search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anger over separation"

    • வீட்டில் காயத்துடன் மர்மமான முறையில் காதர்மொய்தீன் இறந்து கிடந்தார்.
    • சந்தேக மரண வழக்கை கொலை வழக்கமாக மாற்றி கருங்கல்பாளையம் போலீசார் லோகுவை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிருஷ்ணம்பாளையம், சிந்தன் நகர், 4 -வது வீதியைச் சேர்ந்தவர் காதர்மொய்தீன் (62). பெயிண்டர். தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் காயத்துடன் மர்மமான முறையில் காதர்மொய்தீன் இறந்து கிடந்தார். கருங்கல்பாளையம் போலீசார் உடலை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். காதர்மொய்தீன் பிரேத பரிசோதனை முடிவு வெளி வந்தது.

    அதில் விலா எலும்பு உடைந்து நுரையீரலில் குத்தியதில் காதர் மொய்தீன் இறந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக கருங்கல் பாளையம் பச்சையம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த லோகு (34) என்ற கட்டிட தொழிலாளியை போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது அவர் மொய்தீனை கொன் றதை ஒப்புக் கொண்டார்.

    இது குறித்து போலீசார் கூறியதாவது:

    காதர் மொய்தீன், லோகு பல இடங்களில் ஒன்றாக வேலை பார்த்த போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி மதுவும் அருந்தி வந்துள்ளனர்.

    காதர் மொய்தீன் அடிக்கடி நாகூர் சென்று பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். அங்கு வீட்டு வேலை செய்ய ஒரு பெண் தேவை என்று கேட்டுள்ளார். இதையடுத்து லோகுவின் மனைவியை அங்கு வேலைக்கு சேர்த்து உள்ளார்.

    இந்நிலையில் மனைவி மாயமானதாக நினைத்து லோகு ஆத்திரத்தில் இருந்து உள்ளார். நாகூரில் அவர் வேலை செய்வதும் அதற்கு காதர் மொய்தீன் தான் காரணம் என்று தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    கடந்த 7-ந் தேதி இரவு இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது லோகு, காதர் மொய்தீனை கைகளால் தாக்கியும், நெஞ்சு விலா எலும்பு பகுதியில் கால்களால் ஏறியும் மிதித்துள்ளார்.

    இதில் மொய்தீன் மூச்சுத் திணறி இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

    இவ்வாறு போலீசார் கூறினர்.

    இதனை அடுத்து சந்தேக மரண வழக்கை கொலை வழக்கமாக மாற்றி கருங்கல்பாளையம் போலீசார் லோகுவை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். 

    ×