search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "agreements"

    • பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் பிரசண்டாவும் நேற்று சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு ஏற்ற வகையில் ஒப்பந்தம்.

    நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா, அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இவருடன் உயர்மட்டக் குழுவினரும் வந்துள்ளனர்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள ஐதராபாத் பவனில் பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் பிரசண்டாவும் நேற்று சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பேச்சுவார்த்தையை தொடர்ந்து, வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு ஏற்ற வகையில் இருநாடுகளுக்கிடையே 7 ஒப்பந்தங்களில் கையெழுத்தாகின.

    இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, " நாங்கள் இரு தரப்பு உறவை இமாலய உயரத்துக்கு எடுத்துச்செல்வதற்கு தொடர்ந்து பாடுபடுவோம். இதே உணர்வுடன் நாங்கள், அது எல்லைப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, பிற பிரச்சினைகளாக இருந்தாலும் சரி எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம்.

    கலாசார, ஆன்மிக உறவுகளை மேலும் பலப்படுத்தும் விதத்தில், பிரதமர் பிரசண்டாவும் நானும் ராமாயண சுற்று தொடர்பான திட்டங்களை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளோம்" என்றார்.

    8 நாட்கள் அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியாடெஸ் இருவருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பில் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. #PresidentRamNathKovind #Cyprus #PresidentNicosAnastasiades
    நிகோசியா:

    குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் 8 நாள் அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். தனது பயணத்தின் முதல் நாடாக சைப்ரஸ் நாட்டுக்கு சென்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்ற உள்ளதாக முன்னரே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி, இன்று சைப்ரஸ் நாட்டின் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியாடெஸ்-ஐ சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் இருநாட்டு உறவுகள் குறித்தும், இதர பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இதையடுத்து, இருநாட்டு அதிபர்கள் முன்னிலையில், பண மோசடியை தடுப்பது உள்ளிட்ட 2 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதையடுத்து, 4-ம் தேதி வரை சைப்ரஸ் நாட்டில் இருக்கும் ஜனாதிபதி, அதன் பிறகு பகேரியா மற்றும் செக் குடியரசு நாடுகளுக்கு அடுத்தடுத்து பயணம் மேற்கொள்கிறார். #PresidentRamNathKovind #Cyprus #PresidentNicosAnastasiades
    ×