என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actor Mansoor ali khan"

    • ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து கடிதம்.
    • மீண்டும் தாய் கழகத்தில் இணைய உள்ளேன்.

    நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார்.

    சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகையுடன் நடிகர் மன்சூர் அலிகான் இன்று சந்தித்து பேசினார்.

    அப்போது, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து மன்சூர் அலிகான் கூறுகையில், " முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன். மீண்டும் தாய் கழகத்தில் இணைய உள்ளேன்.

    இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை காங்கிரசுடன் இணைக்க முடிவு செய்துள்ளேன்" என்றார்.

    • அலிகான் துக்ளகிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • ஜாமின் மனுவை விசாரித்த அம்பத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் போதைப் பொருள் வழக்கில் கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்டார்.

    போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக போலீசார் 2 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து அலிகான் துக்ளகிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து, ஜாமின் கோரி அம்பத்தூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த அம்பத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக், ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    நாளை இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    8 வழி சாலைக்கு எதிராக பேசிய வழக்கு தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலைய விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 3-ந் தேதி தும்பிப்பாடி மாரியம்மன் கோவில் அருகே விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நடிகர் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் 8 வழி பசுமை சாலையை எதிர்த்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி நடிகர் மன்சூர் அலிகானையும், பியூஸ் மானுசையும் தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர். 2 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகானும், பியூஸ் மானுசும் ஜாமீன் கேட்டு ஓமலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தும்பிப்பாடி விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் மன்சூர் அலிகான் பேசிய ஆடியோ பதிவை போலீசார் தாக்கல் செய்தனர்.

    இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை மாஜிஸ்திரேட்டு ரமேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதே நேரம் ஓமலூர் கோர்ட்டில் தினசரி காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையின் பேரில் பியூஸ் மானுசுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

    ×