என் மலர்
நீங்கள் தேடியது "aims"
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, ஐகோர்ட்டில் விசாரணையில் இருந்த இது தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்டது. #AIIMS
மதுரை:
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.கே.ரமேஷ் மேலும் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தில் ஈரோடு, மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 இடங்கள் தேர்வு செய்து தமிழக அரசு அறிக்கை அளித்தது. அந்த இடங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்து உள்ளனர். அவற்றில் எந்த இடத்தில் மருத்துவமனை அமைய உள்ளது என முடிவு செய்ய கூடுதலாக காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.
இதனை அடுத்து, ஜுன் 14-ம் தேதிக்குள் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். கடந்த 14-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது இடத்தை தேர்வு செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை தமிழக அரசும் உறுதிபடுத்தியுள்ளது. இதனை அடுத்து, விசாரணையில் இருந்த மேற்கண்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை தெரிவிக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய சுகாதாரத்துறை மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. #AIMS
மதுரை:
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.கே.ரமேஷ் மேலும் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தில் ஈரோடு, மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 இடங்கள் தேர்வு செய்து தமிழக அரசு அறிக்கை அளித்தது. அந்த இடங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்து உள்ளனர். அவற்றில் எந்த இடத்தில் மருத்துவமனை அமைய உள்ளது என முடிவு செய்ய கூடுதலாக காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.
இதனை அடுத்து, ஜுன் 14-ம் தேதிக்குள் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்நிலையில், இடத்தை தேர்வு செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக வரும் 18-ம் தேதி நடக்க உள்ள தேர்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்க உள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 20-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
மக்கள் அனைவருக்கும் மலிவு விலையில் மருத்துவ வசதி கிடைக்க செய்வதே அரசின் நோக்கம் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். #Healthcare #NarendraModi
புதுடெல்லி:
மலிவு விலையில் இதய ‘ஸ்டென்டுகள்’ மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், மத்திய அரசின் ‘பிரதம மந்திரி பாரதிய ஜனஉஷாதி பரியோஜனா’ திட்டத்தின் பயனாளிகள் மற்றும் பல்வேறு சுகாதார திட்ட பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பயனாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும் போது கூறியதாவது:-
நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு, நோய்களுக்கான மருந்துகளை வாங்குவதுதான் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் மலிவு விலையில் மருத்துவ வசதி கிடைக்க செய்வதே எங்கள் அரசின் நிலையான முயற்சியும், நோக்கமும் ஆகும்.
ஏழை, நடுத்தர மக்கள் மலிவு விலையில் மருந்துகளை வாங்குவதற்காக பிரதம மந்திரி பாரதிய ஜனஉஷாதி பரியோஜனா தொடங்கப்பட்டது. இதன் மூலம் அவர்களின் நிதிச்சுமை குறைந்துள்ளது.
நாடு முழுவதும் 3,600 மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. அங்கு 700 வகையான மருந்துகள், மார்க்கெட் விலையில் இருந்து 50 முதல் 90 சதவீதம் வரை குறைந்த விலையில் கிடைக்கின்றன. இத்தகைய மருந்தகங்களின் எண்ணிக்கை விரைவில் 5 ஆயிரமாக உயர்த்தப்படும்.
இதயத்தில் பொருத்தப்படும் ஸ்டென்டுகளை வாங்குவதற்கு முன்பெல்லாம் மக்கள் தங்கள் சொத்துகளை விற்கவோ, அடமானம் வைக்கவோ செய்தார்கள். ஆனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வசதிக்காக இந்த ஸ்டென்டுகளின் விலையை அரசு கணிசமாக குறைத்தது. அதன்படி ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.29 ஆயிரமாக அது குறைக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 1½ லட்சம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிகிச்சைக்கான கட்டணமும் 60 முதல் 70 சதவீதம் வரை, அதாவது ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.70 ஆயிரமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு ரூ.1,500 கோடி வரை மிச்சமாகி இருக்கிறது.
பிரதம மந்திரி ராஷ்ட்ரீய டயாலிசிஸ் திட்டம் மூலம் 500-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 2.25 லட்சம் நோயாளிகளுக்கு 22 லட்சம் டயாலிசிஸ் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மேலும் மிஷன் இந்திராதனுஷ் திட்டத்தின் கீழ் 528 மாவட்டங்களில் 3.15 கோடி குழந்தைகள் மற்றும் 80 லட்சம் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளன.
காசநோயை முற்றிலும் ஒழிக்க சர்வதேச அளவில் விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன்னரே, அதாவது 2025-ம் ஆண்டுக்குள்ளே இந்தியாவில் காச நோயை ஒழிக்க அரசு திட்டமிட்டு உள்ளது. சர்வதேச யோகா தினம் விரைவில் கொண்டாடப்படும் நிலையில், மக்கள் அனைவரும் யோகாவை தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். #Healthcare #NarendraModi #Tamilnews
மலிவு விலையில் இதய ‘ஸ்டென்டுகள்’ மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், மத்திய அரசின் ‘பிரதம மந்திரி பாரதிய ஜனஉஷாதி பரியோஜனா’ திட்டத்தின் பயனாளிகள் மற்றும் பல்வேறு சுகாதார திட்ட பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பயனாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும் போது கூறியதாவது:-
நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு, நோய்களுக்கான மருந்துகளை வாங்குவதுதான் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் மலிவு விலையில் மருத்துவ வசதி கிடைக்க செய்வதே எங்கள் அரசின் நிலையான முயற்சியும், நோக்கமும் ஆகும்.
ஏழை, நடுத்தர மக்கள் மலிவு விலையில் மருந்துகளை வாங்குவதற்காக பிரதம மந்திரி பாரதிய ஜனஉஷாதி பரியோஜனா தொடங்கப்பட்டது. இதன் மூலம் அவர்களின் நிதிச்சுமை குறைந்துள்ளது.
நாடு முழுவதும் 3,600 மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. அங்கு 700 வகையான மருந்துகள், மார்க்கெட் விலையில் இருந்து 50 முதல் 90 சதவீதம் வரை குறைந்த விலையில் கிடைக்கின்றன. இத்தகைய மருந்தகங்களின் எண்ணிக்கை விரைவில் 5 ஆயிரமாக உயர்த்தப்படும்.
இதயத்தில் பொருத்தப்படும் ஸ்டென்டுகளை வாங்குவதற்கு முன்பெல்லாம் மக்கள் தங்கள் சொத்துகளை விற்கவோ, அடமானம் வைக்கவோ செய்தார்கள். ஆனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வசதிக்காக இந்த ஸ்டென்டுகளின் விலையை அரசு கணிசமாக குறைத்தது. அதன்படி ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.29 ஆயிரமாக அது குறைக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 1½ லட்சம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிகிச்சைக்கான கட்டணமும் 60 முதல் 70 சதவீதம் வரை, அதாவது ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.70 ஆயிரமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு ரூ.1,500 கோடி வரை மிச்சமாகி இருக்கிறது.
பிரதம மந்திரி ராஷ்ட்ரீய டயாலிசிஸ் திட்டம் மூலம் 500-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 2.25 லட்சம் நோயாளிகளுக்கு 22 லட்சம் டயாலிசிஸ் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மேலும் மிஷன் இந்திராதனுஷ் திட்டத்தின் கீழ் 528 மாவட்டங்களில் 3.15 கோடி குழந்தைகள் மற்றும் 80 லட்சம் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளன.
காசநோயை முற்றிலும் ஒழிக்க சர்வதேச அளவில் விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன்னரே, அதாவது 2025-ம் ஆண்டுக்குள்ளே இந்தியாவில் காச நோயை ஒழிக்க அரசு திட்டமிட்டு உள்ளது. சர்வதேச யோகா தினம் விரைவில் கொண்டாடப்படும் நிலையில், மக்கள் அனைவரும் யோகாவை தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். #Healthcare #NarendraModi #Tamilnews






