என் மலர்
நீங்கள் தேடியது "American Parliament"
- எச்-1பி விசா திட்டத்தால் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு பறிபோவதாக டிரம்ப் கட்சியினர் தகவல்.
- அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் ஓரம் கட்டப்படுகிறார்கள்.
அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணியாற்ற எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை அதிகளவில் இந்தியர்கள்தான் பெற்று உள்ளனர்.
இதற்கிடையே எச்-1பி விசாவுக்கு அதிபர் டிரம்ப் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (ரூ.88 லட்சம்) உயர்த்தியது. எச்-1பி விசா திட்டத்தால் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு பறிபோவதாக டிரம்ப் கட்சியினர் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் எச்-1பி விசா திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப் போவதாக டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பியான மார்ஜோரி டெய்லர் கிரீன் தெரிவித்துள்ளார்.
எச்-1பி விசா திட்டத்தை அமெரிக்காவில் உள்ள பல நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துகின்றன. இதன் மூலம் அமெரிக்க ஊழியர்களின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் ஓரம் கட்டப்படுகிறார்கள்.
இதனால் எச்-1 பி திட்டத்தை முழுமையாக நிறுத்தும் மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வர போகிறேன். அமெரிக்கர்கள் உலகின் மிகவும் திறமையான மக்கள், மேலும் எனக்கு அமெரிக்க மக்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது. நான் எப்போதும் அமெரிக்கர்களை முதன்மைப்படுத்துவேன்.
எனது மசோதா ஊழல் நிறைந்த எச்-1பி திட்டத்தை நீக்கும் என்றார். சமீபத்தில் அதிபர் டிரம்ப், எச்-1பி விசா தொடர்பான தனது கருத்தில் இருந்து பின்வாங்கினார். அமெரிக்காவுக்கு திறமையான வெளிநாட்டு பணியாளர்கள் தேவை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பள்ளி ஒன்றில் ஜோசுவா டிரம்ப் என்ற 11 வயது சிறுவன் படித்து வருகிறான்.
அமெரிக்க அதிபரின் பெயர் இந்த சிறுவனுக்கும் சூட்டப்பட்டு இருந்ததால் சிறுவனை சக மாணவர்கள் கிண்டலடித்து வந்தனர்.
இதனால் கடும் மன உளைச்சலில் தவித்து வந்தான். மேலும் அவனை மாணவர்கள் கிண்டலடிப்பது தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இந்த பிரச்சினையால் அந்த சிறுவனையே பள்ளி நிர்வாகம் நீக்கப்போவதாக அறிவித்தது.
இந்த சிறுவன் விவகாரம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் டிரம்பின் கவனத்துக்கும் இது வந்தது.
அமெரிக்க அதிபர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க கூட்டு பாராளுமன்ற கூட்டத்தில் உரை நிகழ்த்துவது வழக்கம்.
இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அதிபர் தரப்பில் இருந்து சிறப்பு அழைப்பாளர்களை பாராளுமன்றத்துக்கு வரவழைக்கலாம். அதன்படி அதிபர் டிரம்ப் தனது மனைவி உள்பட 13 பேரை அழைத்திருந்தார்.
அதில், சிறுவன் ஜோசுவா டிரம்பும் ஒருவன். சக மாணவர்கள் கேலி- கிண்டலால் பாதிக்கப்பட்டு இருந்த அவனை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் சிறுவனை டிரம்ப் அழைத்திருந்தார்.

இந்த புகைப்படம் ஊடகங்களில் வெளியானது. அந்த படத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் பரவ விட்டு இது சம்பந்தமாக விமர்சனமும் செய்து இருக்கிறார்கள்.
டிரம்ப் உரையில் எதுவும் இல்லாததால் சிறுவன் தூங்கி விட்டான் எனவும், டிரம்ப் உரை தூங்குவதற்குத்தான் உதவும் என்று பலவாறு கிண்டலடித்து அந்த படத்துக்கு கருத்து கூறி தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும் டிரம்ப் உரையின் போது தூங்கியதற்கான அந்த சிறுவனுக்கு பாராட்டும் தெரிவித்து இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக மாறி இருக்கிறது. #JoshuaTrump #Trump






