்பதனையும் அவர் தெரிவித்தார். ஓய்வூதியத்திற்கான ஆணை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

    உடன் தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர்கள் முரளி மற்றும் ராகேஷ், செங்குட்டு, மணிமாறன், கோபி, புண்ணியகோடி, ஜீவா, தினேஷ், செல்லப்பன், ஜெயசீலன், மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • சட்டசபையில் சந்தித்து அவரிடம் முறையாக வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் இளைஞர்களின் நிலைப்பாட்டினை எடுத்துக் கூறினார்.
    • பொருளாளர் மணிமாறன், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, உள்பட பலர் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை நீர் விளையாட்டு மற்றும் சாகச விளையாட்டு வழிகாட்டுதல்களில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளின் படி உப்பளம் தொகுதியில் பாண்டி மெரினா பின்புறம் 15 சுற்றுலா படகுகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    மேலும் தொகுதி இளைஞர்களிடம் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை கடைப்பிடியுங்கள், உள்நாட்டில் மீன் பிடித்தாலும் இடையூறு விளைவிக்காத வகையில் நடந்து கொள்ளுங்கள், சுற்றுலா பயணிகளை தொந்தரவு கொடுக்காமல் அவர்களிடம் கனிவுடன் பேசி படகு டிக்கெட் புக் செய்து கொள்ளுங்கள், என்று கேட்டுக் கொண்டார்.

    மேலும் இது சம்பந்தமாக மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜியை நேரில் சந்தித்து பேசினார்.

    அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து அவரிடம் முறையாக வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் இளைஞர்களின் நிலைப்பாட்டினை எடுத்துக் கூறினார். பின்னர் முறைப்படி அனுமதி பெற்றார்.

    உடன் நகராட்சி உதவியாளர் பிரபாகரன், தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், வம்பாகீரப்பாளையம் பஞ்சாயத்து தலைவர்கள், நிர்வாகிகள், பொருளாளர் மணிமாறன், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×