என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மதுபார்கள்- இறைச்சி கடைகளை மூட வேண்டும்-அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பேசியதாவது:
- கிறிஸ்தவ மக்களின் நீண்டநாள் கோரிக்கையான புனிதவெள்ளி அன்று இறைச்சி, மதுக்கடைகளை மூட முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பேசியதாவது:-
கிறிஸ்தவ மக்களால் புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. அன்றயை தினம் புதுவையில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும், இறைச்சிகடைகளையும் விடுமுறை அளித்து மூட உத்தரவிட வேண்டும். வள்ளலார்தினம், காந்திஜெயந்திபோல கிறிஸ்து மறித்த தினத்தை புதுவை அரசு அனுசரிக்க வேண்டும்.
கிறிஸ்தவ மக்களின் நீண்டநாள் கோரிக்கையான புனிதவெள்ளி அன்று இறைச்சி, மதுக்கடைகளை மூட முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story






