search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ancient temple"

    • பெரியாண்டவர், பெரியாயி மயான கொள்ளை நிறைவு விழா.
    • சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் பெரியாண்டவர், பெரியாயி மயான கொள்ளை நிறைவு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

    இந்நிகழ்வில் அங்காள பரமேஸ்வரி அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அமர்ந்து மாடவீதி, குளத்து தெரு, புதிய தெரு உள்ளிட்ட கிராமத்தில் முக்கிய வீதியின் வழியாக உலா வந்தது. இறுதியாக கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியாயி சிலையை வலம் வந்து பக்தர்கள் கொண்டு வந்த காய்கனிகள், தானியங்கள் மற்றும் பொறிகளை சூறையாடி பெரியாயி சிலையை சுற்றி இறைத்து ஆக்ரோஷமாக பக்தர்கள் அரிவாளுடன் வலம் வருவர். 

    மேலும் வேண்டுதல் உள்ள பக்தர்கள் பெரியாண்டவர், பெரியாயி உள்ளிட்ட பல்வேறு வேடம் அணிந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவர்.

    இந்நிகழ்வைக் காண போளூர், சேத்துப்பட்டு, அவனியாபுரம், கொழப்பலூர், பெரணமல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • உடனடியாக அங்கு ஊர் மக்கள் திரண்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    • பழமையான கோவிலில் அம்மன் சிலையை உடைத்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

    கோவை:

    கோவை காருண்யா நகர் அருகே நல்லூர் வயல்பதி என்ற மலைவாழ் மக்களின் கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான சடையாண்டியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக ராம் கணேஷ் (வயது28) என்பவர் இருந்து வருகிறார்.

    இவர் வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழைமைகளில் கோவிலுக்கு சென்று பூஜை செய்வது வழக்கம். அதன்படி பூசாரி ராஜ்குமார் நேற்று காலை 10.30 மணியளவில் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக சென்றார்.

    அப்போது கோவில் உள்ள பூமாரியம்மன் சாமி சிலையில் தலை மற்றும் இடது கை ஆகியவை சேதப்படுத்தப்பட்டு உடைந்து கிடந்தது.

    சிலையை யாரோ மர்மநபர் உடைத்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து பூசாரி ராஜ்குமார் ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக அங்கு ஊர் மக்கள் திரண்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த தகவல் கிடைத்ததும் காருண்யாநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஊர் பொதுமக்கள் அம்மன் சிலையை உடைத்தவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இது குறித்து காருண்யா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மலைவாழ் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் அம்மன் சிலையை உடைத்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • அதிகாரிகள் ஆய்வு
    • திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் எலத்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் மாசிமகம் திருவிழா நடத்துவதற்காக பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வந்தது. இதனையொட்டி அருகில் தீர்த்தவாரி நடைபெறும் செய்யாற்றில் பொக்லைன் எந்திரம் கொண்டு சமன் செய்யப்பட்டது. அப்போது அங்கு மண்ணில் பெரிய பெரிய கற்கள் சிக்கி உள்ளன. அதன்பிறகு சிறிது தூரத்தில் பக்கவாட்டில் தோண்டிய போது பழமையான செங்கல் சுவர் இருப்பது தெரியவந்தது. உடனடியாக பொக்லைன் எந்திரத்தின் பணி நிறுத்தப்பட்டது.

    அந்த இடத்தில் பழமை வாய்ந்த கோவில் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று கருதப்பட்டதால் அதுகுறித்து வருவாய்த்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) வருவாய்த்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்த்து ஆய்வு செய்ய உள்ளதாகவும், அதன்பிறகே அந்த இடத்தை தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

    இது பற்றி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்:-

    எலத்தூர் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் பல ஆண்டுகளாக திருவிழாக்கள் நடத்தப்படாமல் இருந்து வந்தது. தற்போது இந்த ஆண்டு திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் செய்யாற்றின் கரை ஓரம் சமன் செய்தபோது அங்கு கற்கள் இருப்பது தென்பட்டது.

    மேலும் கோவிலின் மேல் மட்டம் இருப்பது போன்றும், பக்கவாட்டில் அந்த காலத்தில் கட்டப்பட்ட செங்கல் சுவர்கள் இருப்பது போன்றும் தெரியவந்தது. உடனடியாக வருவாய்த்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தோம். அவர்கள் முன்னிலையில் இதை சுற்றி பள்ளம் எடுத்து பார்த்தால் தான் கோவில் உள்ளதா என்பது தெரியும்.

    இச்சம்பவம் கிராமத்து பொது மக்களிடையே ஒரு பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார்.

    • முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் பரபரப்பு பேச்சு
    • 200 சிவனடியார்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி- ஜனதாபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு உலக சிவனடியார்கள் திரு கூட்ட பொறுப்பாளர்கள் தலைமை தாங்கினார்கள்.

    சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற சிலைகள் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டு, சிவனடியார்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசினார்.

    அவர் பேசுகையில், வேலூர் அருகே 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்கள் பராமரிப்பின்றி காணாமல் போய் உள்ளது, சோழபுரம் (சோழவரம்) என்ற பகுதியில் சோழ மன்னன் கம்பு வர்மன் இறந்த இடத்தில் அவரது மகன் விஜய வர்மன் ஒரு சிவன் கோயில் எழுப்பியுள்ளார். அதற்கு அருகாமையில் ஒரு பெருமாள் கோவிலும் அதற்கு அருகாமையிலேயே ஒரு காளி கோவிலும் இருந்துள்ளது.

    அவை பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் நிலத்தில் மூழ்கி மூடப்பட்டுள்ளது. அதன் அருகாமையிலேயே ராஜராஜேஸ்வரன் கோவில் அமைந்துள்ளது.

    இதனை கட்டியது தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ தேவன் தான் கட்டியுள்ளார். முதலாம் குலோத்துங்க சோழனுடைய கல்வெட்டுக்கள், முதலாம் ராஜேந்திர சோழ தேவரின் கல்வெட்டுக்கள் இவையெல்லாம் மண்ணில் புதைந்து உள்ளது. இந்த கோவில்கள் அங்கு இருக்கிறதா, இல்லையா என்பதே தெரியாத அளவிற்கு பாடடைந்துள்ளது.

    இதனை சிவனடியார்களாகிய நாம் முயற்சி செய்து தொல்லியல் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று அடையாள சின்னங்களாக அறிவிக்க செய்ய வேண்டும்.

    கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டு கொண்டு இருக்கக்கூடிய எந்த அரசும் கண்டு கொள்ளவில்லை என கூறினார். தொடர்ந்து 200 சிவனடியார்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிலைகளை பாதுகாப்பதற்காக அரசு 340 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து சிலை பாதுகாப்பு அறைகளை கட்ட உத்தரவிட்டது, இந்த நிலையில் இதுவரையிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் அறைகள் கட்டப்படாமல் உள்ளது. ஒரே ஒரு கோவிலில் மட்டுமே சிலை பாதுகாப்பு அறை கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது,

    அறலையத்துறை சார்பில் கோவில் சொத்துக்கள் ஆன்லைனில் பதிவேற்றி பாதுகாக்கப்படும் என சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவித்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் உள்ளதாகவும் அதன் தொன்மை தன்மையை அரசு அறிக்கையாக வெளியிட வேண்டும்.

    மேலும் கோவில்களிலிருந்து கடத்தப்பட்ட சிலைகளில், மீட்கப்பட்டுள்ளவற்றை அருங்காட்சியகங்களில் வைக்காமல் மீண்டும் சம்பந்தப்பட்ட கோவில்களிலேயே கொண்டு வந்து வைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    முடிவில் ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.தாமோதரன் நன்றி கூறினார்.

    • கூடலூரில் பழமையான ஈஸ்வரன் கோவிலை கையகப்படுத்த அறநிலையத்துறை நடவடிக்கை
    • இதனால் உள்ளூர் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கூடலூர் :

    தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து தாமரைக்குளம் செல்லும் வழியில் பழமையான ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலை 1446-ம் ஆண்டில் திருவனந்தபுரத்தை சேர்ந்த பூஞ்சாற்றுதம்புரான் என்ற மன்னன் கட்டியதாகவும், இக்கோவிலுக்கு மானிய மாக நிலங்களும், நீர்பாச–னத்திற்காக தாமரை–க்குளத்தையும் வழங்கியதாக கூறப்படுகிறது.

    கடந்த பல ஆண்டுகளாக கோவில் பராமரிப்பின்றி இருந்ததால் கோபுரம் மற்றும் கட்டிடங்கள் சிதிலமடைந்து வந்தன. எனவே கோவிலை புனரமைத்து பக்தர்கள் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என இந்துமுன்னணியினர் தமிழக இந்துசமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இந்து சமய அறநிலை-யத்துறை இணைஇயக்கு–னர் கலையழகன் உத்தரவி–ன்பேரில் தியாகராஜன் மற்றும் கூடலூர் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் ஆகியோர் ஈஸ்வரன் கோவிலுக்கு வந்து பார்வையிட்டனர்.

    இதனைதொடர்ந்து இந்த கோவிலை இந்து சமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் அதனை ஒரு வாரத்திற்குள் மனுவாக அளிக்கலாம் என்று நகரின் முக்கிய இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. –இதனால் உள்ளூர் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு வார த்தில் தகுந்தகாரண ங்களுடன்யாரும் ஆட்சே பணை தெரிவிக்கா விட்டால் இந்த கோவிலை இந்துசமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் தற்போது தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. அவையும் இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×