என் மலர்
நீங்கள் தேடியது "Alexander"
- அலெக்சாண்டர் பாபு 'alexperience' என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
- அலெக்சாண்டர் பாபு, பிரதமர் மோடியை போலவே மிமிக்ரி செய்து கிண்டல் செய்துள்ளார்.
பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனான அலெக்சாண்டர் பாபு சில வருடங்களுக்கு முன்பு நடத்திய அலெக்ஸ் இன் வொண்டர்லேண்ட் நிகழ்ச்சி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
தற்போது அலெக்சாண்டர் பாபு 'alexperience' என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். தற்போது இந்த நிகழ்ச்சி அன்பா டிவி என்ற OTT-இல் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அலெக்சாண்டர் பாபு, பிரதமர் மோடியை போலவே மிமிக்ரி செய்து கிண்டல் செய்துள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
alexperience நிகழ்ச்சியில் பேசிய அலெக்சாண்டர் பாபு, "அரசியலில் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக perform செய்வது நம்ம ஜி தான். அவரை அடிச்சிக்கவே முடியாது. அதிலும் இசையில் அவர் ரொம்ப strong. அவர் ஒன்றும் பாடகர் கிடையாது. ஆனால் தற்போதைய தொழில் நுட்பத்தால் அனைவரும் பாட்டு பாடுகிறார்கள். அவர் பாடகர் இல்லை என்றாலும், ஒரு ராகம் வைத்துள்ளார். மித்ரோன்....இப்படி தான் நம்ம கத்துறோம்... அந்த ராகத்தில் எது வேண்டுமானலும் அழகாக உட்கார்ந்து விடுகிறது. மித்ரோன்... இப்படி சொல்லி தான் எல்லாத்தையும் வித்துருவோம்...
நாடகத்திலும் அவர் கைதேர்ந்தவர். அவர் பேசுவதை டிவியில் பார்த்தல் சப்டைட்டில் இல்லாமல் கூட தெளிவாக புரியும். உங்களுக்கு ஒருவார்த்தை இந்தி தெரியவில்லை என்றாலும் கூட, அவரது உடல்மொழியை எல்லாத்தையும் சொல்லிவிடும்.
மித்ரோன்... ஊரெல்லாம் சுத்துறோம்... யாரும் எதுனா சொன்னா என்போர்ஸ்மென்ட் அனுப்பி எல்லார் வாயையும் பொத்துறோம்..." என்று கிண்டலாக தெரிவித்தார்.
மேலும் டெலிபிராம்ப்டர் வைத்து மோடி பேசுவதையும், தமிழ்நாட்டிற்கு வந்தால் அவர் தமிழில் பேசுவதை போலவும் அலெக்சாண்டர் பாபு பேசி அசத்தினார்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஆஸ்திரியா வீரர் டோமினிச் திம்மை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அலெக்சாண்டர் ஸ்வேரேவ் வென்ற 3-வது ஏ.டி.பி. உலக டூர் மாஸ்டர்ஸ் பட்டம் இதுவாகும். #MadridOpen






