search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aggie competition"

    • கல்வி சர்வதேச பொதுப்பள்ளி சார்பில் மகளிர் ஆக்கி போட்டி நடந்தது.
    • விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் இருந்து 27 அணிகள் பங்கேற்கின்றன.

    சோழவந்தான்

    தேனி மாவட்டம் பெரிய குளம் தாலுகா தேவதான பட்டியில் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி சார்பாக மகளிர் ஆக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதனை சரவணகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா, பெரிய குளம் பேரூராட்சி தலைவர் முருகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி குழும தலைவர் டாக்டர் செந்தில்குமார் வரவேற்றார்.

    இந்த விழாவில், தமிழ்நாடு ஆக்கி யூனிட் தலைவர் சேகர் மனோகரன், பொது செயலாளர் டாக்டர் செந்தில் குமார், தேனி மாவட்ட ஆக்கி செயலாளர் சங்கிலி காளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    4 நாட்கள் நடக்கும் இந்த விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் இருந்து 27 அணிகள் பங்கேற்கின்றன.

    • தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையே காஜாமியான் சுழற்கோப்பை ஆக்கி போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
    • போட்டியினை கல்லூரியின் பொருளாளர் எம்.ஜே.ஜமால் முகமது, கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினரும், கவுரவ இயக்குனருமான முனைவர் கே.என்.அப்துல் காதர் நிகால் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    திருச்சி,

    திருச்சி ஜமால் முகமது கல்லூரி உடற்கல்வித்துறையின் சார்பில் ஆண்டு தோறும் தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையே காஜாமியான் சுழற்கோப்பை ஆக்கி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 20-வது ஆண்டாக காஜாமியான் சுழற்கோப்பை ஆக்கி போட்டி நடத்தப்பட்டது.

    கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியினை கல்லூரியின் பொருளாளர் எம்.ஜே.ஜமால் முகமது, கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினரும், கவுரவ இயக்குனருமான முனைவர் கே.என்.அப்துல் காதர் நிகால் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் கல்லூரியின் உதவிச் செயலாளர் முனைவர் கே.அப்துஸ் சமது, கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.இஸ்மாயில் முகைதீன், துணை முதல்வர் முனைவர் ஏ.முகமது இப்ராஹிம், உடற்கல்வி இயக்குனர் முனைவர் பி.எஸ்.ஷாயின்ஷா மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் காஜாமியான் சுழற்கோப்பை, இரண்டாவது பரிசாக ரூ.7 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை, மூன்றாவது பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை, நான்காவது பரிசாக ரூ.3 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட உள்ளது.

    முன்னதாக முதல் போட்டியை கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2-0 என்ற கோல் கணக்கில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அணியை வென்றது. தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றது.




    • டை-பிரேக்கர் முறை பின்பற்றப்பட்டது.
    • பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி, சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணியினர் இறுதி போட்டியில், செஞ்சுரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியை எதிர்த்து விளையாடினர்.ஆட்ட முடிவில்இரு அணியினரும் தலா ஒரு கோல் மட்டுமே அடித்திருந்தனர். இதையடுத்து டை-பிரேக்கர் முறை பின்பற்றப்பட்டது.இதில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர்.வெற்றி பெற்ற அணிக்காக விளையாடிய மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல் ஆகியோருக்கு தலைமையாசிரியர் அப்துல்காதர், உதவி தலைமையாசிரியர்கள் மூர்த்திராஜன், செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.

    ×