search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andrew"

    ஆண்ட்ரூ இயக்கத்தில் விஜய் ஆண்டனி - அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் `கொலைகாரன்' படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. #Kolaikaran #VijayAntony
    `காளி' படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி தற்போது ‘திமிரு பிடிச்சவன்’ மற்றும் ‘கொலைகாரன்’ படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘கொலைகாரன்’ படத்தை ஆண்ட்ரூ இயக்குகிறார். படத்தில் விஜய் ஆண்டனியுடன், நடிகர் அர்ஜுனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இரும்புத்திரை படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம், ரசிகர்களை கவர்ந்து விட்ட அர்ஜுன், இந்த படத்திலும் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

    தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.



    தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆஷிமா நர்வால் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

    முகேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ரிச்சர்டு கெவின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். #Kolaikaran #VijayAntony #Arjun

    `இரும்புத்திரை' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக இருக்கும் `கொலைகாரன்' படத்தில் முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க நடிகர் அர்ஜுன் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Kolaikaran #VijayAntony #Arjun
    விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான காளி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், விஜய் ஆண்டனி தற்போது கணேசா இயக்கத்தில் ‘திமிரு பிடிச்சவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 

    இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ‘கொலைகாரன்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். ஆண்ட்ரூ இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்க இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். தற்போது படக்குழு அதனை உறுதிப்படுத்தியுள்ளது. தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிக்கும் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். 



    விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான `இரும்புத்திரை' படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அர்ஜுன் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    விஜய் ஆண்டனி, அர்ஜுன் இரண்டு பேரில் வில்லன் யார்? என்பது தான் படத்தின் கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்த பிறகு விஜய் ஆண்டனி `மூடர்கூடம்' நவீன் இயக்கத்தில் ஒரு படத்திலும், `திருடன்' என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். #Kolaikaran #VijayAntony #Arjun

    ×