என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "adi kumbeswarar temple"

    • டிசம்பர் மாதம் 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர்கள் முடிவு செய்து உள்ளனர்.
    • 2 கொலுசுகளை டெல்லியை சேர்ந்த பெண் தொழிலதிபர் வழங்கினார்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவில் மகாமகத்துடன் தொடர்புடைய கோவில்களில் முதன்மையான கோவிலாக உள்ளது. இந்த கோவிலில் வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர்கள் முடிவு செய்து உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தற்போது கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த கோவிலில் மங்களம் என்ற யானை உள்ளது. இந்த யானைக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் 1½ கிலோ எடையில் வெள்ளியில் செய்யப்பட்ட 2 கொலுசுகளை டெல்லியை சேர்ந்த பெண் தொழிலதிபர் வழங்கினார்.

    இதனைத்தொடர்ந்து கோவில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து, யானை மங்களத்தின் 2 முன்னங்கால்களில் புதிய வெள்ளிக்கொலுசுகளை அணிவித்தனர்.

    அப்போது கோவில் செயல் அலுவலர் முருகன், மற்றும் யானைப்பாகன் அசோக் மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர். கால்களில் வெள்ளி கொலுசுகளை அணிந்தபடி நின்ற கோவில் யானை மங்களத்தை திரளான பக்தர்கள் பார்த்து ரசித்து சென்றனர்.

    • கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது.
    • இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் நடைபெறும் மகாமக விழா உலக அளவில் பிரசித்திப்பெற்றதாகும்.

    இந்த கோவிலில் மந்திர பீடேஸ்வரி என்கிற மங்களாம்பிகை அம்பாளுடன் ஆதி கும்பேஸ்வர சாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பழமையான இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி கோவில் விமான பாலாலய விழா வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதனை முன்னிட்டு 24-ந் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புன்யா யாகவாசனம், கணபதி ஹோமம் மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து 25-ந் தேதி கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்ட பூஜைகளும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

    26-ந் தேதி 3-ம் கால யாகசாலை பூஜைகளும், 27-ந் தேதி நான்காம் கால யாகசாலை பூஜைகளும் நடக்கிறது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விமான பாலாலய விழா குழுவினர் மற்றும் மந்திரபீடேஸ்வரி பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.

    • 2009-ம் ஆண்டு ஜூன் 5-ந்தேதி குடமுழுக்கு நடந்தது.
    • இன்று முதல் கால யாக சாலை பூஜை நடக்கிறது.

    கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆதிகும்பேஸ்வரர் மங்களாம்பிகை அம்பாளுடன் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்தக்கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 5-ந்தேதி குடமுழுக்கு நடந்தது.

    இந்தநிலையில் மீண்டும் கோவிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக அரசு மற்றும் உபயதாரர்கள் பங்களிப்புடன் ரூ.8 கோடியில் திருப்பணி தொடங்க முடிவு செய்யப்பட்டது. நேற்று காலை மகா கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பாலாலய சிறப்பு யாகம் நடந்தது.

    இன்று(சனிக்கிழமை) முதல் கால யாக சாலை பூஜைகளும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) 2, 3-ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெறுகிறது. வருகிற 27-ந்தேதி 4-ம் கால யாகசாலை பூஜை தொடங்கி, யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு, அத்திமரத்தில் வரையப்பட்ட 27 விமான சித்ர படத்துக்கு கலசாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் சு.சாந்தா, செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர்-பாணபுரீஸ்வரர் கோவில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருக்கல்யாண திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு கடந்த 25-ந் தேதி திருக் கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து விழா நாட்களில் சாமி வீதி உலா மற்றும் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவில் நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதையொட்டி ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை அம்மனுடன் காவிரி ஆறு பகவத் படித் துறையில் எழுந்தருளினார்.

    இதேபோல் பாணாதுறை பாணபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடந்தது. இதில் பாணபுரீஸ்வரர், சோமகலாம்பிகை அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் காவிரி ஆறு பகவத் படித் துறையில் எழுந்தருளினார்.

    இதைத்தொடர்ந்து ஆதிகும்பேஸ்வரர் கோவில் மற்றும் பாணபுரீஸ்வரர் கோவில் அஸ்திரதேவர்களுக்கு பால், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாணபுரீஸ்வரர் கோவிலில் 45 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 
    ×